Wednesday, February 22, 2017

Vision of Light Effulgent in Saiva Path

பத்தாம் திருமுறை

ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்

பாடல் எண் : 8
ஈரும் மனத்தை இண்டற வீசும் இய்
யூரும் சகாரத்தை ஓது முன் ஓதியே
வாரும் அரன்நெறி மன்னியே முன்னில் அத்
தூரும் சுடரொளி தோன்றலு மாமே .

இருதலைப் படுகின்ற மனத்தை அவ்வாறு இரண்டாதலினின்றும் நீங்க நீங்குங்கள்; நீக்கி, இகரம் ஊர்ந்த சகர எழுத்தை ஓதுங்கள். ஓதி, சிவனது நெறியில் எம்முடன் வாருங்கள்; வந்து அதில் நிலையாக நின்று அவனை நினைத்தால், உம்முள் மறைந்து நிற்கின்ற விளக்கொளி உங்கட்கு வெளிப்படுதல் கூடும்.

Vision of Light Effulgent in Saiva Path

Still your wandering thoughts;
Chant sacred syllable ``SI``
And so persevere in Path of Hara
You shall envision Primal Light Effulgent.

Siva Path is Proven Path

பத்தாம் திருமுறை

ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்

பாடல் எண் : 7
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி ஆமே .


அறிவுடையோர் ஆராய்ந்து கண்டு பற்றிச் சிவனை அடைந்து உய்ந்த சைவநெறி, முன்னர் ஆராய்தல் இன்றி நீங்கினோர் பலர் பின்னர் ஆராய்ந்து மீண்டு வந்தடைந்த பெருமை யுடையதும், பொருந்தி நின்றோர் மேற்கதியைப் பெற்றதுமாகும். அதனால், அதுவே, யாவரும் புறநோக்கை விட்டுத் திரும்பிப் புகழ்ந்து அடைதற்குரிய நெறியாகும்.

Siva Path is Proven Path

The Path of Siva is the proven path
It led them to Hara;
It is the royal path that renowned Souls had walked;
The Path Divine
That took the devout to Cosmic Space;
That path, do seek,
Enter and persevere.

deiva neri saivam

பத்தாம் திருமுறை

ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்

பாடல் எண் : 4
சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியில்
பவனவன் வைத்த பழவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே .

தெய்வந் தெளிந்து அதன் இயல்பை ஆராயும் எல்லாச் சமயங்களையும் உலகில் ஆக்கி வைத்தவன் சிவபெருமானே எனினும் அவற்றுள் முற்பட்டதாகிய சமயம் சைவமே. அதனை அடைந்தோர் `இச்சமயக் கடவுளாகிய சிவனே ஏனைச் சமயங் களினும் நின்று பயன் தருகின்றான்` என்பதை உணர்வர். அங்ஙனம் உணர்ந்தவர்க்கு அவன் அச்சமயங்களில் ஏற்ற பெற்றியால் நின்று அருள்புரிதலும் விளங்கும்.

``You Are He`` — Is the Teaching of the True Path

Siva laid the divine path ancient
That leads to the Home Eternal
Seek Him that way;
It is He who is sought by other path also.
You shall duly find Him within yourself.

Lord Pervades All Six Inner Faiths

பத்தாம் திருமுறை

ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்

பாடல் எண் : 1
இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்த அனாதி புராணன்
சமையங்க ளாறுந்தன் தாளிணை நாட
அமையங் கழல்கின்ற ஆதிப் பிரானே .

தேவர்களையும், மக்களாகிய எம்மையும் உய்தி பெறுதற்குப் பொருந்தும் வகையினராகப் படைத்த அனாதியான பழையோன், அகச் சமயங்கள் ஆறும் தன் திருவடியையே நாடி நிற்கும்படி அமைய, அவற்றைக் கடந்து நிற்கும் முதல்வனாகின்றான்.

He is the Ancient One,
He created the beings, of earth and heaven,
In days of yore, in Order Divine;
The Six Faiths seek the Feet
But of the One Primal Peerless God;
And in them all He pervades
In measure appropriate.

Saturday, February 18, 2017

Lord is Within You

பத்தாம் திருமுறை

ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்

பாடல் எண் : 6
மன்னும் ஒருவன் மருவு மனோமய
னென்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே .

அழிவிலனாகிய இறைவன் தன்னை நினைப்ப வரது நினைவே வடிவாய் விளங்குபவன் என்று வேதாகமங்கள் சொல்லவும் அதனை அறியாது இவ்வுலகத்தில் உள்ள அறிவிலிகள் அவனை நினையாது இகழ்ந்தொழிவார்கள். நீவிர் அங்ஙனம் செய்யாது மனம் பொருந்தி அவனை வணங்குங்கள். வணங்கினால், அப்பொழுதே ஒப்பற்ற ஒருவனாகிய அவனை அடைதல் கூடும்.

Lord is Within You

The Only Being, the Eternal Being
Within you He dwells;
When you say so,
These ignorant men laugh low;
Poor folk! if they but seek Him in prayer within
Then shall they meet Him — the Peerless One.

Lord Guides the Boat of Life

பத்தாம் திருமுறை

ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்

பாடல் எண் : 5
அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டும் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே .

சிவனது திருவடியாகிய, ஞானத்தொடு பொருந்தி வருவித்துஏறிய ஒப்பற்ற ஓர் தோணி, வினையாகிய சரக்கினை அது நின்ற உடலாகிய மூடையோடு சிவலோகமாகிய பழைய நகரத்தை அடைந்து, இறக்கிவிடுகின்ற அறிகுறிகளை அறிந்தும், தீவினை யுடையோர் அத்திருவடிகளைப் பொருந்தி நிற்க எண்ணுவதில்லை.

Lord Guides the Boat of Life

The Boat of Life
By Divine Wisdom guided
Discharges quick its cargo
At the City Ancient;
Having seen that unerring prospect
These wretched men of ignoble deeds
Think not of His Holy Feet,
In devotion replete.