Monday, July 31, 2017

kaanatha kannudan kaelaatha kelviyum

பத்தாம் திருமுறை
ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்
பாடல் எண் : 6

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணா யெனவந்து காட்டினன் நந்தியே .

பொழிப்புரை :

`எங்கள் குரவராகிய நந்தி பெருமான், கண் இன்றியே காண்கின்ற காட்சியையும், காது இன்றியே கேட்கின்ற கேள் வியையும், சித்தம் திரியாதே நுகர்கின்ற நுகர்ச்சியையும், கூடாமலே கூடி நிற்கின்ற கூட்டத்தையும், நாணாமலே நாணுகின்ற நாணத்தையும், நாதம் இன்றியே உணரும் உணர்வையும் காண்பாயாக`` என அணுகி வந்து காட்டி யருளினார்.

Wonders Nandi Showed

``May you have,
`` He said:
``The vision that eye has seen not,
The message that ear has heard not,
The rapture that cloys not,
The union that had been not,
The Nada that ceases not,
The Bodha that arises at Nada`s End,
All these, may you have,
`` He said,
He, the Nandi of immortal fame.

Knowledge and Ignorance

பத்தாம் திருமுறை
ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்
பாடல் எண் : 5

முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.
பொழிப்புரை :

யான் நந்தி பெருமானைக் குருவாக அடைதற்கு முன், அறியத்தக்க பொருளை அறியாது கிடக்கின்ற அறிவிலிகளோடு ஒருங்கொத்திருந்தேனாக, அவரை அடைந்த பின் அவ் அறியா மையை நீக்கிச் சிவத்தை உணருமாறு என்னைக் கருவிக் கூட்டத்திற்கு அயலானாக ஆக்கி, அவ் ஆக்கப்பட்டால் யான் சொரூப சிவத்தில் தோய்ந்தபின்பு மீளக் கருவிக் கூட்டத்திற் செல்லாதவாறு உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றார்.

Knowledge and Ignorance

Even unto the witless here below
That know not knowledge from ignorance,
Was I; He taught the distinction between the two And made me know my Self;1
He transformed me into Para2
And made me known to Siva; 3
He, Nandi of hallowed name.

nillaa vaazhvu

ஐந்தாம் திருமுறை

069 திருக்கருவிலிக்கொட்டிட்டை

பாடல் எண் : 7
நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப்
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக்
கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே

நில்லாத வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா நெறியின்கண் வினைகளைச்செய விரும்பாது, நீர், கல்லால் நிறைந்த மதில் சூழ்ந்து தண்ணியதும் கொல்லேறாகிய இடபத்தினை ஊர்வானுக்குரியதும் ஆகிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக.

thinking that the transient life could be made permanent.
without committing acts in bad ways people of this world!
you reach cool Karuvilikoṭṭiṭṭai surrounded by fortified walls constructed with stones, belonging to Civaṉ who rides on a bull which can gore enemies to death.

devargal devar mahadevar

முதல் திருமுறை

042 திருப்பேணுபெருந்துறை

பாடல் எண் : 2 பண் : தக்கராகம்
மூவரு மாகி யிருவரு மாகி முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப் பல்கண நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு தண்மதிண் மூன்றுமெ ரித்த
தேவர்கள் தேவ ரெம்பெரு மானார் தீதில்பெ ருந்துறை யாரே.

குற்றமற்ற பேணு பெருந்துறையில் விளங்கும் எம் பெருமானார், அரி அயன் அரன் ஆகிய முத்தொழில் செய்யும் மூவருமாய், ஒடுங்கிய உலகை மீளத் தோற்றும் சிவன், சக்தி ஆகிய இருவருமாய், அனைவர்க்கும் தலைவருமாய் நின்ற மூர்த்தி ஆவார். நம் பாவங்கள் தீர நல்வினைகளை அளித்துப் பதினெண் கணங்களும் நின்று பணிய மேரு மலையை வில்லாகக் கொண்டு, மும்மதில்களையும் எரித்தழித்த தேவதேவராவார்.

being Piramaṉ, Māl and uruttiraṉ.
and being mayēccuraṉ and catāCivaṉ (becoming cakti and Civaṉ when the worlds absorbed into Civaṉ are again created) Civaṉ with a form who is also the paracivam who is different from them and directs them.
granting his grace to do good acts in order that the sins may end.
to be worshipped by many groups of devotees.
with the big mountain which was improvised into a bow the superior teVar to all other teVars, who burnt all the three low forts.
our god.
is in peruntuṟai which has no defects.

padikaasu kodutha peruman

ஏழாம் திருமுறை

009 திருவரிசிற்கரைப்புத்தூர்

பாடல் எண் : 6 பண் : இந்தளம்
அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
    அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
    முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
    வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
    பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே

சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், உமக்கு அகத்தொண்டு செய்யும் அந்தணர் ஒருவர் தம் நியமப்படி ஒருநாள் அரிசிலாற்றின் நீரைக் கொணர்ந்து உமக்கு ஆட்டுகின்றவர், பசியினால் மிகவும் உடல் மெலிவடைந்து, நீர்க் குடத்தையும் உமது முடியின் மேல் நழுவி விழவிட்டு, அப்பிழைக்காக நடுக்கமுற, நீர் அவரது கனவில் தோன்றி, ` அன்பனே, நீ அறியாதவாறு உன்னால் நிகழ்ந்த பிழையை நினைந்து வருந்தற்க `, ` உன் உடல் மெலிவிற்குக் காரணமான இவ்வற்கடம் நீங்குங்காறும், நாள்தோறும் உனக்குப் படியாக ஒரு காசும் கிடைக்கும் ` என்று அருளிச் செய்து, நாள்தோறும் ஒரு பொற்காசினை வற்கடத்திலும் தவறாது நிலைபெற்ற திருத்தொண்டினைச் செய்த அப்புகழ்த்துணையாரது கையிற் சேரும் படி செய்து, அவரை ஆட்கொண்டருளினீர்.

the brahmin who was doing services in the sanctuary.
was bathing you bringing water from the river Aricil.
when he trembled causing the water pot to fall on your head on account of excessive faintness due to hunger you felt happy by putting into the hands of Pukaḻttuṇai who was firm in his good acts, having apportioned to him and telling in his dream you will receive as daily batta a gold coin till the end of the famine This story is hinted by Campantar in the 7th verse of the decade on this shrine;
this verse gives more details about that;
the name of the priest is also mentioned.

vadamozhiyum then tamizhlum

ஆறாம் திருமுறை

087 திருச்சிவபுரம்

பாடல் எண் : 1

வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண்
    வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண்
    ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
    கருதுவார் இதயத்துக் கமலத் தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே

சிவபுரத்து எம் செல்வன் ஆம் சிவபெருமான், வானிடத்து உறைபவனும், தேவர்களுக்கு மேலானவனும், வட மொழியும் இனிய தமிழ் மொழியும் மறைகள் நான்கும் ஆனவனும், ஆன்ஐந்தாம் பஞ்சகவ்வியத்தில் ஆடினவனும், கானவனாகிய கண்ணப்பனுக்கு அருள் செய்தவனும், தன்னைக் கருதுவார் இதயத் திடத்து, தாமரை மலரிடத்து ஊறும் தேன் போன்றவனும், முன்பு இல்லாது, பின்பு காரணத்தாற் சென்றடையும் பெற்றியதன்றி இயல்பாகவே உள்ள செல்வனும் ஆவான்.

He is of the empyrean;
He is far above the celestials;
He became Sanskirt,
Tamil of the South and the four Vedas;
He bathes in the Pancha- kavya;
He is the Lord;
He is a forester who holds fire in His palm and dances;
He graced the forester;
He is the honey that gushes From the lotus- hearts of the meditators;
He is the opulent One of infinite riches;
He is Siva;
He is the our opulent Lord of Sivapuram