Tuesday, March 25, 2014

God helped Thirunavukkarasar and feed him with rice

The shrine is elaborately praised by the Saivite Trinity – Tirugnanasambandar, Tirunavukkarasar and Sundarar.  This is the 61st Lord Shiva temple on the southern bank of Cauvery praised in Thevaram hymns.

The Vimana above the sanctum sanctorum is called Badra Vimana.  Vinayaka in the temple is praised as Lord Vasantha Vinayaka.  The temple has five prakaras-corridors.  There are seven sacred springs in the temple – Visalakshi, Yama, Kalyana, Agni, Deva, Appar and Maniankarunai.  Vinayaka in the prakara with Lord Shiva and Lord Perumal Senthamarai Kannan and Lord Dakshinamurthy with Nandhi below Him are the differences in this temple comparing the general traditions in other Shiva temples.  Swayambu Nandhi is near the flag post-Kodimaram. Sacred tree of the temple is plaintain.  

After Lord Shiva hit Yama the God of Death at Tirukadayur, no deaths occurred in the world thus increasing the burden on earth to unmanageable level.  Mother Earth appealed to Lord Shiva of her pain of bearing unbearable weight.  On a Thai Poosam day- Poosam star day during January-February, Lord Shiva made Yama appear under His feet as a child, instructed him to discharge his duties with impeccable sense of Dharma and reinstated him in the job.  The Yama shrine in the prakara of the temple represents this event.  Lord Shiva and Mother Ambica with Lord Muruga in Somaskanda form are in this shrine with Yama as a child under Their feet.  People celebrate their 60th birth day and perform longevity prayers in this shrine in large numbers.


Saint Tirunavukkarasar was on his way to worship Lord Gneelivana Nathar.  He stood exhausted at a place due to hunger.  A priest appeared before him with rice-Annam or Choru in Tamil.  The priest also assured the saint to lead to the temple but disappeared on the way.  The saint was shocked and prayed to Lord Shiva.  Lord granted darshan to Tirunavukkarasar and told him that He was the priest who helped him.  At the request of Tirunavukkarasar, Lord stayed here in the form of Linga named Chottrudaya Easwarar – God with Rice.  This shrine is at the entrance of the temple separately.  This event is celebrated in the temple on the Avittam star day in Chithirai-April-May.

There is no Navagraha-nine planets-shrine in the temple as Yama is their Lord.  Devotees pray the deepas-lamps before Nandhi as Navagrahas.  Rajagopuram of the temple is called Ravana Gate.  Below the gopuram are nine steps to reach Lord’s shrine. It is said that these steps represent Navagrahas that were at the command of Ravana obeying his orders.

Sage Vasishta used to worship Lord Chidambaram Nataraja during the Arthajama (night) puja every day.  Once he had to stay in this place as he was late.  He appealed to Lord to grant his dance darshan to him.  Obliging His devotee Lord granted the darshan the sage wished.  Remembering this event, Lord Nataraja is in the temple in a painting before the shrine with Sage Vasishta.  Hence, the place is also revered as Mela Chidambaram.

Seven virgins-Saptha Kannikas – Brahmi, Maheswari, Gaumari, Vaishnavi, Varahi, Indrani and Chamundi came to this place before their wedding seeking the darshan of Mother Ambica.  Mother appeared before them and said that they would be  married with good matches and enjoy a happy life.  Mother also granted the boon that they would be in the place in the form of plantain trees enjoying Her darshan.  Accordingly, they stayed here.  Lord Shiva too graced the place in His Linga form.

Shri Gneelivaneswarar Temple, Tiruppaigneeli, Trichy

Moolavar : Gneelivaneswarar
Amman : Visalakshi, Neelnedungannayaki
Thala Virutcham : Kalvazhai – Plantain tree
Theertham : Seven theerthams
Agamam : Kameekam
Old year : 1000-2000 years old
Historical Name : Vazhai Vana Nathar, Swethagiri
City : Tirupaigneeli
District : Tiruchchirappalli

Download pathigam Thirupaijali.mp3 http://yadi.sk/d/hjgO4C2QLDTdd
Thirumurai 3.14

திருப்பைஞ்ஞீலி

பாடல் எண் : 1

ஆரிடம் பாடில ரடிகள் காடலால்
ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.

பாடல் எண் : 2

மருவிலார் திரிபுர மெரிய மால்வரை
பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான்
உருவிலான் பெருமையை யுளங்கொ ளாதவத்
திருவிலா ரவர்களைத் தெருட்ட லாகுமே.

பாடல் எண் : 3

அஞ்சுரும் பணிமல ரமுத மாந்தித்தேன்
பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான்
வெஞ்சுரந் தனிலுமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே.

பாடல் எண் : 4

கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்
பேடல ராணலர் பெண்ணு மல்லதோர்
ஆடலை யுகந்தவெம் மடிக ளல்லரே.

பாடல் எண் : 5

விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை
சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே.

பாடல் எண் : 6

விடையுடைக் கொடிவல னேந்தி வெண்மழுப்
படையுடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவலான்
துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாச்
சடையிடைப் புனல்வைத்த சதுர னல்லனே.

பாடல் எண் : 7

தூயவன் தூயவெண் ணீறு மேனிமேல்
பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா
மேயவன் வேய்புரை தோளி பாகமா
ஏயவ னெனைச்செயுந் தன்மை யென்கொலோ.

பாடல் எண் : 8

தொத்தின தோள்முடி யுடைய வன்றலை
பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்
முத்தினை முறுவல்செய் தாளொர் பாகமாப்
பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே.

பாடல் எண் : 9

நீருடைப் போதுறை வானு மாலுமாய்ச்
சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்
பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய
தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.

பாடல் எண் : 10

பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையும்
சாலியா தவர்களைச் சாதி யாததோர்
கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்
ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே.

பாடல் எண் : 11

கண்புனல் விளைவயற் காழிக் கற்பகம்
நண்புண ரருமறை ஞான சம்பந்தன்
பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்
உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே.


திருப்பைஞ்ஞீலி

பாடல் எண் : 1

ஆரிடம் பாடில ரடிகள் காடலால்
ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.
பொழிப்புரை :

சிவபெருமான் இருடிகளுக்காக வேதத்தை அருளிச் செய்தவர் . வசிப்பது சுடுகாடானாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர் . அணிவது கோவண ஆடை . சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர் . இடபவாகனத்தில் ஏறியவர் . தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யத் திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்தருளுகின்றார் .
குறிப்புரை :

ஆரிடம் - இருடிகளுக்கு அருளிய நூலாகிய வேதத்தை . பாடிலர் - பாடலாகவுடையவர் . காடு அலால் - புறங்காடு அல்லாமல் . ஓர் இடம் இலர் - ஓர் இடம் குறை இலர் . அதனால் ஒரு குறைவும் இல்லாதவர் . நீர் இடம் சடை - தண்ணீர் இருக்கும் இடம் சடை ; பாரிடம் - பூதம் ; பாடுவது . வேதம் , தங்குவதும் புறங்காடு . வேலை செய்வது பூதம் . அத்தகையார் வீற்றிருப்பது திருப்பைஞ்ஞீலியாகும் என்பது . பயிலல் , முதல் நிலைத் தொழிற்பெயர் .
பாடல் எண் : 2

மருவிலார் திரிபுர மெரிய மால்வரை
பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான்
உருவிலான் பெருமையை யுளங்கொ ளாதவத்
திருவிலா ரவர்களைத் தெருட்ட லாகுமே.
பொழிப்புரை :

பகையசுரர்களின் முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு மேரு என்னும் பெருமையுடைய மலையினை வில்லாக வளைத்த சிவபெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . இத்தகைய வடிவமுடையவன் அவன் என்று வரையறை செய்து உணர்த்த இயலாத அப் பெருமானுடைய பெருமையை உணராதவர் அவனருளைப் பெறாதவர் . அவர்களின் அறிவைத் தெளிவித்தல் இயலுமா ?
குறிப்புரை :

மருவிலார் - பகைவர் . பரு வில் ஆ - பருத்த வில்லாதலின் . குனிதல் - வளைதல் . பைஞ்ஞீலிமேவலான் - திருப்பைஞ்ஞீலியில் மேவுதலையுடையவன் . உருஇலான் - வடிவமில்லாதவன் . அவன் பெருமையையுணர்பவர் திருவுடையவர் . உணர்கிலாதவர் ; திருவிலாதவர் . அவர்களை அறிவுரை கூறித்தெளிவிக்க இயலாது என்பது பாசுரத்தின் இறுதிப் பகுதியின் பொருள் . உருவிலான் - சிவனுக்கு ஒரு பெயர் . உளங்கொளல் - உணர்தல் .
பாடல் எண் : 3

அஞ்சுரும் பணிமல ரமுத மாந்தித்தேன்
பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான்
வெஞ்சுரந் தனிலுமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே.
பொழிப்புரை :

அழகிய வண்டு மலரை அடைந்து தேனைக் குடித்துப் பஞ்சுரம் என்னும் பண்ணைப் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் , வெப்பம் மிகுந்த காட்டில் உமாதேவி அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன் .
குறிப்புரை :

அம் சுரும்பு அணிமலர் அமுதம் மாந்தித் தேன் பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி - அழகிய சுரும்பு என்னும் சாதி வண்டினம் மலரை அடைந்து தேனைக்குடித்துத் தேன் என்னும் சாதிவண்டினங்களுக்குப் பஞ்சுரம் என்னும் பண்ணைப்பாடிப் பழக்கும் திருப்பைஞ்ஞீலி . வெம்சுரம் - வெப்பமாகிய காடு . மேவலான் . மேவல் ஆன் - தங்குதலையுடையவன் . கொள்கையே ; இங்கு என்னே என்னும் பயனிலை அவாய்நிலையாற் கூடி முடிந்தது .
பாடல் எண் : 4

கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்
பேடல ராணலர் பெண்ணு மல்லதோர்
ஆடலை யுகந்தவெம் மடிக ளல்லரே.
பொழிப்புரை :

காந்தள் மலர்களிலும் , முல்லை நிலத்திலுள்ள காடுகளிலுமுள்ள முல்லை மலர்களின் மீதும் அமர்ந்திருக்கும் வண்டுகள் செய்யும் ரீங்காரம் பண்ணிசைபோல் ஒலிக்க , திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் அலியல்லர் . ஆணுமல்லர் . பெண்ணுமல்லர் . திருநடனம் புரிவதில் விருப்பமுடைய அப்பெருமானார் எங்கள் தலைவர் ஆவார் .
குறிப்புரை :

கோடல் - காந்தள் புறவணிகொல்லை முல்லைமேல் பாடல் வண்டிசை முரல் பயில் பைஞ்ஞீலி - முல்லை நிலத்தைச் சார்ந்த காடுகளில் முல்லை மலரின் மேல் பாடுதலையுடைய வண்டினம் இசைமுரலுதல் பொருந்திய திருப்பைஞ்ஞீலி . முரலுதல் மூக்கினால் - ஒலித்தல் . முரலுதல் என்ற சொல் பகுதியளவாய் முரல் என்று நின்றமை முதனிலைத் தொழிற் பெயர் . பயில் பைஞ்ஞீலி - வினைத்தொகை .
பாடல் எண் : 5

விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை
சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே.
பொழிப்புரை :

விழியிலாத பற்களோடு கூடிய பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி , இளம்பிறையையும் , கங்கையையும் சடையில் தாங்கியுள்ளவன் சிவபெருமான் . பழியிலாத அடியவர்கள் போற்றிப் பாடத் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் தன்னை வணங்குபவர்களின் செல்வமில்லாத வறுமைநிலையைப் போக்குவான் .
குறிப்புரை :

நகு வெண்டலையையும் பிறையையும் கங்கை நீரைச் சுற்றிய சடையிடத்தே தரித்தவன் . சுழியில் ஆர் - சுழியோடு பொருந்திய , வேற்றுமை மயக்கம் . பைஞ்ஞீலி பாடலான் - திருப்பைஞ்ஞீலியின் கண் பாடுதலையுடையவனாகி வீற்றிருப்பவன் .
பாடல் எண் : 6

விடையுடைக் கொடிவல னேந்தி வெண்மழுப்
படையுடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவலான்
துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாச்
சடையிடைப் புனல்வைத்த சதுர னல்லனே.
பொழிப்புரை :

இடபம் பொறித்த கொடியை வலக்கையில் ஏந்தி , வெண்மழுப்படையையுடைய கடவுள் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளான் . உடுக்கை போன்ற குறுகிய இடையில் மேகலை என்னும் ஆபரணம் அணிந்து , சீலையால் மறைத்த அல்குலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு , சடையிலே கங்கையைத் தரித்த சதுரன் ஆவான் .
குறிப்புரை :

வெண்மழு - இரும்பால் ஆகிய ஓர் ஆயுதம் . தீட்டப்பெற்று வெண்மையாயிருப்பதால் வெண்மழு எனப்பட்டது . ` விரவார் வெருவத்திருப்பு சூலத்தினன் . ஆதலால் இரத்தக்கறை முதலியன படியாத வெண்மழு என்றார் . ஒருத்தி தன்னுடம்பில் ஒருபாகத்திலிருக்கவும் சடையில் மற்றொருத்தியை நீர்வடிவமாகத் தோன்றுமாறு வைத்த சாமர்த்தியவான் அல்லரோ ?
பாடல் எண் : 7

தூயவன் தூயவெண் ணீறு மேனிமேல்
பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா
மேயவன் வேய்புரை தோளி பாகமா
ஏயவ னெனைச்செயுந் தன்மை யென்கொலோ.
பொழிப்புரை :

இறைவன் தூயஉடம்பினன் . தூய்மையான திருநீற்றைத் தன் திருமேனி முழுவதும் பரவப் பூசியவன் . திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுபவன் . மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் . அப்பெருமான் சீவனான என்னைச் சிவனாகச் செய்யும் பண்புதான் என்னே !
குறிப்புரை :

பாய்தல் - பரவுதல் . வெண்ணீறுமேனி மேல்பாயவன் - வெண்ணீற்றை உடம்பின்மேல் பரவப்பூசினவன் . பாய - இடமகன்ற ( விஸ்தாரமான ) பைஞ்ஞீலி . கோயில் - மரூஉ . மேயவன் - விரும்பியவன் . மே - விருப்பம் . ` நம்பும் மேவும் நசையாகும்மே ( தொல் , சொல் , உரி .) வேய்புரை தோளி - மூங்கில் போன்ற தோளை யுடையவள் . பாகமா ஏயவன் - பாகமாகப் பொருந்தியவன் . சிவனாகிய என்னைச் சீவனாகச் செய்யும் பண்பு என்னே ? எனக் கடைசியடிக்குப் பொருள் கொள்க . கொல் - அசைநிலை .
பாடல் எண் : 8

தொத்தின தோள்முடி யுடைய வன்றலை
பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்
முத்தினை முறுவல்செய் தாளொர் பாகமாப்
பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே.
பொழிப்புரை :

கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான் . அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றான் . முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியை ஒருபாகமாக அணைத்துக் கொண்டவன் . அப் பெருமானின் திருவடிகளைப் பொருந்தி வாழ்வீர்களாக .
குறிப்புரை :

தொத்தின - கொத்தாகிய . தோள் - தோள் இருபதையும் . முடியுடையவன் தலை , பத்தினை - பத்தையும் . முத்தினை முறுவல் செய்தாள் - முத்தைப் பல்லாகச் செய்து கொண்ட உமா தேவியார் என்றது , முத்துப் போன்ற பல்லையுடையவள் என்றபடி , பொத்தினன் - அணைத்துக் கொண்டவன் . முத்தை இகழ்ந்தவள் என்றும் ஆம் .
பாடல் எண் : 9

நீருடைப் போதுறை வானு மாலுமாய்ச்
சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்
பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய
தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.
பொழிப்புரை :

நீர்நிலைகளில் விளங்குகின்ற தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , திருமாலும் திருமுடியையும் , சிறப்புடைய கழலணிந்த திருவடிகளையும் தேடியும் காணாது நிற்க , இவ்வுலகை உடைமைப் பொருளாகக் கொண்ட இறைவன் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் கொன்றைமாலை அணிந்த தலைவனாய் வீற்றிருந்தருளுகின்றான் .
குறிப்புரை :

நீருடைப்போது - தண்ணீரைப் பிறப்பிடமாகவுடைய தாமரைப்பூ . பிரமனும் மாலுமாய் இருவரும் கூடித்தேடியும் அடி சென்னி காண்கிலார் என்பது எதிர்நிரல் நிறையாகலின் , முறையே சென்னி , அடிகாண்கிலார் எனக்கூட்டுக . பார் உடைக் கடவுள் - உலகம் உடைமைப் பொருளாகத் தான் உடையோனாகிய ( உலகத்துப் பதியாகிய ) கடவுள் . பார் - பூமி . இங்கே உலகம் என்ற பொருளில் வந்தது . போதுறைவானும் மாலும் காண்கிலர் .
பாடல் எண் : 10

பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையும்
சாலியா தவர்களைச் சாதி யாததோர்
கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்
ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே.
பொழிப்புரை :

மயிற்பீலி யேந்திப் பெருமை கொள்ளும் சமணர்களும் , திரிபிடகம் என்னும் சமயநூலுடைய புத்தர்களும் , தங்கள் நூற்பொருளோடு பொருந்தாதவர்களை வாதிட்டு வெல்லும் வல்லமையில்லாதவர்கள் . எனவே , அவர்களின் உரைகளைக் கேளாது , வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்து அம்பினைத் தொடுத்து எய்து முப்புரங்களை எரித்தவனும் , திருப் பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவனுமான சிவபெருமானின் கழலணிந்த திருவடிகளை நினைந்து வணங்கி வாழ்வீர்களாக !
குறிப்புரை :

பீலியார் - மயிற்பீலியை யேந்திவரும் சமணர் . எறும்பு முதலிய உயிர்களுக்கும் துன்பம் நேராதவாறு மெல்லிய பொருளாகிய மயில் தோகையால் வழியைச் சீத்துச் செல்வது சமணமுனிவர் செயல் . பிடகர் - புத்தர் ; புத்த தருமம் உரைக்கும் நூல் பிடகம் எனப்படும் . வகைநோக்கித் திரிபிடகம் எனவும் படும் . நூன்மை - நூலின் பொருள் . சாலியாதவர் - சாதியாதவர் .
பாடல் எண் : 11

கண்புனல் விளைவயற் காழிக் கற்பகம்
நண்புண ரருமறை ஞான சம்பந்தன்
பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்
உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே.
பொழிப்புரை :

தண்ணீர் பாய்கின்ற வயல்வளமுடைய சீகாழியில் , கற்பகமரம் போன்று அன்பினால் அனைத்துயிர்கட்கும் நலம் சேர்க்கும் அருமறைவல்ல ஞானசம்பந்தன் , நற்பண்புடையவர் வணங்கும் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனைப் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் , வினைப்பயன்களை நுகர்வதற் காகப் பிறந்துள்ள இப்பூவுலகில் ஓங்கி வாழ்வர் .
குறிப்புரை :

கண் - இடமெல்லாம் . புனல் - நீர் நிலையையும் விளைவயல் - விளையும் வயல்களையும் , உடைய . காழி - சீகாழியுள் . கற்பகம் - கற்பகத்தருவாகிய . உண்பின உலகினில் - முற்பிறப்பில் செய்த வினைகளை நுகர்தற்குரியபுவனமாகிய இவ்வுலகத்தில் . உண்பின - குறிப்புப் பெயரெச்சம் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.