Friday, August 31, 2018

தலை முதல் கால் வரை

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 13
நாலுள்நல்ஈ சானம் நடுவுச்சி தானாகும்
தாணுவின் றன்முகந் தற்புரு டம்மாகும்
காணும்அ கோரம் இருதயம் குய்யமாம்
மாணுறு வாமம் ஆம் சத்திநற் பாதமே .

கிழக்கு முதலிய நான்கு திசைகளில் உள்ள முகங்கட்கு நடுவேயுள்ள முகமாய் நிற்கின்ற `ஈசானம்` என்னும் சத்தி சதாசிவனுக்கு அந்த முகமாய் நிற்றலேயன்றி, நடுத்தலையாகியும் நிற்கும். அவ்வாறே ஏனைய, `தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோ சாதம்` என்னும் முகமாய் நிற்கின்ற சத்திகளும் அம்முகங்க ளாதலேயன்றிச் சதாசிவனது `முகம், இருதயம், குய்யம், பாதம்` என்னும் அவ்வுறுப்புக்களாயும் நிற்கும்.

How Sakti dwells in the Five faces of Sadasiva

In the shining Isana face is Sakti`s Crown;
In the Tatpurusha face is Her Visage
In the Aghora is Her Heart and Waist;
In the Vama face are Her Feet blessed.

அன்னை முகம் ஐந்து

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 12
சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி
பச்சிமம் பூருவம் தற்புரு டன்உரை
தெற்கில் அகோரம் வடகிழக் கீசனே .

சிவனது சத்தி ஒன்றே ஐந்தாகி அவனுக்கு மேற் கூறிய பக்கங்கள் ஐந்திலும் உள்ள ஐந்து முகங்களாய் நிற்கும். அதனால் அம்முகங்களின் பெயரானே அச்சத்திகளும் குறிக்கப்படும்.

Names of the Five Faces of Sadasiva

To recount the Five Faces where His Grace abounds
Thus it is:
The Northward Face is Vama
The Westward Face is Sadyojata
The Eastward Face is Tatpurusha
The Southward Face is Aghora
The Upward Face is Isana.

கூறுமின் நூறு போற்றிகள் நாளும்

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 10
கூறுமின் நூறு சதாசிவன் எம்மிறை
வேறுரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்
ஏறுரை செய்தொல் வானவர் தம்மொடும்
மாறுசெய் வான்என் மனம்புகுந் தானே

சதாசிவனாய் நிற்பவனைத் துதியாது வேறு சொற்களைச் சொல்லிக் காலம் போக்குபவரும், அந்தச் சதாசிவமூர்த்தி அவரவர்க்கு ஏற்புடைத்தாக அளித்து ஏவுகின்ற தொழில்களைச் செய் பவரும் ஆகிய வானவரது நெறியோடு எனது நெறிமாறுகொளச் செய்தற் பொருட்டு அவன் எனது நெஞ்சத்தில் புகுந்தான். ஆதலின் அவனே நாம் வழிபடும் கடவுளாயினான். (என்வழி நிற்பீராயின்) நீங்களும் அவனது திருப்பெயர்கள் பலவற்றையும் கூறி அவனை வழிபடுங்கள்.

Sadasiva is Our Lord

``Sadasiva is our Lord``—
Say this times hundred;
Anything else you try to say,
He will still be beyond it;
He suffers not those Gods
Who themselves exalt;
He, who my heart entered.

uruvai aruvai engum ulathai

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 9
தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவ மெல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவ மாகும் சதாசிவந் தானே .

`தத்துவம்` எனப்படுவன காரியப் பொருள்கள் அனைத்திற்கும் மூலங்கள் ஆதலின், அவையே `சரம், அசரம்` என்னும் இருதிறப் பொருளாயும் பரிணமிக்கும். தத்துவங்கள் யாவும் உயிர்கட்குத் துன்பம் நீங்கி, இன்பம் தோன்றுதற் பொருட்டே உள்ளனவாம், இவ்வாறு அனைத்துப் பொருளுமாய் நிற்கின்ற அனைத்துத் தத்துவங்களும் ஆவது சதாசிவலிங்கம்.

Sadasiva is Tattva (Truth) Real

Formless is the Tattva primal
Formed, it is the world, animate and inanimate;
A source of pleasure then indeed it is;
Tattva is all and pervasive,
Sadasiva is Tattva (Truth) Real.

sakthi sivam sadasivam

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 8
சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவம்மிக்க தாபர சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவம்தத் துவம்முப்பத் தாறே .

அண்டலிங்கத்துள் பூமி பீடமாயும், வானம் பீடத்தின்மேல் உள்ள இலிங்கமாயும் அமையும். (எனவே, சதாசிவ லிங்கத்துள் பீடத்தில் பூமியும், இலிங்கத்துள் வானமும் அடங்கு வனவாம்.)
இனி இறைவன் உயிர்கள் பொருட்டுக் கொள்கின்ற `தாபரம், சங்கமம்` என்னும் இருவகை வடிவங்களுள் தாபரம் சிவக்கூறும், சங்கமம் சத்திக்கூறும் ஆகும். (தாபரம் - பெயர்ந்து நிற்பன; திருவுருப் படிமங்கள். சங்கமம் - உலாவுவன; அடியார்கள்.)
இறைவன் கொள்கின்ற திருமேனிகளில் உருவத் திரு மேனிகள் சத்திக் கூறும், அருவத் திருமேனிகள் சிவக்கூறும் ஆகும்.

Sakti is the Kinetic and Siva the potential

Aspects of God-head
Sakti is this wide world
Sakti is this universe vast
Sakti-Siva conjoint is the Kinetic and Potential
Sakti is the Formed;
Siva the Formless;
Sakti-Siva Tattvas are six and thirty true.

ainthumugamaana porul

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 6
நடுவு கிழக்குத் தெற்குஉத் தரம்மேற்கு
நடுவு படிகம்நற் குங்கும வன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற் கருளிய முகம்இவை அஞ்சே .


இவ்வதிகாரத்து முதல் மந்திரத்துள், `சதாசிவ லிங்கத்திற்கு ஐந்து முகங்கள் உள்ளன எனக் கூறிய முகங்கள் ஒரு வரிசையில் இல்லாமல், நடுவு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு` என்னும் திசைகளில் பொருந்தியுள்ளன.
அவற்றுள் நடுவண் உள்ள முகம் படிகம் போன்ற நிறத்தையும், கிழக்கில் உள்ள முகம் குங்குமம் போன்ற நிறத்தையும், வடக்கில் உள்ள முகம் செவ்வரத்தம் பூப்போன்ற நிறத்தையும் மேற்கில் உள்ள முகம் பால்போன்ற நிறத்தையும் உடையன.
(கிழக்கில் உள்ள முகம் பொன் போன்ற நிறத்தை யுடையதாகச் சொல்லப்படுதலால், இங்கு, ``குங்குமம்`` என்பதற்கு, `கலவைச்சாந்து` எனப்பொருள் கொள்ளுதல் பொருந்தும்.)
இந்த ஐந்து முகங்களுடன் தோன்றியே சிவன் அடியேனுக்கு அருள்புரிந்தான்.

The Five Faces of Sadasiva and their Hues

Central, East, South, North and West
These the Five Faces of Sadasiva;
The Central Face is of crystal hue;
The Eastward Face is crimson unto Kum-Kum
The Southward Face is dark like thick pitch
The Northward Face is red like Aratham flower
The Westward Face is white like milky hue;
Thus did He reveal to me,
His lowly vassal.

samaya nyanamum saathira vedamum

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 4
அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே .


பத்துத் திசைகளாய் அமைந்த அந்த உலகத்துள்ளே தான் வேதங்களின் ஆறு அங்கங்களும், அந்த அங்கங்கட்கு முதலாகிய நான்கு வேதங்களும், அந்த வேதங்களின் பொருளைச் சரியை முதலிய நான்கு பாதங்களாய் நின்று தெளிய உணர்த்துகின்ற சிவாகமங்களும் பொருந்தி நிற்கின்றன.

When Sakti further evolves

In that Space thus opened up
The Six Vedangas took their place;
In that Space thus opened up
The Four Vedas took their place;
In that Space thus opened up
The Four Paths beginning with Chariya
Took their place;
In that Space thus opened up
The Saiva Truth the Four Paths comprehended
Took its place.

sadasivame sagalamum aame

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 2
வேதா நெடுமால் உருத்திரன் மேல்ஈசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே .

சதாசிவந்தானே கீழ் நின்று ஒடுக்க முறையில் மேல் நோக்கி எண்ணப்படுகின்ற `அயன், மால், உருத்திரன், மகேசுரன்` என்னும் நால்வராயும், தனக்குமேல் முறையே நிற்கும் `விந்து, நாதம், சத்தி, சிவம்` என்னும் நால்வராயும் இருக்கும். அதனால் அனைத்து மூர்த்தங்கட்கும் இது பொது மூர்த்தமாகும்.

Sadasiva comprehends all Nine God-Forms

Brahma, Vishnu, Rudra, Mahesa,
And the Five-faced Lord above,
Bindu, Nada, Sakti Primal, and Siva
—All these are but Sadasiva in general.

sadasivalingam

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 1
கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும்
தேடும் முகம்ஐந்தும் செங்கயல் மூவைந்தும்
நாடும் சதாசிவ நல்லொளி முத்தே .

சதாசிவ வடிவம் இரண்டு திருவடி, பத்துக் கை, ஐந்து முகம், முகம் ஒன்றற்கு மூன்று கண்களாகப் பதினைந்துகண் இவற்றை உடையதாகும்.

Sadasiva form with Five Faces

His twin Feet are planted on earth below;
The ten hands, the holy in praise sing,
In directions all spread;
Five His Faces that are sought,
Five times three his eyes fiery;
Thus is Sadasiva that you seek
The Pearl that is lustrous, beyond, beyond compare.

pinda lingam

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்

பாடல் எண் : 1
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே .

மக்களது உடம்புகள் யாவும் சிவலிங்க வடிவம்; சிதாகாச வடிவம்; சதாசிவ வடிவம்; திருக்கூத்து வடிவம்.

Human form is Siva Linga

The Human Form is like Siva Lingam
The Human Form is like Chidambaram
The Human Form is like Sadasivam
The Human Form is like the Holy Dance, forsooth.