Monday, July 31, 2017

Knowledge and Ignorance

பத்தாம் திருமுறை
ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்
பாடல் எண் : 5

முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.
பொழிப்புரை :

யான் நந்தி பெருமானைக் குருவாக அடைதற்கு முன், அறியத்தக்க பொருளை அறியாது கிடக்கின்ற அறிவிலிகளோடு ஒருங்கொத்திருந்தேனாக, அவரை அடைந்த பின் அவ் அறியா மையை நீக்கிச் சிவத்தை உணருமாறு என்னைக் கருவிக் கூட்டத்திற்கு அயலானாக ஆக்கி, அவ் ஆக்கப்பட்டால் யான் சொரூப சிவத்தில் தோய்ந்தபின்பு மீளக் கருவிக் கூட்டத்திற் செல்லாதவாறு உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றார்.

Knowledge and Ignorance

Even unto the witless here below
That know not knowledge from ignorance,
Was I; He taught the distinction between the two And made me know my Self;1
He transformed me into Para2
And made me known to Siva; 3
He, Nandi of hallowed name.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.