Wednesday, November 9, 2016

panmalar thoovip panivan

ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்



பாடல் எண் : 13
நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
பணிகினும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகிய தொன்றறி யாத ஒருவன்
அணுகும் உலகெங்கும் ஆவியு மாமே

தனு காரணங்களின் வழிவருபவற்றுள் ஒன்றையும் நோக்குதல் இல்லாத சத்திநிபாதன், தன்னை யார் அணுகினாலும் அவர்கட்கு முதிர்ந்த ஞானம் ஒன்றையே உணர்த்துவன். சிவனைப் புறத்தில் மலர் தூவி வழிபடினும் படுவான். தான் அடையும் எவ்விடத் திலும் அங்கு உள்ளார்க்கு உயிர்போலச் சிறந்து விளங்குவான்.

Lord Draws Near When Grace Visits

Seek close,
That soft Flame of Wisdom shall grant you
The peerless gift of Grace;
When you adore Him
Do so, showering blooms at His Feet
As I do,
Then shall He draw near you
Whom nothing can ever near;
He is truly the life pervasive of worlds all.

pirappai arukkum perunthavam nalkum

ஐந்தாம் தந்திரம்  - தீவிரம்

பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே. 11

பொழிப்புரை:

இமய மலையில் தோன்றி வளர்ந்த மகளும், அபர ஞான பரஞானங்களையே இருதனங்களாகக் கொண்டு உயிர்கட்கு அந்த ஞானமாகிய பாலை ஊட்டி வளர்ப்பவளும் ஆகிய சத்தி, மேற் கூறியவாறு முதல்வனைக் கண்ணுற்று நிற்கும் ஞானத்தால் வழிபடு கின்றவர்கட்குத் தவங்கள் எல்லாவற்றினும் சிறந்த தவமாகிய சிவ புண்ணியத்தை வழங்குவாள்; அதனால் பிறப்பை ஒழிப்பாள்; சிவனை மறக்கும் மறதியாகிய அஞ்ஞானத்தை நீக்குவாள்; யாவரும் அவரை வழிபடும் நிலையில் உயர்த்து வைப்பாள்.


Tuesday, November 8, 2016

thaiyalum thaanum thani nayagam

ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்



பாடல் எண் : 8
எய்திய காலங்கள் எத்தனை யாயினும்
தையலும் தானும் தனிநா யகம்என்பர்
வைகலும் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் காட்டது வாமே .

பொழிப்புரை:

`பிறந்து இறந்து உழன்ற காலங்கள் எத்துணையன கழியினும், அவ்வுழலலை நீக்கி நிலைபெறச் செய்யும் தலைவர் சத்தியும், சிவனுமாய அவரன்றிப் பிறர் இலர்` என, அனுபவம் வந்தோர் அறுதியிட்டுரைப்பர். இனித் தன்னை நாள்தோறும் தப்பாது வழிபடுவோர்க்குச் சிவன் கைமேல் பயனைப் பெறுவிக்கின்ற துணைவனாய் விளங்குவான்.

Siva and Sakti are One and Same

Infinite the passage of Time`s Flood
Yet they say, He and His Consort stand one;
For them that adore Him daily in devotion,
He is verily the unfailing proof
Of labour readily rewarded.

seyyan kariyan

ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்

பாடல் எண் : 7


செய்யன் கரியன் வெளியன் பசியனென்
றெய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
ஐயனற் கண்ணல் லடுகரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே.
பொழிப்புரை :

சிவனை யடையும் வேட்கை யுண்டாயினோரே, அவனை, `சிவப்பன்` என்றோ, `கறுப்பன்` என்றோ. `வெளுப்பன்` என்றோ, `பச்சையன்` என்றோ நன்கு உணரவல்லவராவர். ஆதலால், அவனை, `நெருப்புமிழுங் கண்களையுடைய பெரிய கொலை யானையை யாவரும் வியக்கும் வண்ணம் உரித்து அத்தோலைப் போர்த்த வெவ்விய கையை உடையவன்` என்று அறிந்து அவனை அடையும் வேட்கையுடையீராகுங்கள்.

Lord is Soul`s Redeemer

He is the Red One (Destroyer)
The Dark One (Preserver)
The White One (Creator)
The Green One (Redeemer)
They who know Him thus, free of doubt
Of a certain shall seek Him;
Remember this;
His are the sinewy arms
That skinned the dark massive elephant
And donned it for a vesture;
Do therefore, seek Him and adore Him.