Monday, December 11, 2017

oothi unarthu

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்

பாடல் எண் : 2
தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே  .

`சிவபிரானை உள்ளவாறு உணர்ந்தோர் யாவர்` என்பதனை முன்னே அறிந்து, பின்னர் அவர்பால் கற்றலையும், கேட்டலையும் செய்யுங்கள். கற்றும் கேட்டும் அறிந்த பின், சிந்தித்துத் தெளியுங்கள். ஏனெனில், கற்றுக் கேட்ட பின்னர்ச் சிந்தித்துத் தெளிந்தவரே சிவனைப் பெற்று உயர்ந்து நின்றனர்.

The Lord of all Devas,
the Supreme Being Divine,
Who is there who knows Him?
If any such be,
Chant His praise;
listen to the holy words and Him realise Who chant His praise and Him realise,
stand aloft and see.

aram porul inbam

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்


பாடல் எண் : 1
அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே .

முத்தி என்பது `அறம், பொருள், இன்பம்` என்னும் உலகியற் பொருள்களையும், வேதத்தின் கன்ம காண்டம், உபாசனா காண்டம், ஞானகாண்டம் என்னும் மெய்ந்நெறிப் பொருள்களையும் வல்லார்வாய்க் கேட்டார் பெற்ற பயனேயாம்.

Listening to Dharma and to the words of the Holy,
Listening to God`s valorous acts and the Devas` mantras many,
Listening to loud reports and the deeds peerless of the Lord,
The Lord whose body gleaming bright as gold are all to attain the Siva State.

vazhi thunai

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 23. கல்வி

பாடல் எண் : 8
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே  .

வானுலகமும், பிற உலகங்களுமாய் நின்று எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் துணையாய் நிற்கும் பேராற்றலும், பேரருளும் உடையவனாகிய இறைவன், கல்வியால் யாவர்க்கும் நன் னெறித் துணையாயும், அமுதமாயும் நிற்கின்றவர்கட்கே விளங்கித் தோன்றிப் பெருந்துணையாய் நிற்பன். கல்வி இல்லாதவர்க்கு அவர் உள்ளம் தன்னை நீங்குதற்கே துணையாவன். (அறியாமையை மிகுவிப்பன் என்பதாம்)

In life`s journey a Support and Elixir rare is He,
An unfailing Guide – but to the ignorant of mind,
No support He – in all the seven Heavenly globes,
Sure prop is He,
the Mighty being.
Great and Kind.

irai vazhi paadu

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 23. கல்வி

பாடல் எண் : 4
கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பரம்பரிந் துண்கின்றார்
எல்லியுங் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமு மாமே  .

கல்வியைக் கற்றவர்களிலும் சிலர் (அதன் பயனாகிய இறைவழிபாட்டினைக் கொள்ளாமையால்) வாளா இறந்தொழி கின்றனர். இனிக் கற்றதன் பயனாகிய இறைவழிபாடு உடையவர் இறையின்பத்தை இப்பொழுதே அன்பினால் நுகர்கின்றனர். ஆகையால், கல்வியைக் கற்கின்ற நீவிர் இரவும் பகலும் இறைவனைத் துதியுங்கள். அவ்வாறு துதித்தால் அவனது சத்தி உள்நின்று தாங்குவ தாகிய அருள் உடம்பும் உங்கட்குக் கிடைக்கும்.

Men of Learning abandon the fettering,
worldly ways The firm of mind flourish high on coiling snake-like Kundalini Night and `day,
unremitting praise the Lord,
And so your body,
as on herbs alchemised,
with glory of youth will be.

siva nyanam kalvi

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 23. கல்வி


பாடல் எண் : 10
கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்
துடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே  .

சிவபெருமான் ஊழிகள் பலவற்றிலும் கடல், மலை, ஐம்பூதங்களின் உரு முதலியவற்றிற் கலந்திருப்பினும், கல்வியாற் கனிந்துள்ளாரது நெஞ்சத்தையே தான் வாழும் இல்லமாகக் கொண்டுள்ளான்.

The seas He owns and the mountains high;
His Body shaped of the elements five;
The Lord of Immortals who,
through endless ages,
Mounts the powerful Bull,
at devotees heart to arrive.

iraivan than thunai

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 23. கல்வி

பாடல் எண் : 5
துணையது வாய்வருந் தூயநற் சோதி
துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வருந் தூயநற் கந்தம்
துணையது வாய்வருந் தூயநற் கல்வியே  .

உயிர்கட்குச் செல்கதிக்குத் துணையாய் வருகின்ற இறைவன், என்றும் உறுதுணையாகப் பற்றுமாறு நல்லாசிரியரால் அறிவுறுத்தப்படுகின்ற தூய நல்ல உறுதிச் சொல்லே (உபதேச மொழியே)யாய் நிற்பன். அச்சொல்லும் மலரோடு ஒட்டியே வருகின்ற மணம்போலத் தூயநல்ல கல்வியோடு ஒட்டியே வருவதாம்.

As our Guardian Angle comes the pure Light from high As our Guardian Angel,
the Pure word in beauty drest,
As our Guardian Angel comes the Pure Fragrance rich,
As our Guardian Angel comes the Pure Knowledge best.

paraman thiruvadi

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 23. கல்வி

பாடல் எண் : 9
பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே

யாதொரு செயலாயினும் அது முற்றுப் பெறுகின்ற அந்நிலைமையெல்லாம் முதற்கடவுளது திருவருள் பெற்றவழியே ஆவதாம். `எல்லாவற்றையும் முடிக்க வல்ல வன்மையை உடை யோம்` எனத் தம்மை மதித்துக்கொள்கின்ற தேவரேயாயினும், அவனது இயல்பை உணர்த்தும் நூல்களைக் கற்றவரே அவனது பேரின்பத்தை அடைந்தனர்; ஏனையோர் அடைந்திலர். அதனால், நீவிர் நல்லதொரு துணையைப் பற்றவேண்டின், சிவபெருமானையே அறிந்து பற்றுதல் வேண்டும்

If desire you must,
the Lord in desire seize,
If the Lord`s Grace you get,
all things are obtained;
Like the deep-skilled Devas of flaming Light;
The truly learned Heavenly Bliss attained.

anbu neri

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பாடல் எண் : 3
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனன்
துன்புறு கண்ணிஐந் தாடுந் தொடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே .

அன்பு பொருந்திய உள்ளத்தில் பல்வகை நிலைகளிலும் மேற்பட்டு விளங்குகின்ற சிவபெருமான், இன்பம் பொருந்திய அறக்கருணைக் கண்ணுடையவளாகிய சத்தியோடே அவ்வுள்ளங்களை ஏற்றுக் கொள்ளுதற்கு இசைந்து நிற்கின்றான். ஆதலால், துன்பம் பொருந்திய மறக்கருணைக் கண்ணுடையவளாகிய திரோதான சத்தி ஐம்புலன்களின் வழி நின்று ஆடுகின்ற ஆட்டமாகிய கட்டினின்றும் விடுபட்டு, அன்பு பொருந்திய மனத்தைப் பெறும் வழியை நீங்கள் நாடுங்கள்.

If we have love there will be spiritual glory,
and The grace of the Mother will come to us,
So give up attachment to the body-mind complex,
And seek the Lord ardently.

Thursday, November 30, 2017

piravi nookam

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பாடல் எண் : 2
இன்பம் பிறவிக் கியல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே

முத்திக்கு ஏதுவாகிய பிறவி வருதற்பொருட்டு அதற்கு ஏதுவாகிய துன்பப் பிறவியை அமைத்து வைத்துள்ள சிவ பெருமான், அத்துன்பப் பிறவிக்கு உரியனவாகச் செய்யும் தொழில் கள் பலவாயினும், எவரிடத்தும் அன்பு நோக்கியே கலப்பவனாகிய அவன், முன்பே இப்பிறவி முடிதற்கு வைத்த வழி அவ்வன்பு ஒன்றே.

The Lord gave us this life to attain supreme bliss,
But we spent it in deeds that bring misery Yet if we have love for Him He will put an end to our rebirths.

nalla natpu

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பாடல் எண் : 7
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்
றும்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே  .

அனைத்துயிர்களாலும் விரும்பத்தக்கவனும், மேலிடத்துத் தேவர் பலராலும் `எல்லாமாய் நிற்கும் கடவுள்` என்று சொல்லிப் போற்றப்படுபவனும், இன்ப அநுபவப் பொருளாய் உள்ளவனும், அப்பொருளில் நின்று எழுகின்ற இன்பமானவனும், அன்பிலே விளங்குபவனும் ஆகிய சிவபெருமானை அன்புடையவ ரல்லது பிறர் அறியமாட்டார்.

My Lord God whom the heavenly beings praise As one into myriad forms and things outspread,
The Great Lover who inside love savours love`s tributes;
Sad indeed that few seek Him,
or to Him are led.

irai inbam

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பாடல் எண் : 4
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்
குணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பமதுஇது வாமே  .

பெண்டிரோடு கூடும் கூட்டத்தில் ஆடவர் அப் பெண்டிர்மேல் வைக்கின்ற அன்பிலே அறிவழிந்து நிற்றல்போல, சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பிலே தம் அறிவழிந்து அந்நிலையில் நிற்க வல்லார்க்கு அதனால் விளைகின்ற பேரின்பம் அவரைப் பின்னும் அந்நிலையினின்றும் பெயராத வகையிற் பெருகிவிளங்கி, விழுங்கி இவ்வன்பே தானாகி நிற்கும்.

Like the sweet love in sex-act experienced,
So,
in the Great Love,
let yourself to Him succumb;
Thus in Love sublimed,
all your senses stilled,
Bounding in Bliss Supreme,
That this becomes

iraivan thiruvadi

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பாடல் எண் : 6
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே  .

கொன்றை மாலையாகிய திருவடையாள மாலை யால் பிரணவம் முதலிய மந்திரப்பொருள் தானேயாகியும், யானையை உரித்தமையால் ஆணவமலத்தைப் போக்குபவன் தானேயாகியும் நிற்றலால், அன்பால் நினைவாரது நெஞ்சத் தாமரையின்கண் விளங்கு பவனும் தானேயாகிய சிவபெருமானது திருவடிகளை நானே கண்டேன்; ஏனெனில், அவை எனது அன்பிடத்தே உள்ளனவாதலால்.

I saw the Feet of the Lord,
deckt in odorous Konrai blooms,
I saw the Feet of the Lord,
dark-dressed in elephant-skin,
I saw the Feet of the Lord,
on lotus-blossom abiding I saw the Feet of the Lord,
my heart-core`s love within.

pirappum irappum

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பாடல் எண் : 8
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலார்நந்தி
யன்பில் அவனை அறியகி லாரே .

இனி எதிர்ப்படுதற்குரிய பிறப்பு இறப்புக்கள் இல்லாதவரே, `சிவபெருமானிடத்து அன்பு செய்து அவனை அடைவோம்` என்னும் துணிவினராவர். (அவர் இப்பொழுது எடுத்துள்ள பிறப்பும், அது நீங்குதலாகிய இறப்பும் அவருக்கு இன்பத்திற்கு ஏதுவாவனவேயாம்.) அத்தகைய பிறப்பு இறப்புக்களை இல்லாமையால் மேலும் பிறந்து இறந்து உழலும் வினையுடையோர் அவனிடத்து அன்பு செய்து அவனை அறியும் கருத்திலராவர்.

Those who know nothing but the cycle of birth and death Think that through worldly love they can attain the Lord,
But the Lord is beyond birth and death,
Only through true devotion can He be attained.

idai vidathu anbu

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பாடல் எண் : 10
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே 

மேலான ஒளி (பரஞ்சோதி) ஆகிய சிவபெரு மானை இடைவிட்டு நினைவதால் பயன் என்னை? தன்னை அடைய முயல்கின்ற எனக்கு என் ஆருயிர்போல்பவனாகிய சிவபெரு மானைத் தேன் போல் இனியவனாக அறிந்து அவனை இடைவிடாது நினைந்து நிற்றலே அவனுக்குச் சிறந்த திருமஞ்சனமாம். ஆதலால், அவனது முடிவில்லாத பெருமையை நான் பற்றிய பின்னர் விடுதல் என்பது இன்றித் தொடர்ந்து பற்றிக் கொண்டுள்ளேன்.

It little profits if,
intermittently,
you pursue the Divine Light;
Unceasing,
I will seek the Greatness that has no end,
My Lord,
my heart`s precious Life and treasured Delight;
In Him to merge is the holy bath.

iravum pagalum

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பாடல் எண் : 9
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திட
ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே

இரவும், பகலும் இடைவிடாது தன்னையே தம் அன்பிற்கு உரியவனாகக் கொண்டு, அன்பு செய்கின்ற அன்பர்களைச் சிவபெருமான் நன்கறிவன். ஆதலால், ஞானத்தைப் பெற்று அன்பினால் வசமிழந்து நின்றமையால், அவன் எங்களிடையே வந்து எங்களைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

The Lord God knows them who,
by night and day,
Seat Him in heart`s core,
and in love exalted adore;
To them wise with inner light,
actionless in trance,
He comes,
and,
in close proximity,
stands before.

Tuesday, October 24, 2017

நாட்டில் செல்வம்

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை

பாடல் எண் : 2
நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்
நாடோறும் நாடு கெடும் மூட நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே .

நீதிநூலைக் கற்ற அரசன், அந்நூலின் நோக்கு முதற்கண் வைதிக நெறி மேலும், பின்னர்ச் சிவநெறி மேலும் ஆதலை யறிந்து, நாள்தோறும் தனது நாட்டில் அவை பற்றி நிகழ்வனவற்றை, நாள்தோறும் அயராது ஒற்று முதலியவற்றான் ஆராய்ந்து, அவை செவ்வே நடைபெறச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யானாயின், அவனது நாடும், செல்வமும் நாள்தோறும் பையப் பையக் குறைந்து, இறுதியில் முழுதுங் கெட்டுவிடும். அவற்றிற்குக் காரணம், யாண்டும் பாவச் செய்கையே மலிதலாம்.

The Holy Law daily in strictness observe If he who rules the state fails to seek the Divine way Day by day that land decays in folly envelopt,
Day by day that ruler`s wealth declines and dwindles away.

அமுதூறு மாமழை

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு

பாடல் எண் : 1
அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே 

வற்றாத அமுத ஊற்றுப்போலச் சுரந்து பொழிகின்ற பெரிய மழைநீராலே பயன் சுரக்கின்ற பல மரங்கள் இயற்கையாக நிலத்தில் தோன்றி வளர்வனவாம். இனி உழவரால் பயிரிடப்படுகின்ற கமுகு, இனிய நீரைத் தருகின்ற தென்னை, கரும்பு, வாழை முதலியனவும் அம்மழையினாலே மக்கட்கு நிரம்பிய உணவைத் தருவனவாம். இனி எட்டி போன்ற நச்சு மரங்களும் அம்மழையினால் உளவாவனவேயாம்.

பிறர்க்கு ஈந்தது, அதுவே உங்கட்குத் துணையாவது

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்

பாடல் எண் : 9
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்றுங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே

சிவபெருமான் எவ்வுயிர்க்கும் உண்மைப் பற்றாய் உள்ள அறத்தை அஃது அரிய மறைபொருள் (இரகசியம்) என்று, அறநெறியில் நிற்பார்க்கன்றி ஏனையோர்க்கு உணர்த்துதல் இல்லை. அதனை அவன் அருள்வழி நான் பெற்றவாற்றால் உங்கட்குக் கூறுவதாயின், ஒன்றேயாயினும், உங்களால் மனம் பொருந்திப் பிறர்க்கு ஈந்தது உண்டாயின், அதுவே உங்கட்குத் துணையாவது. இன்னும் அப்பெருமான் வகுத்த நன்னெறியை மேற்கொள்ளும் முறைமையும் அதுவேயாம்.

Earthly desires to worldly objects attached,
No end know;
but in charity`s noble way,
Even the little things you give,
sure props provide;
All the rest meekly take as the Lord`s gift for the day.

ilaippinai neekkum iruvazhi undu

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்


பாடல் எண் : 8
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்குந் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே

அறம் செய்தற்கு `இல்நிலை, துறவு நிலை` என இரண்டு வழிகள் உண்டு. அவற்றுள் அழிதல் இல்லாது நின்று நிலவும் புகழை உடைய துறவோன், தனக்கும், தன் சுற்றத்திற்கும் பயன் விளையு மாறு செய்யும் தவம், உயிர் கரை காணமாட்டாது அழுந்திக் கிடக்கின்ற வினையாகிய கடலை நீந்துதற்கு அமைந்த தோணியாய், பிறந்தும், இறந்தும் உழலும் இளைப்பினை நீக்கும். இல்லறத்தில் நின்று செய்யும் விருந்தோம்பல் முதலிய அறம் மறுமைக்குத் துணையாய் வரும்.

illaram thuravaram

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்

பாடல் எண் : 6
துறந்தான் வழிமுதற் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே  .

மெய்ம்மையை ஆராய்ந்தறியும் அறிவுடையீரே! முற்றத் துறந்தவனுக்குச் சுற்றத் தொடர்பு இல்லை. அதனால் அவன் இறைவனை மறவான். மறவானாகவே அவனுக்குக் கெடுவது யாதும் இல்லை. அங்ஙனம் முற்றத் துறக்கமாட்டாதவன் சுற்றத்தொடு கூடி வாழும்பொழுது அறஞ் செய்யாதே இறந்தொழிவனாயின், அதன் பின்னர் அவனுக்கு அறமேயன்றி அவன் விரும்பிய இன்பமும் இல்லையாம். அவன் தான் வாழுங்காலத்து இறைவனை மறவா திருத்தல் கூடாமையின் இறைவனும் அவனுக்குத் துணைவாரான்; அதனால் அவன் இருமையும் இழப்பன். ஆகவே, நீவிர், `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறங்களின் தன்மையை அறிந்து அவற்றுள் இயன்றதொன்றில் நில்லுங்கள்.

Tuesday, September 19, 2017

piraiyum paampum udai peruman

 5.92 காலபாசக் குறுந்தொகை



குறிப்பு: காலன், கூற்றுவன், யமன், நமன் என்றெல்லாம் அழைக்கப் படும் தருமராசனின் தூதுவர்கள் உயிர்களின் பிரார்த்துவ வாழ்வு முடிகையில் சொர்க்க நரகங்களில் சேர்ப்பதற்காக வந்து பாசக்கயிற்றில் கட்டி இழுத்து செல்வார்கள்

ஆனால் யமனுடைய இந்த அதிகாரம் "திருநீறு பூசிய சிவநேயச் செல்வர்களிடம் செல்லுபடியாகாது"

என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல்கூற்று உதைத்தவன் நம் இறைவன் அவன் தம் தமர்களாகிய சிவனடியார்கள் கடுநரகில் வீழ்வதில்லை, ஒரு தரம் "சிவாயநம" என்று சொன்னவர்க்கே சாலோக முக்தி கிடைக்கும் என்னும் போது காலதூதுவர்களுக்கு அடியார்களிடம் என்ன வேலை இருக்க முடியும்!!??

மீறிச் சென்று அடியார்களை துன்புறுத்தினால் யமன் உதைவாங்கி உருண்டோடி ஒழிந்து போனதை நினைத்துப் பாருங்கள் என்று அப்பர் பெருமான் காலதூதுவர்களுக்கு அறிவுரை வழங்குவதாக இக்குறுந்தொகை அமைவதால் இதனை "காலபாசக் குறுந்தொகை" என்கிறோம்

நமன் தூதுவீர்!! என்று எமதூதர்களை அழைத்து அருகே அமர வைத்துக் கொண்ட அப்பரடிகள். இருந்து கேள்மின்!! இன்னுங் கேள்மின்!! மற்றுங் கேள்மின்!! என்று தங்கவைத்து சிவனடியார்கள் இருக்கும் திசைக்குக் கூட சென்றுவிடாதீர்கள் பின் உங்கள் தலைவன் உதை வாங்கியதைப் போல வாங்க வேண்டிவரும் என்று எச்சரித்து இப்பாடல்களை நயமுடன் பாடுகிறார்

பாடல் 3-9

கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர்கொள் நாமஞ் சிவன் என்று அரற்றுவார்
ஆர்கள் ஆகிலுமாக அவர்களை
நீர்கள் சாரப் பெறீர் இங்கு நீங்குமே.

சாற்றினேன் சடை நீண்முடிச் சங்கரன்
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்றவுங் களிப்பட்ட மனத்தராய்ப்
போற்றி என்று உரைப்பார் புடை போகலே.

இறையென் சொல் மறவேல் நமன் தூதுவீர்
பிறையும் பாம்பும் உடைப்பெருமான் தமர்
நறவம் நாறிய நல்நறுஞ் சாந்திலும்
நிறைய நீறணிவார் எதிர்செல்லலே

வாம தேவன் வளநகர் வைகலும்
காம மொன்று இலராய்க்கை விளக்கொடு
தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும்
ஏமமும் புனைவார் எதிர் செல்லலே

படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன்மின் நமது ஈசனடியரை
விடைகொள் ஊர்தியினான் அடியார்குழாம்
புடைபுகாது நீர் போற்றியே போமினே.

விச்சையாவதும் வேட்கைமை யாவதும்
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்சமெய்தி அருகணையாது நீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.

இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார்
மன்னும் அஞ்செழுத்தாகிய மந்திரம்
தன்னில் ஒன்று வல்லாரையுஞ் சாரலே.

பொருள்

யமதூததர்களே!!கார்காலத்திலே மலர்கின்ற கொன்றையின் மணமிக்க மலர்களை அணிந்தவனது பெருமை கொண்ட திருநாமமாகிய சிவன் என்று அரற்றுவார் ஆராயினும் ஆக ; அவர்களை நீர் சாரப்பெறாதீர் ; நீங்குவீராக .

சடையோடு கூடிய நீள்முடியுடைய சங்கரனும் , காமனைச் சினந்து எரிசெய்தவனுமாகிய பெருமான் சேவடியைப் போற்றி என்று மிகவும் களிப்புடைய உள்ளத்தவராய் உரைப்பார் பக்கம் நீவிர் செல்லேல் .

நமன் தூதுவர்களே ! என்சொல்லைச் சிறிதும் மறவாதீர் ; பிறையும் பாம்பும் உடையான் தமர்களாகிய தேன் நறுமணம் வீசும் நல்ல நறுவிய சாந்தினைவிட நிறையத் திருநீறு பூசும் அடியவர் எதிரில் கூட நீங்கள் போய்விடாதீர்கள்

வாமதேவனாகிய சிவபெருமான் வளநகராந் திருக்கோயிலில் நாள்தோறும் மனத்தின்கண் வேறொரு விருப்பமும் இல்லாதவராய்க் கைவிளக்கும் , தூபமும் , மாலையும் , தண்ணிய நறுவிய சாந்தமும் , பிற வாசனைப் பொருள்களும் புனைவார் எதிர் நீவிர் செல்லேல் .

படைக்கலமும் பாசக்கயிறும் பற்றியகையை உடைய தூதுவர்களே ! நமது ஈசன் அடியரை அடையாதீர் ; இடபத்தை
ஊர்தியாகக்கொண்ட இறைவன் அடியார் குழாத்தின் புடை நீர் போகாமல் அவர்களை வழிபட்டுப் போவீராக .

வித்தையாவதும் , விருப்பத்துக்குரிய தன்மையும் ஆவதும் நாள்தோறும் திருநீறணியும் மெய்யடியாரை நினைப்பதே ; அச்சம் கொண்டு , பிச்சை புகும் பெருமானின் அன்பர்களை நீர் பேணுவீராக .

இன்னும் கேட்பீராக ; இளம் பிறையினைச் சூடிய அருளரசனாகிய சிவபெருமான் திருவடியோடுகூடிய உள்ளத்துடன் ஏத்தி வழிபடுவார்களையும் நிலைபெற்ற திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தில் ஒன்று வல்லவரையும் நீவிர் சாரவேண்டா .


manthiramum thanthiramum marunthumaagi

6.54 திருப்புள்ளிருக்கு வேளூர் திருத்தாண்டகம்

குறிப்புபுள் ஆகிய சடாயு இருக்காகிய வேதம் வேள் ஆகிய முருகன் ஊராகிய சூரியன் வழிபட்ட தலமாதலின் புள்ளிருக்கு வேளூர் ஆயிற்று

தரணியெங்கும் பிறவிநோயால் பீடிக்கப்பட்ட உயிர்களுக்கு பிணிதீர்க்கும் மகாவைத்தியனான சிவபரம்பொருள் புற்றுருவில் எழுந்தருளியுள்ள தலம்

செல்வமுத்துக்குமர சுவாமி என்னும் அறுமுகச்செவ்வேள் இத்தலத்தின் விசேடமூர்த்தியாவார்

செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்தாவான் என்பது புகலிப்பிள்ளையர் வாக்கு

கள்ளார்ந்த பூங்கொன்றை என்னும் பாடலில் சிவபரம்பொருளை சாடாயு சம்பாதி பூசித்த திறங்களையும் சீதாபிராட்டியிடம் அத்துமீறிய இராவணனை இப்பறவையோர் பொருதழித்த மகத்துவத்தையும் வியந்தும் பாடியிருப்பார் சம்பந்தப்பெருமான்

ஆண்டானை என்று துவங்கும் அப்பரடிகளின் தாண்டக வரிகள் தமிழ் நூல்களுக்கு ஓர் மணிமகுடமாகத் திகழும் வரிகள்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி தீராநோய் தீர்த்தருள வல்லான்தன்னை புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே என்று பாடும் அப்பர் பெருமானது வரிகள் வைரத்தில் பதித்த பொன்னெழுத்துக்களாம்

இத்தாண்டகத்தின் முதல் மூன்று பாடல்கள் இவை

பாடல் 1,2,3

ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன் மாலறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் தன்னை
நேமிவான் படையால் நீளுரவோன் ஆகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறி வாளரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே


சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தையுள்ளே
திகழ்ந்தானைச் சிவன்தன்னைத் தேவதேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பு ஒன்றில்லாப்
பெம்மானைக் கைம்மாவினுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித்தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத்துள்ளே ஊறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே


பொருள்

அடியேனை அடிமையாகக் கொண்டு ஆண்டவனாய், திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் அறியா வண்ணம் அனற்பிழம்பாய் நீண்டவனாய், நெடுங்களக் கோயிலில் உறைவானாய், சக்கரப்படையால் பேராற்றலுடைய சலந்தரனுடைய மார்பினைப் பிளந்தவனாய், கேதாரத்தில் உறைவோனாய், ஒரு காலத்தும் அழிதல் இல்லாதவனாய், ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்போடு எலும்பினை அணிகலனாகப் பூண்டவனாகிய புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைத் துதிக்காமல் பல நாள்களை வீணாகக் கழித்து விட்டேனே

அடியேனுடைய உள்ளத்தில் சிறப்பாகக் கிட்டினவனாய் விளங்குகின்ற சிவனாகிய தேவதேவனாய், மிக நுண்ணியனாய், கொடிய நீண்ட வேலை ஏந்தி வந்த கூற்றுவனைத் திருவடியால் உதைத்து, முனிவனாகிய மார்க்கண்டேயன் கொண்ட யம பயத்தைப் போக்கியவனாய், பிறப்பு இறப்பு இல்லாத தலைவனாய், யானைத் தோலை விரும்பிப் போர்த்தவனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

அடியேன் பக்தியோடு வணங்கித் தன்னைப் பலநாளும் பாமாலைகளால் போற்றுமாறு பழக்கியவனாய், எல்லாத்தெய்வங்களும் துதிக்கும் தெய்வமாய், என் தலைவனாய், என் உள்ளத்து ஊறும் தேன் அமுதம் பசுப்பால், இனிய கரும்பு என்பன போன்று இனியனாய்ப் பகைவரை அழிப்பவனாய், ஆதிக் கடவுளாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.

thirunallaru thiruthandagam

6.20 திருநள்ளாறு திருத்தாண்டகம்


குறிப்பு: திருநள்ளாறு சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று
நளேச்சுரம், நாகவிடங்கபுரம், தர்ப்பாரண்யம் என்பவை இத்தலத்தின் ஏனையப் பெயர்களாம்

மகாபாரதத்தில் "நளன் வரலாறு" ஒரு கிளைக்கதையாக இடம்பெற்றுள்ளது, கலிபுருஷன் என்னும் சனியனால் பின்தொடரப்பெற்ற நளன் திருநள்ளாற்று இறைவனை தரிசிக்கும் பொருட்டு காதலுடன் ஆலயத்திற்குள் நுழையும் போது மேற்கொண்டு தொடர இயலாது "சிவபரம்பொருளுக்கு அஞ்சி" ஆலயவாசலில் சனியன் தங்கிவிட்ட தலம்

ஏழு தேவாரப்பாடல்கள் பெற்றுள்ள மூவராலும் போற்றப் பெற்ற பதி, விடங்கர் சன்னதிக்கு நேரே ஒய்யாரமாக நிற்கும் ஆலலசுந்தரர் பெருமான் திருமேணி அழகினுக்கோர் ஆபரணம்

அனல் வாதத்தில் வாடிப்போகாத பச்சைப் பதிகத்தைக் கொண்ட தலம்  தேவாரம் பாடிய மூவரும் தத்தம் பதிகத்தில் இத்தல இறைவனை முறையே நம்பெருமான், நம்பி, நம்பன் என்று குறித்தழைப்பதால் இதுபற்றி நம்பெருமான் என்பதே திருநள்ளாறு இறைவன் பெயர், தர்ப்பாரண்யேஸ்வரர் என்பது பிற்காலத்தில் வழங்கப் பட்டதாயிருக்கலாம் என்பர் அறிஞர்கள்

பிரமனின் தலைகளுள் ஒன்று ஏதோ தவறாகப் பேசியதால் இறைவன் அதனை கொய்துவிட்ட சிறப்பு செய்தியுடன் துவங்கும் அப்பரடிகள் திருத்தாண்டகத்தின் முதல் மூன்று பாடல்கள் இவை

பாடல் 1,2,3

ஆதிக்கண் நான்முகத்தில் ஒன்று சென்று
அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டுவானை
மாதிமைய மாதொரு கூறாயினானை
மாமலர்மேல் அயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே.

படையானைப் பாசுபத வேடத்தானைப்
பண்டனங்கற் பார்த்தானைப் பாவமெல்லாம்
அடையாமைக் காப்பானை அடியார் தங்கள்
அருமருந்தை ஆவாவென்று அருள்செய்வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்
சங்கத்த முத்தனைய வெள்ளை ஏற்றின்
நடையானை நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.

படஅரவம் ஒன்றுகொண்டு அரையிலார்த்த
பராபரனைப் பைஞ்ஞீலி மேவினானை
அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை
அமுதாக உண்டானை ஆதியானை
மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை
மாமணியை மாணிக்காய்க் காலன் தன்னை
நடலரவஞ் செய்தானை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.

பொருள்

ஆதி அந்தணன் எனப்படும் பிரமனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற அம்முகத்தைத் தன் கையையே வாளாகக் கொண்டு போக்கிய வயிரவனாய் , அடியார்கள் அடைவதற்கு மேம்பட்ட சிவலோகம் அடையும் வழியைக் காட்டுவானாய் , விரும்பத்தக்க பார்வதி பாகனாய் , தாமரை மலர் மேல் உள்ள பிரமனும் , திருமாலும் காண முடியாத தலைவனாய்க் குண பூரணனாய்த் திருநள்ளாற்றில் உகந் தருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் தியானம் செய்து துன்பங்களிலிருந்து நீங்கிய செயல் மேம்பட்டதாகும் .

பலபடைக்கலங்களை உடையவனாய்ப் பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய் , முற்காலத்தில் மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய் , அடியவர்களுக்கு அமுதமாய் அவர்கள் நிலைக்கு ஐயோ என்று இரங்கி அருள் செய்பவனாய்ச் சடையை உடையவனாய் , காளையில் செல்பவனாய்க் குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று 


படமெடுக்கும் பாம்பு ஒன்றனை இடையில் இறுகக்கட்டிய , மேலும் கீழுமாய் நிற்பவனை , பைஞ்ஞீலி என்ற தலத்தை உகந்தருளியவனை , வலிய பாம்பினைக்கொண்டு கடைந்த போது தோன்றிய விடத்தை அமுதம்போல் உண்டவனை , எல்லோருக்கும் முற்பட்டவனை , இதழ்களிலே வண்டுகளின் ஒலி நிறைந்த கொன்றைப் பூவினை அணிந்தவனை , சிறந்த இரத்தினம் போன்று கண்ணுக்கு இனியவனை . மார்க்கண்டேயன் என்ற பிரமசாரியைக் காத்தற்பொருட்டுக் காலனைத் துன்புறுத்தத் தன் கால் சிலம்பு ஒலிக்க அவனை உதைத்தவனை , நள்ளாற்றில் உகந்தருளி யிருப்பவனை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே 

agni kaariyam

முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்

பாடல் எண் : 9
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத் துளங்கிக் குரைகடல் தானே

வேள்வித் தீக்கு உள்ளீடாய் நிற்பவன் எங்கள் சிவபெருமானே; அஃது, அவன் சுடுகாட்டில் தீயில் நின்று ஆடி, சிறந்த உயிரைத் தாங்கி நிற்றலானே அறியப்படும். இவ்வுண்மையை உணராது, உணர்த்துவாரையும் வெகுள்வாரது வெகுளியின்கண் உளதாகின்ற தீயால் விளையும் வினைக்கடல், மந்தரமாகிய பெரிய மத்தால் கலங்கி ஒலித்த கடல் போல்வதாம்.

Inside the Fire of the Homa is my Lord,
Inside too is He seated in the flame of the funeral pyre The two Fires in the sky,
the Sun and the Moon,
The Fire of the Homa checks the sea of karma from expanding

Tuesday, August 1, 2017

mouna nilai

பத்தாம் திருமுறை
ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்

பாடல் எண் : 7
மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாம்மொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே .

பொழிப்புரை :

மௌன நிலை கைவரப் பெற்றோர்க்குப் பரமுத்தி உண்டாகும். அதற்கு முன்னே பரசித்திகள் உளவாம். நாதத்தின் பிணிப்பும் விட்டொழியும். இறைவனது ஐந்தொழில்களில் இறுதிய தாகிய அருளால் தொழிலும் நிகழ்ந்து, அவை அனைத்தும் இயற்றப் பட்டு முடியும்.,

Mauna`s Emanations

They that have mastered the Divine
Mauna (Silence),
Shall reach the very bliss of Mukti;
And all Siddhis of themselves seek them
Into the Silent Word* would in perfection evolve;
Mastering Mauna thus,
They shall gain the power
For the five divine acts to perform
Creation, Preservation, Dissolution,
Obfuscation and Grant of Grace.

aandugal pala kazhinthana

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை

பாடல் எண் : 2
ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே  .

மக்கள் பிறந்தபின் சில ஆண்டன்றிப் பல ஆண்டுகள் கழியினும், சிவபெருமானை அறிதலைக் கடனாகக் கொண்டு முயன்று அறிகின்றவர் யாரும் இல்லை. அவ்வாற்றால் இதுகாறும் நீடுசென்ற காலங்கள் இனியும் நீடுசெல்லுமாயினும், அவர் அவனை அறியமுயல்வாரல்லர்.

Even a Life-time is not Enough to Know Him

The years roll on; but none the Lord in his bosom holds,
None to probe and perceive Him profound;
Even if Time`s thread be to the utmost stretched,
Still they know not the spark that kindles all the lamps around.

siva suriyan

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை


பாடல் எண் : 1
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே

நாள்தோறும், கிழக்கில் அழகிதாய்த் தோன்றிப் பின் வானில் செல்லுகின்ற பேரொளியும் வெப்பமும் உடையதாய ஞாயிறு, பின்பு மேற்கில் வெப்பமும், ஒளியும் குறைந்து சாய்தலைக் கண் ணொளியில்லாத மக்கள் ஒளியில்லாத அக்கண்ணால் கண்டும் காணாதவராகின்றனர். அதுபோல, அகன்ற உலகில் அறிவில்லா திருக்கும் மக்கள், குழவியாய்ப் பிறந்த பசுக்கன்று அப்பொழுது துள்ளி ஆடிப் பின்பு சில நாளில் வளர்ந்து எருதாகி நன்கு உழுது, பின்னும் சில நாள்களுக்குப் பிறகு கிழமாய் எழமாட்டாது விழுதலைக் கண்ணாற் கண்டும், பிறந்த உடம்புகள் யாவும் இவ்வாறே இளமை நீங்கி முதுமை யுற்று விழும் என்பதை அறியாதவராகின்றனர்.

TRANSITORINESS OF YOUTH
Rising Sun Sets; Glowing Youth Fades

They see the sun rises in the east and sets in the west.
Yet blind of eye, the truth they ne`er apprehend.
The tender grows, fattens for a while and dies;
But this wonder-pageant of the world they do not comprehend.

Monday, July 31, 2017

kaanatha kannudan kaelaatha kelviyum

பத்தாம் திருமுறை
ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்
பாடல் எண் : 6

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணா யெனவந்து காட்டினன் நந்தியே .

பொழிப்புரை :

`எங்கள் குரவராகிய நந்தி பெருமான், கண் இன்றியே காண்கின்ற காட்சியையும், காது இன்றியே கேட்கின்ற கேள் வியையும், சித்தம் திரியாதே நுகர்கின்ற நுகர்ச்சியையும், கூடாமலே கூடி நிற்கின்ற கூட்டத்தையும், நாணாமலே நாணுகின்ற நாணத்தையும், நாதம் இன்றியே உணரும் உணர்வையும் காண்பாயாக`` என அணுகி வந்து காட்டி யருளினார்.

Wonders Nandi Showed

``May you have,
`` He said:
``The vision that eye has seen not,
The message that ear has heard not,
The rapture that cloys not,
The union that had been not,
The Nada that ceases not,
The Bodha that arises at Nada`s End,
All these, may you have,
`` He said,
He, the Nandi of immortal fame.

Knowledge and Ignorance

பத்தாம் திருமுறை
ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்
பாடல் எண் : 5

முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.
பொழிப்புரை :

யான் நந்தி பெருமானைக் குருவாக அடைதற்கு முன், அறியத்தக்க பொருளை அறியாது கிடக்கின்ற அறிவிலிகளோடு ஒருங்கொத்திருந்தேனாக, அவரை அடைந்த பின் அவ் அறியா மையை நீக்கிச் சிவத்தை உணருமாறு என்னைக் கருவிக் கூட்டத்திற்கு அயலானாக ஆக்கி, அவ் ஆக்கப்பட்டால் யான் சொரூப சிவத்தில் தோய்ந்தபின்பு மீளக் கருவிக் கூட்டத்திற் செல்லாதவாறு உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றார்.

Knowledge and Ignorance

Even unto the witless here below
That know not knowledge from ignorance,
Was I; He taught the distinction between the two And made me know my Self;1
He transformed me into Para2
And made me known to Siva; 3
He, Nandi of hallowed name.

nillaa vaazhvu

ஐந்தாம் திருமுறை

069 திருக்கருவிலிக்கொட்டிட்டை

பாடல் எண் : 7
நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப்
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக்
கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே

நில்லாத வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா நெறியின்கண் வினைகளைச்செய விரும்பாது, நீர், கல்லால் நிறைந்த மதில் சூழ்ந்து தண்ணியதும் கொல்லேறாகிய இடபத்தினை ஊர்வானுக்குரியதும் ஆகிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக.

thinking that the transient life could be made permanent.
without committing acts in bad ways people of this world!
you reach cool Karuvilikoṭṭiṭṭai surrounded by fortified walls constructed with stones, belonging to Civaṉ who rides on a bull which can gore enemies to death.

devargal devar mahadevar

முதல் திருமுறை

042 திருப்பேணுபெருந்துறை

பாடல் எண் : 2 பண் : தக்கராகம்
மூவரு மாகி யிருவரு மாகி முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப் பல்கண நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு தண்மதிண் மூன்றுமெ ரித்த
தேவர்கள் தேவ ரெம்பெரு மானார் தீதில்பெ ருந்துறை யாரே.

குற்றமற்ற பேணு பெருந்துறையில் விளங்கும் எம் பெருமானார், அரி அயன் அரன் ஆகிய முத்தொழில் செய்யும் மூவருமாய், ஒடுங்கிய உலகை மீளத் தோற்றும் சிவன், சக்தி ஆகிய இருவருமாய், அனைவர்க்கும் தலைவருமாய் நின்ற மூர்த்தி ஆவார். நம் பாவங்கள் தீர நல்வினைகளை அளித்துப் பதினெண் கணங்களும் நின்று பணிய மேரு மலையை வில்லாகக் கொண்டு, மும்மதில்களையும் எரித்தழித்த தேவதேவராவார்.

being Piramaṉ, Māl and uruttiraṉ.
and being mayēccuraṉ and catāCivaṉ (becoming cakti and Civaṉ when the worlds absorbed into Civaṉ are again created) Civaṉ with a form who is also the paracivam who is different from them and directs them.
granting his grace to do good acts in order that the sins may end.
to be worshipped by many groups of devotees.
with the big mountain which was improvised into a bow the superior teVar to all other teVars, who burnt all the three low forts.
our god.
is in peruntuṟai which has no defects.

padikaasu kodutha peruman

ஏழாம் திருமுறை

009 திருவரிசிற்கரைப்புத்தூர்

பாடல் எண் : 6 பண் : இந்தளம்
அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
    அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
    முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
    வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
    பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே

சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், உமக்கு அகத்தொண்டு செய்யும் அந்தணர் ஒருவர் தம் நியமப்படி ஒருநாள் அரிசிலாற்றின் நீரைக் கொணர்ந்து உமக்கு ஆட்டுகின்றவர், பசியினால் மிகவும் உடல் மெலிவடைந்து, நீர்க் குடத்தையும் உமது முடியின் மேல் நழுவி விழவிட்டு, அப்பிழைக்காக நடுக்கமுற, நீர் அவரது கனவில் தோன்றி, ` அன்பனே, நீ அறியாதவாறு உன்னால் நிகழ்ந்த பிழையை நினைந்து வருந்தற்க `, ` உன் உடல் மெலிவிற்குக் காரணமான இவ்வற்கடம் நீங்குங்காறும், நாள்தோறும் உனக்குப் படியாக ஒரு காசும் கிடைக்கும் ` என்று அருளிச் செய்து, நாள்தோறும் ஒரு பொற்காசினை வற்கடத்திலும் தவறாது நிலைபெற்ற திருத்தொண்டினைச் செய்த அப்புகழ்த்துணையாரது கையிற் சேரும் படி செய்து, அவரை ஆட்கொண்டருளினீர்.

the brahmin who was doing services in the sanctuary.
was bathing you bringing water from the river Aricil.
when he trembled causing the water pot to fall on your head on account of excessive faintness due to hunger you felt happy by putting into the hands of Pukaḻttuṇai who was firm in his good acts, having apportioned to him and telling in his dream you will receive as daily batta a gold coin till the end of the famine This story is hinted by Campantar in the 7th verse of the decade on this shrine;
this verse gives more details about that;
the name of the priest is also mentioned.

vadamozhiyum then tamizhlum

ஆறாம் திருமுறை

087 திருச்சிவபுரம்

பாடல் எண் : 1

வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண்
    வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண்
    ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
    கருதுவார் இதயத்துக் கமலத் தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே

சிவபுரத்து எம் செல்வன் ஆம் சிவபெருமான், வானிடத்து உறைபவனும், தேவர்களுக்கு மேலானவனும், வட மொழியும் இனிய தமிழ் மொழியும் மறைகள் நான்கும் ஆனவனும், ஆன்ஐந்தாம் பஞ்சகவ்வியத்தில் ஆடினவனும், கானவனாகிய கண்ணப்பனுக்கு அருள் செய்தவனும், தன்னைக் கருதுவார் இதயத் திடத்து, தாமரை மலரிடத்து ஊறும் தேன் போன்றவனும், முன்பு இல்லாது, பின்பு காரணத்தாற் சென்றடையும் பெற்றியதன்றி இயல்பாகவே உள்ள செல்வனும் ஆவான்.

He is of the empyrean;
He is far above the celestials;
He became Sanskirt,
Tamil of the South and the four Vedas;
He bathes in the Pancha- kavya;
He is the Lord;
He is a forester who holds fire in His palm and dances;
He graced the forester;
He is the honey that gushes From the lotus- hearts of the meditators;
He is the opulent One of infinite riches;
He is Siva;
He is the our opulent Lord of Sivapuram