Tuesday, May 30, 2017

paalanaai kazhintha naalum


Thirumurai 4.067 திருக்கொண்டீச்சரம்

பாடல் எண் : 9
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே.

சேல்கள் உலாவும் வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரத்துப் பெருமானே! சிறுவனாய் இருந்து கழிந்த பாலப் பருவத்தும், குளிர்ந்த மலர் மாலைகளை அணிந்த மகளிருடைய தொடர்பு உடையவனாய்க் கழிந்த வாலிபப் பருவத்தும், மெலிவோடு கிழப் பருவம் வரக் கோலை ஊன்றிக் கழிந்த முதுமைப் பருவத்தும் குறிக்கோள் ஏதும் இன்றி வாழ்ந்து கெட்டுப் போயினேன்.

in the days that have elapsed as a youth.
in the days that elapsed living with ladies who adorn themselves with cool flowers and in the days when old age sets in with weakness, to walk with a stick.
I ruined myself without any aim to reach you.
Civaṉ in Tirukkoṇṭīccaram which is surrounded by tanks in which cēl roam about.

nanavilum kanavilum

Thirumurai 3.021 திருக்கருக்குடி

பாடல் எண் : 1 பண் : காந்தார பஞ்சமம்

நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
நினைவிலும் எனக்குவந் தெய்து நின்மலன்
கனைகடல் வையகம் தொழுக ருக்குடி
அனலெரி யாடுமெம் அடிகள் காண்மினே.

நான் விழித்திருக்கும் பொழுதும், கனவு காணும்பொழுதும், உள்ளொளியாக நெஞ்சில் நின்று நினைவிலும் எனக்குக் காட்சி தரும், இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனாகிய இறைவனாய், ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தோர் போற்றும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற எம் தலைவரான சிவபெரு மானைத் தரிசித்துப் பயனடைவீர்களாக.

sivapuram selvan


Thirumurai 6.087 திருச்சிவபுரம்


பாடல் எண் : 1
வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண்
    வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண்
    ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
    கருதுவார் இதயத்துக் கமலத் தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே

சிவபுரத்து எம் செல்வன் ஆம் சிவபெருமான், வானிடத்து உறைபவனும், தேவர்களுக்கு மேலானவனும், வட மொழியும் இனிய தமிழ் மொழியும் மறைகள் நான்கும் ஆனவனும், ஆன்ஐந்தாம் பஞ்சகவ்வியத்தில் ஆடினவனும், கானவனாகிய கண்ணப்பனுக்கு அருள் செய்தவனும், தன்னைக் கருதுவார் இதயத் திடத்து, தாமரை மலரிடத்து ஊறும் தேன் போன்றவனும், முன்பு இல்லாது, பின்பு காரணத்தாற் சென்றடையும் பெற்றியதன்றி இயல்பாகவே உள்ள செல்வனும் ஆவான்.

பாடல் எண் : 6
பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
    பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற
நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்
    நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றிப்
    பிரியாது பலநாளும் வழிபட் டேத்தும்
சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்
    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், விளைநிலமானவனும், விளைநிலத்தில் பயிரானவனும், பயிரை வளர்க்கும் மழையானவனும், அம்மழைத்துளியில் நின்ற நீரானவனும், தன் சடைமேல் நீர்நிற்கச் செய்தவனும், நிலவேந்தர் தம் ஆட்சியால் தாம் பெறும் பரிசாகத் தம் மனத்தில் எஞ்ஞான்றும் நினைக்குமாறு ஓங்கும் புகழானவனும், பிறை போன்ற விளைந்த பல்லினை உடைய வெள்ளைப் பன்றியாகிய திருமால் இந்நகரின் நீங்காது பலநாளும் வழிபட்டு வணங்கும் புகழினனானவனும், சிறப்புடைய தேவர் எல்லாருக்கும் இன்பக் காரணன் ஆனவனும் ஆவான்

He is of the empyrean;
He is far above the celestials;
He became Sanskirt,
Tamil of the South and the four Vedas;
He bathes in the Pancha- kavya;
He is the Lord;
He is a forester who holds fire in His palm and dances;
He graced the forester;
He is the honey that gushes From the lotus- hearts of the meditators;
He is the opulent One of infinite riches;
He is Siva;
He is the our opulent Lord of Sivapuram

He is the earth and the crops of the earth;
He is the rain That fosters the crops;
He is the water of the rain;
He sported the water on His crest;
His is the name that soars Aloft,
guerdon-like,
in the memory of the Kings of earth;
He is the glorious One that is adored and hailed For days on end by the white Boar of crescentlike tusks,
That parted not from Him;
He is Siva to all The glorious Devas;
He is our opulent Lord of Sivapuram.

Saturday, May 20, 2017

sivaanantham

பத்தாம் திருமுறை

ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பாடல் எண் : 15
சிவமான ஞானந் தெளியஒண் சித்தி
சிவமான ஞானந் தெளியஒண் முத்தி
சிவமான ஞானம் சிவபர தேகம்
சிவமான ஞானம் சிவானந்தம் நல்குமே .

சிவஞானத்தைத் தெளிய உணர்தலாலே (மூன்றாம் தந்திரத்திற் சொல்லப்பட்ட) பரசித்திகளும், பின் பரமுத்தியும் உளவாகும். அவை முறையே அருளேதனுவாய் நிற்றலும், ஆனந்தத்து அழுந்தலுமாம்.

Siva Jnana Leads to Sivananda

When you realize the Jnana of Siva
You shall achieve the Siddhis luminous
When you realize the Jnana of Siva,
You shall attain the Mukti resplendent;
When you Jnana of Siva reaches to Siva Supreme,
Then shall it yield the Bliss of Sivananda.

inbam pirappinai

பத்தாம் திருமுறை

ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பாடல் எண் : 14
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனே எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே .

இவ்வுடம்பு நீங்கிய பின்பு அடையுமாறு வைத்துள்ள இன்பத் தோற்றத்தை அதற்கு முன்பே அடையும்படிச் செய்த ஞானகுரு எங்கள் சிவபெருமானே. அவன் தன்னை நிலை பேறாக அடைதற்கு வைத்த மனம் அங்ஙனம் அடையும் காலத்துத் தானே குருவாய் வெளிவந்து அருள் செய்வான்.

When God Reveals Himself

This life of pleasure here below
The Lord for you of yore ordained
That you may the Greater Pleasure attain,
Where your mind reaches to Him in resolve
Then of Himself, He reveals to you.

Saturday, May 6, 2017

Guruveh Sivam

பத்தாம் திருமுறை
ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பாடல் எண் : 9
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே .

Guru God Identity

Guru is none but Siva — thus spoke Nandi;
Guru is Siva Himself — this they realize not;
Guru will to you Siva be,
And your Guide too;
Guru in truth is Lord,
That surpasses speech and thought, all.

sivane sivagnaani

பத்தாம் திருமுறை
ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பாடல் எண் : 8
சிவனே சிவஞானி யாதலால் சுத்த
சிவனே எனஅடி சேரவல் லார்க்கு
நலமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே .

Siva Guru Like Siva Grants Supreme Liberation

Siva Jnani is none but Siva Himself;
And they who seek his feet as Siva`s
Shall in sooth the wondrous Tattva mukti gain;
They shall no more be in the cycle of births;
Sure their reward, the Liberation Supreme.

satguru suththa sivame

பத்தாம் திருமுறை
ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பாடல் எண் : 4
எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார்கள் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலால்
சொல்லார்ந்த சற்குரு சுத்த சிவமே .

உலகங்கள் எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற சுத்த சிவன், தனது அருள் காரணமாக, மலம் நீங்கியோரது சுத்தான்ம சைதன் னியத்தில் தயிரில் நெய்போல இனிது விளங்கிநின்று, பக்குவி களுக்கு உண்மை ஞானத்தை அருளுதலாலும், ஏனைய பலர்க்கும் அவரவர்க்கு ஏற்ற பெற்றியால் அருள்புரிந்து ஆட்கொண்டு இவ் விடத்தே நலம் செய் தலாலும் சொல்லுதல் நிறைந்த ஞானகுரு அந்தச் சுத்த சிவனேயாவன்.

Guru-Siva Parallelism

He is beyond worlds all
Yet, here below, He bestows His grace abundant
On the good and the devout,
And in love works for salvation of all;
Thus is the Holy Guru
Whose praise is beyond speech
Like Siva, the Being Pure.