Thursday, June 27, 2019

தத்துவம் என்பது தலைமைக்குப் பாதை

பத்தாம் திருமுறை

எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை

பாடல் எண் : 13
தத்துவ மானவை தன்வழி நின்றிடில்
ளித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்தவ மானவை போயிடும் அவ்வழி
தத்துவ மாவ(து) அகார எழுத்தே .

`மெய்` என்பன யாவும் ஒருவனது அறிவினுள்ளே அடங்கித் தோன்றுமாயின் அவன் ஏனையோர் பலரினும்திறம் மிக உடையனாய் விளங்கலாம். அப்பொழுது பயனில்லாத செயல்கள் யாவும் ஒழிந்து, பயனுள்ள செயல் கைவரும். அங்ஙனம் உணரப்படும் மெய்களில் நாதம் தலையாயது.

Letter-Sound ``A`` is Primal Tattva (Truth)

If Jiva can make Tattvas function his way,
He a wise one shall be;
Illumined is Knowledge Divine,
False devotion no more shall be;
The Tattva Supreme is the primal letter-sound.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.