Wednesday, October 26, 2016

Saivam

ஐந்தாம் தந்திரம் - 15. சாயுச்சம்

பாடல் எண் : 1
சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவமன்றிச் சாராமல் நீங்குதல்
சைவம் சிவானந்தம் சாயுச் சியமே .

`சைவம்` என்னும் சொல்லின் பொருள் `சிவனுடன் தொடர்புற்று நிற்றல்` என்பது, ஆகவே, சீவன்தான் சிவனது அடிமை என்னும் உண்மையை உணர்ந்து அவனைச் சார்ந்து நிற்றலே நிறை வான சிவநெறியாம். சிவனைச் சார்ந்து நின்றபின்னும் அவனை யன்றிப் பிறிதொன்றையும் சாராது அற விடுத்தலும் அந்நெறி நிறை வுடையதாதற்கு இன்றியமையாதது. அத்தகைய நிறைவான சிவ நெறி யின் பயன் சிவனது பேரின்பமே. அவ்வின்பத்தைப் பெற்று அதில் மூழ்கியிருக்கும் நிலையே சாயுச்சமாம்.


Thursday, October 13, 2016

pirappu irappu

Thirumurai 8. 34 உயிருண்ணிப் பத்து


பாடல் எண் : 7
வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்
    வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம்
    வேண்டார் தமைநாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு
    திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன்இனிப்
    புறம்போகலொட் டேனே

நான் பிறந்தும் இறந்தும் உழல்வதை விரும்ப வில்லை. ஆகையால் புகழை விரும்பேன். பொருளை விரும்பேன். மண்ணுலக வாழ்க்கையும் விண்ணுலக வாழ்க்கையும் விரும்பேன். சிவத்தை விரும்பாத புறத்தாரை, ஒரு நாளும் தொடமாட்டேன். நிலை பெற்ற, திருப்பெருந்துறை இறைவனது திருவடியைச் சென்று அடைந் தேன். அதனையே அணிந்து கொண்டேன். இனிமேல் அதனைவிட்டு நீங்கேன். என்னை விட்டு அது நீங்குவதற்கும் இசையமாட்டேன்.

I seek not renown;
I desire not wealth;
I hanker not after Earth or heaven;
I am not after birth or death.
Never will I touch them that desire not Sivam.
I have Fared forth and reached the sacred Perunthurai.
I wear as jewels God`s own feet.
I will not defect;
Neither will I ever consent to suffer defection.

saalokam

ஐந்தாம் தந்திரம் - 13. சாலோக மாதி

பாடல் எண் : 1
சாலோகம் ஆதி சரியா தியிற்பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் கிரியையால்
சாலோகம் சேரில் வழிஆகும் சாரூபம்
பாலோக மில்லாப் பரனுறு ஆமே .

சாலோகம் முதற் பயன் அது சரியையாகிய முதல் நெறியாற் பெறப்படுவதாகும். கிரியையாகிய நெறியால் அந்தச் சாலோகப் பயனில் சாமீபப்பயன் உண்டாகும். சாலோகத்தில் சாமீபம் கிடைத்தால் அதன் பின் சாரூபம் வரும். முடிவாக விரிந்த பல உலகங்களில் யாதொன்றிலும் இல்லாது பரசிவத்தோடே ஒன்றாகின்ற பயன் கிடைப்பதாம்.

Successive Stages to Final Beatitude

The four stages of attainment
Saloka, Samipa, Sarupa and Sayujya
Are in gradation reached from Chariya;
The path of Chariya leads to Saloka;
And that in turn to Samipa
And Samipa to Sarupa;
And ultimately to Para of Infinite Space (Sayujya)
Beyond, which there is state none.

Sunday, October 9, 2016

vaasithum poosithum

ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம்

பாடல் எண் : 5

வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லாம் மனம் பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசித் திருந்த நினைவறி யாரே .

சிவபெருமானது புகழைக் கூறும் நூல்களை ஓதுதல், இயன்ற வகையில் சிவனை வழிபடுதல், மலர் கொய்து கொடுத்தல் முதலிய தொண்டுகளைச் செய்தல் என்னும் இவை போல்வனவற்றைச் செய்யினும், கல் வந்து விழப்பட்ட பாசிக் குளம் அக் கல்வீழ்ச்சியின் வேகம் உள்ள துணையும் பாசி நீங்கி நின்று, பின் பாசியுடையதாய் விடுதல் போல, மனத்தின் இயல்பை ஆராயுமிடத்து அத் தொண்டு களில் ஈடுபடும் துணையும் அஃது ஐம்புல ஆசையின் நீங்கி நின்று, பின் அதனை உடைத்தாய்விடும். அப்பொழுது மக்கள் சிவன்பால் அன்பு கொண்டிருக்கும் நிலை இல்லாதவராவர்.

Be of Love and See the Lord

What avails it
That you read holy scriptures,
Perform Pujas,
Gather flowers in cluster?
As long as you heart is like a pebble
Dropped into a dark pool
Over-spread with moss of ignorance,
You can never realize the Lord;
Lord that is in your heart`s love;
Lord that is blue-throated;
He, the Pure Light.