Thursday, June 27, 2019

தத்துவம் என்பது தலைமைக்குப் பாதை

பத்தாம் திருமுறை

எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை

பாடல் எண் : 13
தத்துவ மானவை தன்வழி நின்றிடில்
ளித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்தவ மானவை போயிடும் அவ்வழி
தத்துவ மாவ(து) அகார எழுத்தே .

`மெய்` என்பன யாவும் ஒருவனது அறிவினுள்ளே அடங்கித் தோன்றுமாயின் அவன் ஏனையோர் பலரினும்திறம் மிக உடையனாய் விளங்கலாம். அப்பொழுது பயனில்லாத செயல்கள் யாவும் ஒழிந்து, பயனுள்ள செயல் கைவரும். அங்ஙனம் உணரப்படும் மெய்களில் நாதம் தலையாயது.

Letter-Sound ``A`` is Primal Tattva (Truth)

If Jiva can make Tattvas function his way,
He a wise one shall be;
Illumined is Knowledge Divine,
False devotion no more shall be;
The Tattva Supreme is the primal letter-sound.

Wednesday, June 26, 2019

அவரவர் தத்துவம்

பத்தாம் திருமுறை

எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை

பாடல் எண் : 12
ஆகின்ற தொண்ணூற்றோ டாறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறா(று) அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ்வே தாந்திக்கு வைணவர்க்(கு)
ஆகின்ற நாலா(று)ஐ யைந்துமாயா வாதிக்கே

Tattvas Differently Counted By Different Schools of Philosophy

Tattvas six and ninety are the over-all;
Out of them, six and thirty are the Tattvas for Saivas;
Eight and twenty for Vedantins;
Four and twenty for Vaishnavas;
Five and twenty for Mayavadins.

Monday, June 24, 2019

வாங்கும் மூச்சு வரமாகும்

பத்தாம் திருமுறை

எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை

பாடல் எண் : 10
விளங்கிடும் முந்நூறு முப்ப தொருபான்
தளங்கொள் இரட்டிய(து) ஆறு நடந்தால்
வழங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழித் தத்துவம் நின்றே .

முந்நூறு, அதனுடன் முப்பதொருபான்; அஃதா வது முந்நூறு, இரண்டும் கூட அறுநூறு. தளம் - படி. இரட்டிய தாகிய ஆறு. ஆறாறு = முப்பத்தாறு, அறுநூற்றை முப்பத்தாறு படியாக உறழ வருவது இருபத்தோராயிரத்து அறுநூறு. இஃது ஒரு நாளைக்கு வெளிச்சென்றும், உட்புகுந்தும் நடக்கின்ற மூச்சின் எண்ணிக்கை யாகும். இவ்வாறு வாயு - பிராணன். எழுந்து நடந்தால், உயிரைப் பற்றி யுள்ள பஞ்சமலங்களும் தன் தன் வேலையைச் செய்யும். அப்பொழுது தான் மாயா காரியமாகிய தத்துவங்களின் செயல்களும் விளங்குவனவாம்.

Breath Control For Ridding Malas

If ten times three hundred and thirty
The breath twelve finger-length
As Prana ascends upward,
The Malas Five Subdued are;
So do the Tattvas, according.
And witnesses all;
All things appropriate,

Sunday, June 23, 2019

வரவும் செலவும் அவனறிவானே

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்

பாடல் எண் : 4
ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவின செய்யும் இலங்கிழை யோனே .

விளங்குகின்ற மெய்ந்நூலை உணர்ந்தவன், `ஆகற்பாலன ஆகுமேயன்றி அழியா; அழியற்பாலன அழியுமேயன்றி அழியாதொழியா; நீங்குவன நீங்குமே யன்றி நில்லா; வருவன வருமே யன்றி நீங்கா` என்பதனை உணர்ந்து, ஒன்றையும் தானே காணாது, அவை அனைத்திற்குங் காரணனான சிவன் காட்டியதைக் கண்டு, அவன் அருளாணையால் ஏவிய செயல்களையே செய்திருப்பான்.

Those that are destined to be
Let them be;
Those that are destined not to be
Let them not be;
Those that are destined to go
Let them go;
Those that are destined to come
Let them Come;
The Mighty Nandi shows all
And witnesses all;
All things appropriate,
He does
To those of tender love for Him.