Tuesday, August 1, 2017

mouna nilai

பத்தாம் திருமுறை
ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்

பாடல் எண் : 7
மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாம்மொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே .

பொழிப்புரை :

மௌன நிலை கைவரப் பெற்றோர்க்குப் பரமுத்தி உண்டாகும். அதற்கு முன்னே பரசித்திகள் உளவாம். நாதத்தின் பிணிப்பும் விட்டொழியும். இறைவனது ஐந்தொழில்களில் இறுதிய தாகிய அருளால் தொழிலும் நிகழ்ந்து, அவை அனைத்தும் இயற்றப் பட்டு முடியும்.,

Mauna`s Emanations

They that have mastered the Divine
Mauna (Silence),
Shall reach the very bliss of Mukti;
And all Siddhis of themselves seek them
Into the Silent Word* would in perfection evolve;
Mastering Mauna thus,
They shall gain the power
For the five divine acts to perform
Creation, Preservation, Dissolution,
Obfuscation and Grant of Grace.

aandugal pala kazhinthana

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை

பாடல் எண் : 2
ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே  .

மக்கள் பிறந்தபின் சில ஆண்டன்றிப் பல ஆண்டுகள் கழியினும், சிவபெருமானை அறிதலைக் கடனாகக் கொண்டு முயன்று அறிகின்றவர் யாரும் இல்லை. அவ்வாற்றால் இதுகாறும் நீடுசென்ற காலங்கள் இனியும் நீடுசெல்லுமாயினும், அவர் அவனை அறியமுயல்வாரல்லர்.

Even a Life-time is not Enough to Know Him

The years roll on; but none the Lord in his bosom holds,
None to probe and perceive Him profound;
Even if Time`s thread be to the utmost stretched,
Still they know not the spark that kindles all the lamps around.

siva suriyan

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை


பாடல் எண் : 1
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே

நாள்தோறும், கிழக்கில் அழகிதாய்த் தோன்றிப் பின் வானில் செல்லுகின்ற பேரொளியும் வெப்பமும் உடையதாய ஞாயிறு, பின்பு மேற்கில் வெப்பமும், ஒளியும் குறைந்து சாய்தலைக் கண் ணொளியில்லாத மக்கள் ஒளியில்லாத அக்கண்ணால் கண்டும் காணாதவராகின்றனர். அதுபோல, அகன்ற உலகில் அறிவில்லா திருக்கும் மக்கள், குழவியாய்ப் பிறந்த பசுக்கன்று அப்பொழுது துள்ளி ஆடிப் பின்பு சில நாளில் வளர்ந்து எருதாகி நன்கு உழுது, பின்னும் சில நாள்களுக்குப் பிறகு கிழமாய் எழமாட்டாது விழுதலைக் கண்ணாற் கண்டும், பிறந்த உடம்புகள் யாவும் இவ்வாறே இளமை நீங்கி முதுமை யுற்று விழும் என்பதை அறியாதவராகின்றனர்.

TRANSITORINESS OF YOUTH
Rising Sun Sets; Glowing Youth Fades

They see the sun rises in the east and sets in the west.
Yet blind of eye, the truth they ne`er apprehend.
The tender grows, fattens for a while and dies;
But this wonder-pageant of the world they do not comprehend.