Sunday, December 30, 2018

உண்டு உணர்க கண்டு தெளிக

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 29. சீவன்

பாடல் எண் : 3
உண்டு தெளிவன் றுரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்
பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்
கண்டு சிவன்உருக் கொள்வர் கருத்துளே .

உயிர்கட்கு முதற் காலத்திலே, `சிவனை அறியும் வாயில் உண்டு` எனக் கூறுதற்கு அவனைத் தம்முன்னே கொண்டு யோகம் பயில்கின்ற குணம் இல்லவிட்டாலும் பின்பு அக்குணத்தை அடைந்து தம்முன்னே கொண்டு யோகம் பயிலும். ஆகவே, உயிர்கட்கு என்றாயினும் ஒருநாள் சிவனைத் தெளிவாக உணரும் உணர்வு உண்டாகவே செய்யும்.

Practise Yoga in Perseverence

You may not for Yoga inclined be,
But if your Guru Illumined teaches you,
You may yet accomplish it;
And so persevere
In lives several;
And seeing you thus practise,
Siva`s Form will in your thought arise.

Saturday, December 29, 2018

Size of Soul

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 29. சீவன்

பாடல் எண் : 1
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிர மாயினால்
ஆவியின் கூறது நூறா யிரத்தொன்றே

உயிர் பருப்பொருளாகக் கருதிக்கொண்டு, `அதன் அகல, நீர், கன அளவுகள் எத்துணையன` என வினாவுவார்க்கு விடை கூறின், `பசுவின் மயிர்களில் ஒன்றை எடுத்து அதனைப் பல நூறாயிரங் கூறு செய்தால் அவற்றுள் ஒரு கூற்றின் அகல, நீள, கன அளவுகளே உயிரின் அகல, நீள, கன அளவுகள்` எனக் கூறலாம்.

Size of Soul

To speak of the size of Jiva
It is like this;
Split a cow`s hair soft
Into a hundred tiny parts;
And each part into a thousand parts divide;
The size of Jiva is that one of part
Of the one hundred thousand.

சீவனுள் சிவன், சிவனுள் சீவன்

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 28. புருடன்


பாடல் எண் : 4
அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுவற நின்ற கலப்ப துணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கு மாகித்
தணிவற நின்றனன் சராசரந் தானே .

முன் மந்திரத்தில், `உயிர் ஆலம் விதைபோலவும், சிவன் அவ்விதையில் அடங்கியுள்ள கிளை முதலியன போலவும் ஆதல் வேண்டும்` என்றது ஒருபுடை உவமையேயன்றி, முற்றுவமை யன்று. மற்று, உண்மை நிலையாது` எனின், `உயிர் மேல்; சிவன் உள்` என்றாயினும், `சிவன்மேல்; உயிர் உள்` என்றாயினும் ஒருபடித்தாக வரையறுத்தல் கூடாதபடி, புறவேற்றுமையே யன்றி, அகவேற்றுமை தானும் இன்றி ஒன்றி நிற்கின்ற கலப்பே உண்மை நிலையாகும். இவ்வுண்மையை உணர்வார் ஒருவரும் இல்லை. இனித் தன்னொப் பில்லாத் தனிப்பெரும் பொருளாகிய சிவன் எல்லாப்பொருளிலும் ஒரு படித்தாக நீக்கமின்றி நிறைந்து நிற்கின் இயங்குவனவும், நிற்பனவு மாய்க் காணப்படுகின்ற உயிர்கள் பலவும் அவனிடத்தில் தத்தமக்கு இயலும் முறையில் கலந்து நிற்கின்றன.

Jiva and Siva Commingling Stand

He within the atom (Jiva),
And the atom (Jiva) within Him
Commingling stand,
They know this not;
The peerless Lord pervades all
Unintermittent, in creation entire.
May well driven be;
Seek the Divine way,
The Dancing Lord shows you.

Friday, December 28, 2018

ஆலின் விதைபோல ஆன்மா

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 28. புருடன்

பாடல் எண் : 3
படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஓட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே .

சிவனது திருவருளாகிய ஒளியினை ஆன்மா, பல கிளைகளும் விழுதுகளுமாய் விரிவடையும் ஆற்றலைத் தன்னுள்ளே அடக்கியிருக்கும் ஆலம் விதைபோலத் தன்னுள் அடக்குமாற்றால் தன்னை அச்சிவத்திற்கு ஏற்ற தூய இடமாகச் செய்யுமானால், அந்தத் திருவருள் ஒளி துணையாக, துன்பத்தையே தனது இயல்பாகக் கொண்ட ஆணவமாகிய இருளை ஓட்டி, அம்பலத்தில் ஞான நடனத்தைச் செய்கின்ற அப்பெருமான் தரக் கருதும் நல்வழியைத் தான் உணரும் வாய்ப்பு உண்டாகும்.

Seek the Jnana Way of Lord

Tiny unto the seed
Of the spreading banyan tree
Is the atom that is Jiva;
If by fire of Jnana
Your way purifies,
The dark Pasas that malign you
May well driven be;
Seek the Divine way,
The Dancing Lord shows you.

Thursday, December 27, 2018

அணுவில் அணுவானவன்

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 28. புருடன்

பாடல் எண் : 2
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்(டு)
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்(கு)
அணுவில் அணுவை அணுகலும் ஆமே .

ஆணவ பந்தத்தால் தனது வியாபக நிலையை இழந்து அணுத்தன்மை எய்த நிற்கின்ற உயிரை அணுவிலும் பல கூற்றில் ஒரு கூற்றளவினதாகப் பாவித்து, `அணுவுக்கும் அணு` எனப்படுகின்ற நுண்ணியனாகிய சிவனை அணுக வல்லவர்கட்கே அவனை அடைதல் கூடும்.

Lord is Atom-Within-Atom

The Lord is the Beginning of all,
He is the Atom-within-the-atom;
Divide an atom within the atom,
Into parts one thousand,
They who can thus divide
That atom within the atom
May well near the Lord,
He, indeed, is the Atom-within-the-atom.

Friday, November 30, 2018

உள்ளத்துள்ளே ஒளிரும் சோதி ஈசன்

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்



பாடல் எண் : 13
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனைக் காலமும் ஏத்துமின் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி யதுவிரும் பாரே .

வீடாகிய முடிநிலைப் பயனாயும், அப்பயனுக்கு நேர்வாயிலாகிய ஞானமாயும், அந்த ஞானத்தை முதற்கண் கேள்வி யால் உணர்த்தும் முத்தமிழின் ஒலியாயும் உள்ள சிவபெருமானையே அறிஞர் எத்துணைக் காலமாயினும் ஒழியாது துதித்து நிற்பர். அங்ஙனம் துதிக்கின்ற துதியில் அவன் தன்னுள்ளே நெய்யைக் கொண்டிருத்தலால் தன்னைப் பருகுகின்றவர்கட்கு இனிக்கின்ற பால்போல அவன் இனிப்பான். ஆகவே அறிவில் இனிக்கின்ற அறிவாயுள்ள அவனை அறிவுடையோர் விரும்பாமல் இருப்பரோ?

Lord Stands as Ghee in Milk

He is Mukti, Jnana and Nada
That in the three branches of Tamil resound,
Thus they praise the Lord
Through time unending;
As the ghee within milk
The Pure One within them stands;
That Light they seek not, and love not.

சிவனை நினைவார்க்கு வினை இல்லை

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை


பாடல் எண் : 6
ஏறுடை யாய்இறை வாஎம் பிரான்என்று
நீறிடு வார்அடியார் நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை யண்ணல் இவரென்று
வேறணி வார்க்கு வினையில்லை தானே

இடபத்தை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனே! இறைவா! எங்கள் பெருமானே` என்று சிவனை எப் பொழுதும் துதித்து அவனது அருள் வடிவாகிய திருநீற்றை அன்புடன் அணிகின்றவர்கள் அவனுக்கு அடியராவார்கள், அவர்களை `இவர்களே நிலவுலகில் காணப்படுகின்ற தேவர்கள்` என்றும், `சிவபெருமான்` என்றும் கருதி அவரை மக்களின் வேறாக வைத்து வழிபடுகின்றவர்கட்கு அவரால் முன்பு செய்யப்பட்டுக் குவிந்து கிடக்கின்ற வினைகள் கெட்டொழிதல் உறுதி.

Siva Jnanis are Gods on Earth

``You, the Divine Bull ride,
My Lord, My God``
—Those who wear the holy ashes saying thus;
Verily are like Devas on earth;
They that worship them as the Lord Himself,
—Who the Ganga on His russet matted locks wears,
Will have their Karmas end consummated.

பாடிப் பணியுங்கள் பரமனை

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்

பாடல் எண் : 8
கூடியும் நின்றும் தொழுதெம் இறைவனைப்
பாடி உளேநின்று பாதம் பணிமின்கள்
ஆடி உளேநின் றறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது வாமே .

எங்கள் சிவபெருமானை அவன் அடியவரோடு கூடியும், தனித்தும், பாடியும், ஆடியும் வணங்குவதுடன் உள்ளத்திலே யும் அவனது திருவடிகளை நினைந்து அடிபணியுங்கள். ஏனெனில், உள்ளத்திலே நினைந்து பணிபவர்கட்குக் கன்றையீன்ற பசு அக் கன்றைவிட்டுப் பிரியாதது போலக் கரவாது விளங்கி அருள் செய்வான்.

Lord Yearns After Devotees

Praise Our Lord
In devotion congregational;
Sing His praise within,
And at His Feet adore;
Dance within and know Him;
Then He yearns after you,
Like the cow after its calf.

Thursday, November 29, 2018

தீதும் நன்றும் அவன் அருள் ஆகும்

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்


பாடல் எண் : 6
போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறி வானுளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே .

நீவிர் போகின்ற போக்கிலே உங்களைப் போக விட்டுத் தானும், அப்போக்கிற்குத் துணையாய் உடன் வருகின்ற முதற்பொருள் சிவனே. அவன் அவ்வாறு விடுதலும், உடன் புகுதலும் நீவிர் உண்மையை உணர்தற்கு உரிய காலம் வருவதை அறிதற்காகவே யாம். ஆகையால், வாழ்கின்ற பொழுது மட்டுமின்றிச் சாகின்ற பொழுதும் அவனை நினையுங்கள். ஏனெனில், அவனே பிறவியாகிய கடலுக்கு அப்பால் உள்ள கரையாவான்.

Lord is Your Redemption

The Lord who enters into you
And walks with you in the life
Knows sure when you in holiness ripen;
Seek the Lord
Even on the eve of your death;
He will your Redemption be
For the life to be.

Tuesday, November 27, 2018

இருக்கின்ற போது இறைவனை எண்ணுக

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்

பாடல் எண் : 7
பறக்கின்ற ஒன்று பயன்உற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன் றிலாமையும் பேருல காமே

கூட்டில் சிறிது போது தங்கியிருந்து பின்பு இரையை நாடி அக்கூட்டைவிட்டுப் பறந்து போகின்ற பறவையைப் போல உடம்பில் சிறிது காலம் வாழ்ந்து பின்பு அவ்வாழ்வினும் வேறான பயனை நாடி அவ்வுடம்பை விட்டு ஓடுகின்ற உயிர், உண்மையாகவே தான் அடையத்தக்க பயனை அடைய வேண்டின் உடம்பை விட்டுப் பிரிகின்ற காலத்திலும் சிவனை மறவாமல் நினைக்கும். அவ்வாறு நினைத்தால் எல்லாச் சிறப்பினும் மேம்பட்ட சிறப்பாகிய, சிவ ஞானத்தின்வழி சிவகதியைச் சேரும் இனி அச்சிவகதிதான், ஏனையுலகங்கள் எல்லாவற்றையும் விடப் பெரியதாகிய உலகமும், அதனையும் கடந்த நிலைமையும் ஆகும்.

Think of Lord like Your Last Days

If your fleeting life
Is its good goal to attain,
Even on death-bed
Think of the Lord;
Then will follow Siva`s grace,
No more birth will be;
The heavenly world will yours be.

Wednesday, October 31, 2018

தூங்காமல் தூங்கும் நிலை

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை

பாடல் எண் : 7
இளைக்கின்ற வாறறிந் தின்னுயிர் வைத்த
கிளைக்கொன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
அளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கின்
துளைக்கொண்ட தவ்வழி தூங்கும் படைத்தே .

இன்பத்தை நுகர்ந்து இனிதே வாழ்தற்கு உரியன வாகிய உயிர்கள் அவ்வாறின்றித் துன்பத்திற் கிடந்து துயர் உறுதலை அறிந்து அவை அத்துன்பத்தினின்றும் நீங்குதற்குரிய வழியை அமைத்துக் கொடுத்து, அதனாலே உறவாதற்குப் பொருந்தியவன் தானேயாய் நிற்கின்ற இறைவனைப் புகழ்ந்து போற்றி அதனால் தானும் என்றும் அழியாப் புகழைப் பெறுகின்ற அறிவன், ஐம்பொறிக ளாகிய பாம்புகள் ஐந்தும் தாம் படம் எடுத்து ஆடுகின்ற ஆட்டத்தை விடுத்துத் தமது புற்றிலே சென்று அடங்கிக் கிடக்கும்படி அடக்கி விடுவானாயின், அதன்பின், அவனும் துளையை உடைய அந்தப் புற்றுவழியாகவே இன்பம் பெற்று அமைதியை அடைவான்.

Control the Serpentine Thought in the Yoga Way of Kundalini

Knowing well how spent away you are
The Lord comes to dwell in the body
For the soul to lean on;
And He of blemishless fame
To subdue the five-headed serpent
That in Pasa coiled lay,
Provides the fluted Sushumna That central stands.

மனம் போல மனித வாழ்வு

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை

பாடல் எண் : 6
பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவ துள்ளம்
பெருக்கிற் பெருக்கும் சுருக்கிற் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே .

`உலகம் நிலையற்றது` என்பதைக் கூறும் நூல்களைப் பலவாக எடுத்துச் சொல்லி, அவற்றின் பொருளையும் பலவாறாக விளக்கிப் பேசினாலும், `உலகம் கானல் போல்வது` என்பதைக் கல்வியளவிலும் கேள்வியளவிலும் உணர்ந்தாலும் அவை யெல்லாம் இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாவன அல்ல. ஏனெனில், நிலையாதவற்றின்மேல் அவாக்கொண்டு ஓடி அவற்றுள் முன்னர் ஒன்றைப் பற்றிக் கிடந்து, பின்பு அதனை விட்டு மற் றொன்றின்மேல் தாவி அதனைப் பற்றிக்கிடந்து இவ்வாறு முடிவின்றிச் செல்வது மனமே. அதனால் அஃது அவ்வாறு முடிவின்றி ஓட விட்டால், அது புலனுணர்வை முடிவின்றித் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும். மனத்தை ஓடவிடாது நிறுத்திவிட்டால், புலன் உணர்வின் தோற்றமும் இல்லையாய் விடும். ஆகையால் மனத்தை யடக்குதலே இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாகும். `இந்திரியங்களை அடக்குமாறு எவ்வாறு` என ஆராய்பவர்க்கு அறிய வேண்டிய பொருளாயிருப்பது அவ்வளவே.

Control of Thoughts is the Key to Control of Senses

Why drivel at length?
Why the mirage think of?
The thought is the seed
Of things all;
Expand your thought
The things too expand;
Contract your thought;
That is all there is to it,
For those who think about it.

Tuesday, October 30, 2018

ஐந்தெழுத்து இறைவன் அருட் கோடை

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை


பாடல் எண் : 5
ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே

இந்திரியங்களாகிய யானைகள் ஐந்தும் மதம் பிடித்துத் திரியாமல் ஆன்ம அறிவாகிய கூடத்திற்குள்ளே அடங்கி யிருக்குமாயின் அதுவே அறம், தவம், இறையுலகப் பேறு, ஞானம் எல்லாமாம்.

Sublimation is the Way to Grace

If the senses Five you sublimate
Then all worlds are yours;
That is tapas rare;
That is the Lord`s Feet too;
That indeed is the way to Grace receive.

அடங்கா மனம் அல்லல் தரும்

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை


பாடல் எண் : 4
முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே .

ஐந்திந்திரியங்களாகிய மத யானைகள் தறியில் கட்டுண்ணாது பிளிறிக்கொண்டு தாம் நினைத்தபடி செல்லும் இயல் புடையன. அதையறிந்து நான் அவைகளை அடக்கி நேரிய வழியில் செலுத்துதற் பொருட்டு ஞானமாகிய அங்குசத்தைப் பயன் படுத்தினேன். எனினும் அவைகள் அதையும் மீறித் தம் விருப்பப்படி ஓடித் தமக்கு விருப்பமான உணவை அளவு கடந்து உண்டு, அதனால் மேலும் மதம் மிகுந்து தீய குணத்தை மிக அடைந்து என்னை நிலைகுலையச் செய்யுமாறு பெரிது.

புலனடக்கம் உயிர் வளர்க்கும்

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை

பாடல் எண் : 2
கிடக்கும் உடலில் கிளர்இந் திரியம்
அடக்க லுறுமவன் றானே அமரன்
விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை
நடக்கில் நடக்கும் நடக்கு மளவே .

நாம் நடத்தினால் நடந்து, கிடத்தினால் கிடப் பதாகிய உடம்பை நம் விருப்பத்தின் படியே நடத்திட ஒட்டாது, அதினின்றும் எழுகின்ற ஐந்து இந்திரியங்களும் கிளர்ச்சி செய் கின்றன. அக்கிளர்ச்சியை அடக்குபவனே மனிதருள் தேவனாவான். அவ்வாறின்றி, அக்கிளர்ச்சியின் வழிப்பட்டு நமது உடம்பாகிய ஒரு மாமிச பிண்டத்துடன் இன்னொரு மாமிச பிண்டத்தை அணைத்து இன்பம் அடைய விரும்புவனவாய் உள்ளன தமது மனங்கள். அந்த மனத்தின் வழியே நாம் நடந்து கொண்டிருந்தால் நமது உடம்புகள் அவற்றிற்கு வரையறுத்த நாள் வரையில் நடந்து பின்பு வீழ்ந்துவிடும்.

Control Senses and Become Immortal

The stirring Indriyas within the body dwell,
He who controls them is immortal verily;
If your thoughts seek the pleasure twain—
Food and sex,
Only that far will they last,
Until your breath lasts.

Thursday, September 27, 2018

பிரித்தியாகாரத்தின் பயன் என்ன

பத்தாம் திருமுறை

மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்

பாடல் எண் : 10
குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரனு மாமே  .

பிரத்தியாகாரத்தை மனப்பயிற்சி அளவில் செய்தால், கால வரையறை இடவரையறைகள் இன்றி, எல்லா வற்றையும் ஒருங்கே உணரத்தக்க யோகக் காட்சியைப் பெறுதலே அதற்குப் பயனாய் முடியும். அதனை அஞ்ஞான இருள் நீங்கி இறைவனை உணரும் கருத்தோடு செய்யின், தான் இறைவனை உணர்தலேயன்றிப் பிறரையும் உணரச் செய்கின்ற கடவுள் தன்மையையும் உடையவனாகலாம்.

In the act of Pratyahara
All the world will be visioned;
Be rid of the despicable darkness
And seek the Lord,
If your thoughts be centred firm
You shall Divine Light see
And immortal thereafter be.

தாரணை என்பது என்ன

பத்தாம் திருமுறை

மூன்றாம் தந்திரம் - 7. தாரணை

பாடல் எண் : 1
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தான்நோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே  .

கோணுதல் (புலன்வழி ஓடுதல்) உடையதாய் இருந்த மனம், பிரத்தியாகாரத்தில் அதனை விடுத்து ஒருவழிப் பட, அதனை அவ்வழியில் முன்போல மீளாதவாறு குறிக் கொண்டு தடுத்து, சுழுமுனை வழியாக மேலே செல்கின்ற வாயுவே பற்றுக்கோடாக மேற்செலுத்தி, ஆஞ்ஞையை அடையு மாற்றால் அவ்விடத்திலே செய்யும் தியானத்தால் ஐம்பொறிகள் செயலற்றிருக்கும் நிலையை எய்தினவர்கட்கு, அந்நிலைதானே பிறவி வரும் வழியை அடைக்கின்ற உபாயமாகிவிடும்.

Control the mind from getting diverted towards the senses
Concentrate on the Chidakasa within the spinal column,
The eyes must not see nor the ears hear,
This is the way to life eternal.

தாரணை வாழ்நாளை நீட்டிக்கும்

பத்தாம் திருமுறை

மூன்றாம் தந்திரம் - 7. தாரணை

பாடல் எண் : 5
கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே .

காலத்தால் கலந்திடப்பட்ட உயிருடன் அக்காலம் கலந்து நிற்கும் இயல்பை ஆராய்ந்து அறியின், அது பிராண வாயுவின் திட்பமேயாம். ஆகவே, அந்த உயிர் பிராண வாயுவை அடக்கும் முறையை அறிந்துகொள்ளுமாயின், உயிர் நிற்பது போலவே அதனைக் கலந்து நிற்கின்ற காலமும் ஓடாது ஒரு நிலையாய் நிற்கும்.

When Pranayama is in proper time-measure practised
Breath retention will appropriate with Prana stand;
He who trains breath that is Prana,
With him shall Time and Life inseparate remain.

குண்டலினி எப்பொழுது உச்சிக்கு செல்லும்

பத்தாம் திருமுறை

மூன்றாம் தந்திரம் - 8. தியானம்

பாடல் எண் : 2
கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே

கண் முதலிய பொறியறிவின் சேர்க்கையால் நம்மைப் பண்படுத்தி நின்ற முதற்பொருள் ஒன்று உளது. அஃது, எல்லையற்ற பேரொளியாயினும், அதனை நாம் உள் நாக்கினை ஒட்டி உள்ள சிறிய துளை வழியில் சென்று காண்கின்ற ஒரு சிற்றொளியாகத் தரிசிக்கச் செய்தவாற்றால், `பாம்பு` எனப்படுகின்ற குண்டலி சத்தி நம்மை உய்வித்தது வியக்கத்தக்கது.

Through eye,
tongue,
nose and ear
And the organ Intellect
There is an Ancient One that pervades as Nada,
Inside the palatal cavity
He shows the Cosmic Light;
He gave the fleshy body,
That we redeemed be.

Sunday, September 2, 2018

பொய்யே உன்னைப் புகழ்வார்

திருமுறை 7.41 திருக்கச்சூர் ஆலக்கோயி.ல்


பாடல் எண் : 1
முதுவாய் ஓரி கதற முதுகாட்
டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

பெரிய வாயை உடைய நரிகள் கூப்பிடப் புறங் காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே , கொன்றையினது தேன் ஒழுகுகின்ற புதிய பூவைச் சூடுகின்ற , மலையான் மகள் மணவாளனே , திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , நீ சென்று , முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் கவலைகொள்ளாரோ ?

பாடல் எண் : 2
கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை யறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் மில்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

எங்கள் பெருமானே , இருவகை ஏழ் பிறப்புக் களிலும் என்னை ஆளாகக் கொண்டு ஆள்பவனே , திருக்கச்சூரின் வட பகுதிக்கண் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற அச்சம் இல்லாத பெருமானே , நீ , அழகிய பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி , கழலும் சிலம்பும் காலில் நின்று ஒலிக்க , பிச்சைக் கென்று , ஞாயிறு உச்சம் ஆகவும் ஊர்தோறும் திரிதலைக் கண்டால் , உன் அடியவர் மனம் உருகமாட்டாரோ ! உன் விருப்பம் இன்னது என்பதனை யாம் அறிய மாட்டோம் .

பாடல் எண் : 3
சாலக் கோயில் உளநின் கோயில்
அவைஎன் தலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்
வானோ ரறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
அறங்க ளுரைத்த அம்மானே.

தேவரும் அறிய ஒண்ணாத நிலையையுடையவனே , அழகுடையதும் , குறைவில்லாததும் ஆகிய , குளிர்ந்த அழகிய திருக்கச்சூர் வடபால் ஆலக்கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற , கல்லால் நிழற்கீழ் நால்வர் முனிவர்க்கு அறங்களை உரைத்த பெருமானே , உனது கோயிலாகப் பல கோயில்கள் இம் மண்ணில் உள்ளன ; அவற்றை யெல்லாம் என்தலைமேல் வைத்துப் புகழ்ந்து , மயக்கமுந் தீர்ந்தேன் ; வினையையும் ஓட்டினேன் ; இங்குள்ள கோயிலைப் புகழ்ந்து , நீ இரந்து சோறிடப்பெற்றேன் .

பாடல் எண் : 4
விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்
மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்
கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்
பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

இடப வாகனத்தையும் , இடபக்கொடியையும் , சடை முடியையும் உடையவனே , திருமேனியினது மின்னல்போலும் ஒளியையுடையவனே , எங்கும் , அழகியவாயில்களையும் , நிறைந்த மணிமண்டபங்களையும் , அழிவில்லாத மாடங்களையும் கொண்டு , சூழ உள்ள இடங்களிலும் சோலைகளையும் , நீர் நிலைகளையும் பெற்று விளங்குதலால் , தாமரைமேல் இருக்கும் பெருமை வாய்ந்த திருமகள் நீங்காது பற்றி உறைகின்ற , வயல்களையுடைய பண்ணை சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள , ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெரு மானே , இஃது உன்கருணை இருந்தவாறேயோ !

பாடல் எண் : 5
மேலை விதியே விதியின் பயனே
விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவே னடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

மேம்பட்டதாகிய அறநெறியாயும் , அதன் பயனாயும் உள்ளவனே , பகைவரது திரிபுரங்களை எரித்தவனே , காலையில் எழுந்து உன்னை வணங்குவாரது மனக்கவலையை அடியோடு நீக்குபவனே , நீலகண்டத்தை யுடையவனே , மாலைக் காலத்தில் தோன்றும் சந்திரன்போல்பவனே , மலைமேல் இருக்கின்ற மருந்து போல்பவனே , வயல்கள் நிறைந்த , கரும்பாலையை உடைய இடங்களைக் கொண்ட பண்ணையை உடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , அடியேன் உன்னை மறவேன்

பாடல் எண் : 6
பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்றும்
இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் உருகாரே
அறவே யொழியாய் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

பிறவாதவனே , இறவாதவனே , யாதொன்றையும் விரும்பாதவனே , மூப்படையாதவனே , இடபத்தை ஏறிப் பேயாற் சூழப்படுதலை விடாதவனே , மறதி இல்லாதவனே , என்றும் சுடு காட்டையே இடமாகக்கொண்டு நடனம் ஆடுபவனே , திருக்கச்சூரில் வடபால் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , நீ , உடைந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் , உன் அடியவர் மனம் வருந்தமாட்டாரோ ? இதனை அறவே ஒழி .

பாடல் எண் : 7
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
நினைவா ரவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா
கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

மை பொருந்திய பெரிய கண்களையுடைய மங்கை பங்காளனே , கங்கையையும் , ஆத்திப் பூவையும் , சந்திரனையும் சடையில் வைத்துள்ள தலைவனே , செம்மைநிறம் உடையவனே , வெண்மைநிறம் உடையவனே , திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , உன்னைப் புகழ்கின்றவர்கள் பொய்யாகவே புகழ்ந்தாலும் , அதனையும் மெய்யாகவே கொண்டு அருள்செய்கின்றவனே , எங்கள் பெருமானாகிய உன்னை மெய்யாகவே நினைக்கின்ற அடியவரை நீ நினை .

பாடல் எண் : 8
ஊனைப் பெருக்கி உன்னை நினையா
தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்
கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி
மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
ஆலக் கோயில் அம்மானே.

காட்டில் உள்ள கொன்றை மலர் , மணங் கமழ மலரும் புதுமணம் வீசுதலை உடையவனே , மானை நிகர்த்த இளைய மெல்லிய பார்வையை யுடையவளாகிய உமையவள் அஞ்சும்படி போர்த்துள்ள யானைத்தோலை உடையவனே , உயிர்களுக்கு ஞானக்கண்ணாய் விளங்குபவனே , திருக்கச்சூரில் உள்ளவனே , ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , கீழ்மையுடையேனும் , அறிவில்லாதேனும் ஆகிய யான் , உடம்பை வளர்க்கும் செயலில் நின்று , உன்னை நினையாது விட்டேன் .

பாடல் எண் : 9
காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயங் கொள்ளல் அழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

உமையம்மைக்குக் கணவனே , உனது தன்மைகளைப் பெரியோர் சொல்ல அறிந்து உன்னை மறவாதேனாகிய என்னையும் அடியாருள் வைத்து ஆள்கின்றவனே , விளைதலை யுடைய கழனிகளையுடைய பண்ணையையுடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , உன் பால் பேரன்புகொண்டு , அதனால் இன்பம்மீதூரப்பெற்று , தம்மை யறியாது வரும் சொற்களைச் சொல்லி , மணம்பொருந்திய மலர்களைத் தூவி உன்னைப் போற்றி செய்து உயர்வடைகின்ற அடியவர்கள் உனக்கு வேண்டும் பணிகளைச் செய்ய அவாவியிருக்க , நீ சென்று பிச்சை ஏற்பது அழகிதாமோ ? ஆகாதன்றே ?

பாடல் எண் : 10
அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னு மனத்தா ரூரன்
ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லா
ரவர்என் தலைமேற் பயில்வாரே.

அன்னங்கள் நிலைத்து வாழும் வயல்கள் சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவனது கருணையையே நினைகின்ற மனத்தினால் , ` ஆரூரன் ` என்று , திருவாரூர் இறைவனது பெயரைத் தலையில் வைத்துள்ள மிக்க புலமையுடையவனும் , செவ்விய சொல்லால் அமைந்த பாடல்களைப் பாடவல்ல நாவன்மையுடையவனும் , வயல்களை உடைய திருநாவலூருக்குத் தலைவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய , தமிழ் இலக்கணம் அமைந்த இப்பாமாலையைப் பாட வல்லவர் , என் தலைமேல் எப்பொழுதும் இருத்தற்கு உரியராவர் .

Civaṉ who dances holding fire in the cremation ground when the old aged jackal roars.
the husband of the daughter of the mountain, who wears fresh flowers of koṉṟai which are full of honey.
will not your devotees be worried in mind when they see you receiving alms in a broken skull.
is this the nature of your grace?
the god who is in Ālakkōyil on the northern side of Kaccūr!
Kaccūr in the name of the place and Ālakkōyil is the name of the temple.

our Lord in the temple on the northern side of Kaccūr which does not know fear.
our Lord.
you admitted me as your protege in all the two kinds of seven births.
having tied in the waist as a girdle a beautiful cobra.
the ornaments, kaḻal and anklet, to produce a sound.
at the time when it is noon, to collect alms.
will not the hearts of devotees melt when they see you wandering from place to place.
we do not know your desire.

Lord who has the state which could not be known even by the celestials.
the beautiful temple.
the temple that has no deficiency.
the god who expressed distinctly moral instruction under the shade of the banyan tree in ālakkōyil on the northern side of kaccūr which is cool and beautiful!
there are many temples dedicated to you in this earth.
praising them placing them on my head.
I was free from delusion.
I drove out all my acts.

Civaṉ who has a vehicle of a bull and a flag on which the form of a bull is drawn, and caṭai!
God who has a body whose lustre is like the lightning!
having beautiful entrances, beautiful pavilions and storeys which do not know destruction, everywhere as it is surrounded by gardens and water reservoirs in the adjoining places.
the god in ālakkōyil in Kaccūr which has tanks and fields, where the god of wealth who is seated on a lotus flower, never leaving that place!

the fate predestined!
the fruits of the fate!
you burnt the three cities of the enemies!
god who has a black neck!
who is like the moon that rises in the evening.
who is like the herb used as a medicine and which grows on the mountain.
the god who is in ālakkōyil in Kaccūr which has tanks and places where there are sugar mills surrounded by fields!
I, you slave, will not forget you.
you remove the worries of those who rise up in the morning and worship you.

you are not born.
you do not die.
you do not desire anything.
you do not become aged.
riding on a bull.
you do not leave being surrounded by pēys.
you have no forgetfulness.
you dance always having as the stage the cremation ground.
the god in ālakkōyil on the northern side of Kaccūr!
will not the hearts of devotees melt when they see you receiving alms in a skull with a broken edge!
completely give up begging alms.

Civaṉ who accept as even truth if people praise you insincerely our Lord!
you remember and grant your grace to those who sincerely remember you.
God who has as a half a lady who has large eyes coated with collyrium.
the master who placed a crescent with two ends on the caṭai.
one who is red in colour.
one who is white in colour.
the god in ālakkōyil in Kaccūr!

Civaṉ who wears koṉṟai growing in the forest, which blossoms and spreads its fresh fragrance!
you who covered with the elephant`s skin your body to frighten the beautiful lady who has eyes which resemble the eyes of the deer
you who are the eye of wisdom to living beings!
the god in ālakkōyil the name of the place is not mentioned in this verse increasing the size of the body.
I completely forgot you.
I who am low.
have no intelligence.

the husband of Umayāḷ Having learnt about your greatness from great people, I will not forget you;
please admit me also among the group of your devotees.
prattling your names out of joy being warmly attached to you.
placing big and fragrant flowers at your feet.
and praising you.
when there are devotees who want to raise themselves are ready to do any service required by you.
is it fine to receive alms!
god in ālakkōyil in Kaccūr which has tanks and fields which are flourishing.

about the god in ālakkōyil in Kāccūr surrounded by fields in which swams stay permanently.
ārūraṉ who always thinks about the grace of that god.
the erudite scholar who placed the name of the god in ārūr on his head as a mark of esteem.
the chief of the residents of nāvalūr which has fields.
who speaks words in their primary significance.
who has the title of vaṉṟoṇṭaṉ those who are able to sing the garland of verses done according to tamiḻ grammar by him have the right to be seated on.
our head always.


http://temple.dinamalar.com/en/new_en.php?id=260


Friday, August 31, 2018

தலை முதல் கால் வரை

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 13
நாலுள்நல்ஈ சானம் நடுவுச்சி தானாகும்
தாணுவின் றன்முகந் தற்புரு டம்மாகும்
காணும்அ கோரம் இருதயம் குய்யமாம்
மாணுறு வாமம் ஆம் சத்திநற் பாதமே .

கிழக்கு முதலிய நான்கு திசைகளில் உள்ள முகங்கட்கு நடுவேயுள்ள முகமாய் நிற்கின்ற `ஈசானம்` என்னும் சத்தி சதாசிவனுக்கு அந்த முகமாய் நிற்றலேயன்றி, நடுத்தலையாகியும் நிற்கும். அவ்வாறே ஏனைய, `தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோ சாதம்` என்னும் முகமாய் நிற்கின்ற சத்திகளும் அம்முகங்க ளாதலேயன்றிச் சதாசிவனது `முகம், இருதயம், குய்யம், பாதம்` என்னும் அவ்வுறுப்புக்களாயும் நிற்கும்.

How Sakti dwells in the Five faces of Sadasiva

In the shining Isana face is Sakti`s Crown;
In the Tatpurusha face is Her Visage
In the Aghora is Her Heart and Waist;
In the Vama face are Her Feet blessed.

அன்னை முகம் ஐந்து

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 12
சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி
பச்சிமம் பூருவம் தற்புரு டன்உரை
தெற்கில் அகோரம் வடகிழக் கீசனே .

சிவனது சத்தி ஒன்றே ஐந்தாகி அவனுக்கு மேற் கூறிய பக்கங்கள் ஐந்திலும் உள்ள ஐந்து முகங்களாய் நிற்கும். அதனால் அம்முகங்களின் பெயரானே அச்சத்திகளும் குறிக்கப்படும்.

Names of the Five Faces of Sadasiva

To recount the Five Faces where His Grace abounds
Thus it is:
The Northward Face is Vama
The Westward Face is Sadyojata
The Eastward Face is Tatpurusha
The Southward Face is Aghora
The Upward Face is Isana.

கூறுமின் நூறு போற்றிகள் நாளும்

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 10
கூறுமின் நூறு சதாசிவன் எம்மிறை
வேறுரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்
ஏறுரை செய்தொல் வானவர் தம்மொடும்
மாறுசெய் வான்என் மனம்புகுந் தானே

சதாசிவனாய் நிற்பவனைத் துதியாது வேறு சொற்களைச் சொல்லிக் காலம் போக்குபவரும், அந்தச் சதாசிவமூர்த்தி அவரவர்க்கு ஏற்புடைத்தாக அளித்து ஏவுகின்ற தொழில்களைச் செய் பவரும் ஆகிய வானவரது நெறியோடு எனது நெறிமாறுகொளச் செய்தற் பொருட்டு அவன் எனது நெஞ்சத்தில் புகுந்தான். ஆதலின் அவனே நாம் வழிபடும் கடவுளாயினான். (என்வழி நிற்பீராயின்) நீங்களும் அவனது திருப்பெயர்கள் பலவற்றையும் கூறி அவனை வழிபடுங்கள்.

Sadasiva is Our Lord

``Sadasiva is our Lord``—
Say this times hundred;
Anything else you try to say,
He will still be beyond it;
He suffers not those Gods
Who themselves exalt;
He, who my heart entered.

uruvai aruvai engum ulathai

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 9
தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவ மெல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவ மாகும் சதாசிவந் தானே .

`தத்துவம்` எனப்படுவன காரியப் பொருள்கள் அனைத்திற்கும் மூலங்கள் ஆதலின், அவையே `சரம், அசரம்` என்னும் இருதிறப் பொருளாயும் பரிணமிக்கும். தத்துவங்கள் யாவும் உயிர்கட்குத் துன்பம் நீங்கி, இன்பம் தோன்றுதற் பொருட்டே உள்ளனவாம், இவ்வாறு அனைத்துப் பொருளுமாய் நிற்கின்ற அனைத்துத் தத்துவங்களும் ஆவது சதாசிவலிங்கம்.

Sadasiva is Tattva (Truth) Real

Formless is the Tattva primal
Formed, it is the world, animate and inanimate;
A source of pleasure then indeed it is;
Tattva is all and pervasive,
Sadasiva is Tattva (Truth) Real.

sakthi sivam sadasivam

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 8
சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவம்மிக்க தாபர சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவம்தத் துவம்முப்பத் தாறே .

அண்டலிங்கத்துள் பூமி பீடமாயும், வானம் பீடத்தின்மேல் உள்ள இலிங்கமாயும் அமையும். (எனவே, சதாசிவ லிங்கத்துள் பீடத்தில் பூமியும், இலிங்கத்துள் வானமும் அடங்கு வனவாம்.)
இனி இறைவன் உயிர்கள் பொருட்டுக் கொள்கின்ற `தாபரம், சங்கமம்` என்னும் இருவகை வடிவங்களுள் தாபரம் சிவக்கூறும், சங்கமம் சத்திக்கூறும் ஆகும். (தாபரம் - பெயர்ந்து நிற்பன; திருவுருப் படிமங்கள். சங்கமம் - உலாவுவன; அடியார்கள்.)
இறைவன் கொள்கின்ற திருமேனிகளில் உருவத் திரு மேனிகள் சத்திக் கூறும், அருவத் திருமேனிகள் சிவக்கூறும் ஆகும்.

Sakti is the Kinetic and Siva the potential

Aspects of God-head
Sakti is this wide world
Sakti is this universe vast
Sakti-Siva conjoint is the Kinetic and Potential
Sakti is the Formed;
Siva the Formless;
Sakti-Siva Tattvas are six and thirty true.

ainthumugamaana porul

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 6
நடுவு கிழக்குத் தெற்குஉத் தரம்மேற்கு
நடுவு படிகம்நற் குங்கும வன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற் கருளிய முகம்இவை அஞ்சே .


இவ்வதிகாரத்து முதல் மந்திரத்துள், `சதாசிவ லிங்கத்திற்கு ஐந்து முகங்கள் உள்ளன எனக் கூறிய முகங்கள் ஒரு வரிசையில் இல்லாமல், நடுவு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு` என்னும் திசைகளில் பொருந்தியுள்ளன.
அவற்றுள் நடுவண் உள்ள முகம் படிகம் போன்ற நிறத்தையும், கிழக்கில் உள்ள முகம் குங்குமம் போன்ற நிறத்தையும், வடக்கில் உள்ள முகம் செவ்வரத்தம் பூப்போன்ற நிறத்தையும் மேற்கில் உள்ள முகம் பால்போன்ற நிறத்தையும் உடையன.
(கிழக்கில் உள்ள முகம் பொன் போன்ற நிறத்தை யுடையதாகச் சொல்லப்படுதலால், இங்கு, ``குங்குமம்`` என்பதற்கு, `கலவைச்சாந்து` எனப்பொருள் கொள்ளுதல் பொருந்தும்.)
இந்த ஐந்து முகங்களுடன் தோன்றியே சிவன் அடியேனுக்கு அருள்புரிந்தான்.

The Five Faces of Sadasiva and their Hues

Central, East, South, North and West
These the Five Faces of Sadasiva;
The Central Face is of crystal hue;
The Eastward Face is crimson unto Kum-Kum
The Southward Face is dark like thick pitch
The Northward Face is red like Aratham flower
The Westward Face is white like milky hue;
Thus did He reveal to me,
His lowly vassal.

samaya nyanamum saathira vedamum

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 4
அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே .


பத்துத் திசைகளாய் அமைந்த அந்த உலகத்துள்ளே தான் வேதங்களின் ஆறு அங்கங்களும், அந்த அங்கங்கட்கு முதலாகிய நான்கு வேதங்களும், அந்த வேதங்களின் பொருளைச் சரியை முதலிய நான்கு பாதங்களாய் நின்று தெளிய உணர்த்துகின்ற சிவாகமங்களும் பொருந்தி நிற்கின்றன.

When Sakti further evolves

In that Space thus opened up
The Six Vedangas took their place;
In that Space thus opened up
The Four Vedas took their place;
In that Space thus opened up
The Four Paths beginning with Chariya
Took their place;
In that Space thus opened up
The Saiva Truth the Four Paths comprehended
Took its place.

sadasivame sagalamum aame

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 2
வேதா நெடுமால் உருத்திரன் மேல்ஈசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே .

சதாசிவந்தானே கீழ் நின்று ஒடுக்க முறையில் மேல் நோக்கி எண்ணப்படுகின்ற `அயன், மால், உருத்திரன், மகேசுரன்` என்னும் நால்வராயும், தனக்குமேல் முறையே நிற்கும் `விந்து, நாதம், சத்தி, சிவம்` என்னும் நால்வராயும் இருக்கும். அதனால் அனைத்து மூர்த்தங்கட்கும் இது பொது மூர்த்தமாகும்.

Sadasiva comprehends all Nine God-Forms

Brahma, Vishnu, Rudra, Mahesa,
And the Five-faced Lord above,
Bindu, Nada, Sakti Primal, and Siva
—All these are but Sadasiva in general.

sadasivalingam

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 1
கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும்
தேடும் முகம்ஐந்தும் செங்கயல் மூவைந்தும்
நாடும் சதாசிவ நல்லொளி முத்தே .

சதாசிவ வடிவம் இரண்டு திருவடி, பத்துக் கை, ஐந்து முகம், முகம் ஒன்றற்கு மூன்று கண்களாகப் பதினைந்துகண் இவற்றை உடையதாகும்.

Sadasiva form with Five Faces

His twin Feet are planted on earth below;
The ten hands, the holy in praise sing,
In directions all spread;
Five His Faces that are sought,
Five times three his eyes fiery;
Thus is Sadasiva that you seek
The Pearl that is lustrous, beyond, beyond compare.

pinda lingam

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்

பாடல் எண் : 1
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே .

மக்களது உடம்புகள் யாவும் சிவலிங்க வடிவம்; சிதாகாச வடிவம்; சதாசிவ வடிவம்; திருக்கூத்து வடிவம்.

Human form is Siva Linga

The Human Form is like Siva Lingam
The Human Form is like Chidambaram
The Human Form is like Sadasivam
The Human Form is like the Holy Dance, forsooth.

Monday, July 30, 2018

avaravarukku yetra siva vazhipaadu

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பாடல் எண் : 10
மறையவர் அற்சனை வண்படி கந்தான்
இறையவர் அற்சனை ஏய்பொன் னாகும்
குறைவில் வசியர்க்குக் கோமள மாகும்
துறையுடைச் சூத்திரர் சொல்வாண லிங்கமே .

Lingas for the Four Varnas

Of crystal made is Linga, Brahmins worship
Of gold, the Kings worship
Of emerald, the Vaisyas worship
Of stone is Linga, Sudras worship.

ivaiyum sivalingam seiya yetravai

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பாடல் எண் : 9
துன்றுந் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல்இர தம் சந்தம்
வன்றிறற் செங்கல் வடிவுடை வில்வம் பொன்
தென்றிருக் கொட்டை தெளிசிவ லிங்கமே .

மேற்கூறிய முத்து முதலியனவேயன்றித் தயிர் முதலியனவும் இலிங்கம் ஆதற்குரிய மூலப்பொருள்களாகும். அவற்றுள் ஒன்றைத் தெரிந்தெடுத்துக்கொள்க.

How Linga is shaped

Curd, ghee, milk and wax pure
Copper, mercury, fire and conch
Bricks hard, Bilva shapely
And Konrai bloom of golden hue
From these do you shape
The Linga`s Form Divine.

sivalingam seiga ithil

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பாடல் எண் : 8
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக் கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன்றன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்ததன் சாதனம் பூமணல் லிங்கமே .

முத்து முதலிய இவை பலவும் இலிங்கமாகச் செய்து கொள்ளுதற்குரிய பொருள்களாகும்.

How to fix Linga

Pearls, gems, corals and emerald
Wood of sandal, granite hard, and ashes holy
Siva`s Agama, and rice in grain and cooked
When you pour in these and fix the Linga
Haunting indeed is His delicious fragrance.

kaanum vimaanam karuvarai lingam

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பாடல் எண் : 7
தூய விமானமும் தூலம தாகுமால்
ஆய சதாசிவம் ஆகும்நற் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே .

கருவறையின்மேல் உயர்ந்து விளங்கும் விமானங்கள், `தூல லிங்கம்` என்பதும், கருவறையில் மூலமாய் விளங்கும் இலிங்கம் `சூக்கும லிங்கம்` என்பதும், திருவாயிலின் முன் விரிந்து காணப்படும் பலிபீடம், `பத்திரலிங்கம்` என்பதும் சிவா லயங்களின் உண்மையைச் சிவாகம நெறியால் ஆராய்ந்துணர்வார்க்கு விளங்குவனவாகும்.

Sadasiva (Linga)`s Form, manifest and subtle

The Vimana pure is the Sthula Linga
The Sadasiva enshrined is Sukshma Linga
The Bali-peeta is Bhadra Linga
Thus it is for those who Siva`s Form seek.

manamalaril oli vadivai

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பாடல் எண் : 6
தாபரத் துள்நின் றருளவல் லான் சிவன்
மாபரத் துண்மை வபடுவா ரில்லை
மாபரத் துண்மை வபடு வாருக்கும்
பூவகத் துள்நின்ற பொற்கொடி யாகுமே .

சிவனது மிக மேலான உண்மை நிலையை உணர்ந்து அவனை வழிபடுவோர் மிக அரியர். அதனை உணர்ந்து வழிபடுகின்ற அவர்கட்கும் பூவைத் தன்னுள்ளே அடக்கியுள்ள அழகிய கொடி அப்பூவைச் சிறிது சிறிதாகவே வெளிப்படுத்துதல் போலத் தனது உண்மை நிலையை வெளிப்படுத்துவான். ஆகவே அவனது பொது நிலையாகிய இலிங்க வடிவிலும் அவன் நின்று படிமுறையால் மேல் நிலையை அருளுவான்.

Lord is the Golden support of Heart

Pervading all Nature, Siva blesses all;
But they know not the Truth and adore Him not;
To them that adore Him that is immanent
He is the golden stalk of the heart`s lotus within.

Sadasiva is the Light of Life of Gods

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பாடல் எண் : 5
ஒண்சுட ரோன் அயன் மால் பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோ டிந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்
தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே

அந்தப் பரம்பொருளாகிய சிவம் தீக் கடவுள், அயன், மால், உபப்பிரமா, சூரியன், சந்திரன் ஆகியோரது கண்களுக்கு அவரவர் வழிபடும் இலிங்கமாகியும், அவ்விலிங்கங்களை வழிபடும் பொழுது அவர்கள் விரும்பியவற்றை வழங்க எங்கும் வெளிப்படும் அழகிய மூர்த்திகளாயும் விளங்கினும் எங்கும் கலந்து நிற்கும் பெரும்பொருளேயாகும்.

Lord (Sadasiva) is the Light of Life of Gods

The resplendent Brahma, Vishnu, Prajapati
The luminous Sun and Indra
The bright-eyed Devas swarming celestial Spheres
He indeed, is their Light of Life—
He the Being Uncreated.

uyirgalai kaathu arulum karunaanithi

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பாடல் எண் : 4
ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் மீசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்
றார்த்தனர் அண்டங் கடந்தப் புறம்நின்று
சாத்தனன் என்னும் கருத்தறி யாரே

தேவர் பலரும் தாம்செய்த புண்ணியத்தின் பயனாகச் சிவன் உருவத்திருமேனி கொண்டு வெளிப்படக் கண்டு புகழ்ந்தும், வாழ்த்தியும், இன்பப் பொருளாக உணர்ந்தும், வேண் டுவார் வேண்டுவதை அருளப்பெற்று, `வரையாது வழங்கும் வள்ளல்` என ஆரவாரித்தும் நின்றாராயினும், `அவன் உண்மையில் உலகங் கடந்தவனே` என்னும் உண்மையை உணர்கின்றிலர்.

Lord (Sadasiva) protects the Celestials from afar

The countless Devas gloried My Lord
``O! Southern Breeze, fragrant cool`` they praised,
``O! Bounteous One,
`` they adored,
But they know not this;
From beyond the Spaces Vast
He His protection granted.

sithiyum budhiyum siva arul seyale

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பாடல் எண் : 3
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத் தப்பாலாம்
ஏகமும் நல்கி யிருக்கும் சதாசிவம்
ஆகம அத்துவா ஆறும் சிவமே .

ஆன்மா முப்பத்தாறு தத்துவங்களினின்றும் நீங்கித் தான் தனித்து நிற்கும் நிலையையும், அதன்பின் அது தன்னைப் பெற்று நிற்கும் நிலையையும், அந்நிலைக்கண் விளைகின்ற தனது பரபோகத்தையும் தருதலேயன்றி, உடம்பும், அதனால் உண்டாகின்ற புலன் உணர்வும் அதனால் வரும் புலன் இன்பமும் என்னும் இவற்றையும் தந்து நிற்பான் சிவன் ஆதலின் அவன், சிவாகமங்களில் பாசக் கூட்டமாகச் சொல்லப்படுகின்ற ஆறத்துவாக்களாயும் விளங்குவான்.

Sadasiva is the Adhvas too

Worldly joys and heavenly pleasures
Wisdom and miraculous powers
The body and the state beyond
The Tattvas six and thirty
All these Sadasiva granted;
The Adhvas six, too, of Agamas sacred
Are all but He — Sadasiva.

sadasiva sorupam sagalamum ulagil

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பாடல் எண் : 2
உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவா
உலகில் எடுத்தது சத்தி குணமா
உலகம் எடுத்த சதாசிவன் றானே

உலகத்தைத் தோற்றுவித்த இறைவன் உலகில் அனைத்துப் பொருள்களையும் ஆக்கியது தனது சத்தியே பொருளாக வும், பொருளின் வடிவமைப்பாகவும், குணமாகவும் அமைத்தேயாம்.

Sakti in Sadasiva manifested as World

In the World His Sakti He manifested first,
In the World as His Sakti`s Form He pervaded
In the World His Sakti`s Powers He filled
But He who this World`s creation conceived
Was Sadasiva (the Linga).

anda lingam

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பாடல் எண் : 1
இலிங்கம தாகுவ தியாரும் அறியார்
இலிங்கம தாகுவ தெண்டிசை யெல்லாம்
இலிங்கம தாகுவ தெண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்த துலகே .

ஏதோ ஒன்றை மட்டுமே `இலிங்கம்` என உலகவர் நினைத்தால்,] இலிங்கம் - என்பதன் உண்மையை உணர்ந்தவர் அரியர். எட்டுத் திசைகளாய் விரிந்து காணப்படும் உலகம் முழுதுமே இலிங்கம். அறுபத்து நான்காகச் சொல்லப்படுகின்ற கலைகளும் இலிங்கம். இறைவன் உலகத்தைத் தனது அருட்குறியாகவே உண்டாக்கினான்.

Linga or Sadasiva is World manifest

They know not what Linga is
Linga is directions eight
Linga is Kalas, eight times eight
It is as Linga the world emerged.

Saturday, June 30, 2018

vinai ariya mudiyaathu

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பாடல் எண் : 36
இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மைஎவ் வாறே!

கருவை இட்டவனாகிய தந்தையும் அதனை இட்டமை இடாமைகளை அறிந்தானில்லை. ஏற்றவளாகிய தாயும் அதனை ஏற்றமை ஏலாமைகளை அறிந்தாளில்லை. அக்கருவாகிய பொன்னைக் குழவியாகிய அணியாக்குகின்ற பொற்கொல்லனாகிய பிரமன் அவற்றை அறிந்திருந்தும் அவருள் ஒருவர்க்கும் சொல்லிற் றிலன். வினை நிகழ்ச்சி இருந்தவாறே அப்பொற் கொல்லனுக்குப் பணிக்கின்ற தலைவனாகிய சிவனும் அவ்விருவரோடே இருக் கின்றான்; அவனும் அவர்க்கு அவ் வினையியல்பையே உரைத்திலன். அந்தோ! இம்மாயையின் வஞ்சனை எவ்வகையினதாய் உள்ளது!

He who planted seed,
knew it not;
She who received saw it not;
The Creator knew,
but He told none;
They Lord who Truth reveals is also there;
Yet I saw not Maya,
How cunning was her stealthy Conduct!

மூச்சுக் காற்று

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பாடல் எண் : 33
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடும்
கொண்டநல் வாயுஇரு வர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே  .

கலவிக் காலத்தில் மூச்சுக் காற்று இருவர்க்கும் வலம், இடம் என்னும் வகையில் ஒருவகையிலே, ஓரளவிலே இயங்குமாயின், தங்கிய கருச் சிதையாது மேற்கூறியவாறு குழவி ஆணும், பெண்ணுமாய் நிலைபெறுதலோடு, அழகாயும் இருக்கும். அவ்வாறின்றி அவர்க்கு மாறி மாறி இயங்கின், தங்கிய கரு பின் நிலைபெறாது அழியும்.

If in Male and Female breath runs
In measure equable,
The infant born will exceeding handsome be;
When in both breath rhythm falters,
No Conception will there be.

இரண்டு கரு

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பாடல் எண் : 32
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே

கலவிக் காலத்தில் கணவனுக்கு மூச்சுக்காற்று வலமூக்கின் வழி இயங்கிக் கொண்டிருப்பின், குழவி ஆணாய் அமையும். இடமூக்கின் வழி இயங்கிக்கொண்டிருப்பின், குழவி பெண்ணாய் அமையும். இருவழியிலும் மாறி மாறி இயங்கிக் கொண் டிருப்பின் குழவி அலியாய் அமையும். இவை நிற்க, கருத் தங்கும் காலத்தில் தாய் வயிற்றில் கீழ்ப்போகும் காற்றுப் போக்கப் படாமல் தடுக்கப்பட்டு மேலெழுந்து பாயுமாயின், இரண்டு கரு தங்கும்.

If breath flows leading on nostril right,
The infant born will a male be;
If on the nostril left,
A female will be born;
If the descending current Apana,
Opposes the ascending current Prana,
Twins there shall be;
If in measure equal the breath rhythm runs,
Through nostrils right and left,
Hermaphrodite shall be the baby born.

மாதா உதரம்

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பாடல் எண் : 31
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே  .

கலவிக் காலத்தில், தாயது வயிற்றில், நீங்கற் பாலதாகிய மலம் நீங்காது தங்கியிருக்குமாயின், அவள் வயிற்றில் தந்தையிடமிருந்து வந்து கருவாய்ப் பொருந்திய குழவி, மந்த புத்தி உடையதாய் இருக்கும். நீங்கற் பாலதாகிய நீர் நீங்காது அவள் வயிற்றில் தங்கியிருக்குமாயின், குழவி ஊமையாகும். மலம், நீர் இரண்டுமே நீங்கற்பாலன நீங்காது தங்கியிருக்கின், குழவி குருடாகும்.

When at the time of union,
The mother`s bowels are heavy exceeding,
A dullard will be born;
If urine exceeds,
A dumb will be born;
If both exceed,
A blind will be born;
Thus is it for the infant born
The mother`s condition according.

ayul kaalam

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பாடல் எண் : 29
பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே

துணையர் (தம்பதிகள்) கூட்டத்தில் வெண்டுளி கருப்பையினுள் சென்றபின்பும் ஆடவனுக்கு ஐந்து மூச்சு நிகழுங் காறும் இருவரும் பிரியாது முன்போலவே புல்லிக் கிடப்பாராயின், பிறக்கின்ற குழவியது வாழ்நாள் நூறாண்டாக அமையும். நான்கு மூச்சு நிகழுங்காலும் பிரியாதிருப்பாராயின் அஃது எண்பது ஆண்டாக அமையும். இவ்வாறே ஒரு மூச்சிற்கு இருபது ஆண்டாகக் கணக்கிட்டு அறியலாம். ஆயினும், மூச்சுக்களின் கணக்கை உண்மையாக அறிவதோ, மூச்சினை நெறிப்படுத்தி இயக்குதலோ பொதுமக்களுக்கு இயலாது. யோகிகளாயின் அக்கணக்கினை அறியவும், அதன்படி மூச்சினை நெறிப்படுத்து இயக்கவும் வல்லராவர்.

If after emission,
The male`s breath five finger-length extends,
The infant born lives a hundred years;
When breath to four finger measure stretches,
To age eighty the infant lives;
The Yogi who knows the science of breath control
If in sex act He indulges,
He,
the vital flow,
according regulates.

Ann Penn

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பாடல் எண் : 28
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்;
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே  .

கலவியால் கருப்பையுள் கலக்கும் பொருள்களில் ஆண்மகனது வெண்டுளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி ஆணாகும். பெண்மகளது செந்துளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி பெண்ணாகும். இரண்டும் சமமாய் இருக்கின் பிறக்கும் குழவி அலியாகும். அதுவன்றி, மிகுந்துள்ள வெண்டுளியில் உயிராற்றல் மிக்கிருக்குமாயின் பிறக்கும் மகன் ஆற்றல் மிக்கவனாய் அரசாளுதற்கும் உரியவனாவான். அவ்வாறன்றி மிகுந்திருக்கும் செந்துளியில் அழிக்கும் ஆற்றல் மிக்கிருக்குமாயின் பதிந்த கருப் பயனின்றி அழிந்தொழியும்.

The masculine flow dominates,
the infant is male born,
The feminine dominates,
the infant is female born;
When the two are in force equal,
a hermaphrodite is born;
When masculine flow gushes in plenty,
The infant born will sway the world entire;
When masculine flow is scanty,
Naught indeed conception is.

mondru vagai udal

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை


பாடல் எண் : 27
மாண்பது வாக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண்பெண் அலியென்னுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான்அச் சோதிதன் ஆண்மையே  .

மாட்சிமையோடு கருப்பையுள் வளர்கின்ற கருவைச் சிவபெருமான் செய்வது, `ஆண், பெண், அலி` என்னும் மூவகை அச்சாக. அவ்வச்சுக்கள் அமைவது, மாதா பிதாக்களின் உடற் கூறாகிய காரணப் பொருட்கு ஏற்பவாம். அவற்றிற்கெல்லாம் தக்கவாறே அப்பெருமான் தனது ஆற்றற் பதிவைச் செய்கின்றான்.

The seed of life,
As a steady flame in womb burns
It takes shape one of three
Male,
female and hermaphrodite;
How the father and mother at union were,
Even so He printed the sex,
Righteous indeed was that Luminous One.

Wednesday, May 30, 2018

iruvagai thai sivaperuman

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பாடல் எண் : 25
அருளல்ல தில்லை அரன்அவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே .

அருளின்றிச் சிவன் இல்லை. சிவனின்றி அருள் இல்லை. ஆகவே, என்றும் அருளோடே நிற்கின்ற அவன், கருவில் வீழ்கின்ற அந்த ஒர் உயிரை வளர்க்கத் தருகின்றபொழுது திரோதான சத்தி, அதனை வளர்க்கின்ற செவிலித் தாய் என்னும் இரு தாயாரிடத்து அன்பை உண்டாக்கித் தருவான்.

The Lord made the body,
A name and form it assumed;
Then,
for Jiva his redemption to seek
He created earth and Tattvas many,
—Thus speak the Vedas.

arul udambu

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பாடல் எண் : 24
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாகவகுத்துவைத் தானே 

உயிர்கள் தூலமும், சூக்குமமும் ஆய உடம்புகளையே உடம்பாகப் பற்றிநில்லாது, சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தே தம்முள் ஒன்றித் தமக்கு உடம்பாகுமாறு அதனை மொழிதல் (வாசகம்), முணுமுணுத்தல் (உபாஞ்சு), கருதல் (மானதம்), உணர்தல் (சுத்தமானதம்) என்னும் முறைகளில் கணித்து (செபித்து)ப் பாசங்களினின்றும் நீங்குமாறு வேதம் முதலாகப் பொருந்திய பரந்த நூல்களை மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களிலும் வகுத்து வைத்துள்ளான்.

The Lord made the body,
A name and form it assumed;
Then,
for Jiva his redemption to seek
He created earth and Tattvas many,
—Thus speak the Vedas.

Iraivane unmaiyaana uravu

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பாடல் எண் : 22
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே 

தாய் தந்தையரது கூட்ட உறுப்புக்கள் தம்மிற் கூடிய காலத்து முன்பு தந்தையுடலில் நின்ற கரு, தாயது கருப்பையுட் சென்று கலந்து முட்டை (பிண்டம்) ஆகும். அம்முட்டையினுள் நீர்க்குமிழியில் நிழல்போல நுண்ணுடம்புக் கருவிகள் எட்டும் பருவுடல் எங்கும் பரந்து அதனைத் தாங்கி நிற்கும்.


katru udambu

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பாடல் எண் : 23
எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பைக்
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே

நுண்ணுடம்புக் கருவிகள் எட்டனுள் தன் மாத் திரைகள் ஐந்தனையும் புலன்களாகக் கொள்கின்ற ஞானேந் திரியங்கள் ஐந்தும், அப்புலன்களைத் தம்பால் பற்றிக் கொள்கின்ற, எஞ்சிய `மனம், அகங்காரம், புத்தி` என்கின்ற அந்தக்கரணங்கள் மூன்றும் கூடிய உடம்பென்னும் பையினுள் உயிர் என்கின்ற சரக்கைச் சிவ பெருமான் முன்னர்க் கட்டிவைத்துப் பின்னர் அவிழ்த்து விடுவான்.

Of the eight organs of Body Subtle,
Are senses protean five
And cognitive instruments three—
Mind,
will and cognition;
Know the dear Lord
Who fastened this body-bag,
With Desire`s sticky glue
Will in time unfasten it too.

adi mudi thedal

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்

பாடல் எண் : 1
பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றிநின் றாரே

பிரமனும், திருமாலும் `நானே கடவுள், நானே கடவுள்` என்று சொல்லிப் போர் புரிய, அவர்களது பேதைமையை நீக்குதற் பொருட்டுச் சிவபெருமான் அனற் பிழம்பாய் ஒளிவீசி நிற்க, அவ்விருவரும் அவனது திருவடியைத் தேடிக் காணாமல் புலம்பினர்.

In ignorance gross,
Brahma and Mal
Each bragged as Lord Supreme;
Then as a pillar of Fire the Lord stood before them
And they search and scream
In vain His Feet to behold.

aathiyai nooki thavam seithu

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்

பாடல் எண் : 1
அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அற்சித்துப் பத்திசெய் தாளே

உமையம்மையும் மலையரையன்பால் மகளாய் வளர்ந்தபொழுது `சிவபெருமானது திருவடிக்குத் தொண்டு புரிவேன்` (அவனுக்கு மனைவியாவேன்) என்று கருதி அதன்பொருட்டு அப்பெருமானை நோக்கித் தவம் செய்து அப்பயனைப் பெற்றாள். பின் தேவரும் அறியும்படி இந்நிலவுலகில் அவனை அன்புடன் வழிபடுதலும் செய்தாள்.

``Of a certain will I espouse
My Lord of Divine Feet``,
thus saying
As Mountain King`s daughter incarnate
Sakti performed penances severe;
For all celestial beings to witness,
For all earthly beings to delight,
In adoration intense to Primal Lord Divine.