Saturday, January 5, 2019

சுற்றித் திரியும் பசுவைக் கட்டிப் போடுக

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 30. பசு

பாடல் எண் : 2
கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதென்
எல்லை கடப்பித் திறைவ னடிகூட்டி
வல்லசெய்(து) ஆற்ற மதித்தபின் அல்லது
கொல்லைசெய் நெஞ்சம் குறிப்பறி யாதே .
 
காப்பாருமின்றி, மேய்ப்பாருமின்றி, கறப்பாரு மின்றித் தம் விருப்பம்போல் காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டுப் பசுப்போன்ற மக்களை எப்படித் திருத்த முடியும். (அவர் யாருக்கும் அடங்குபவரல்லர்.) அவர் தாமே தமது இழிநிலையை உணர்ந்து ஆசிரியரை அடைக்கலமாக அடைவாராயின் அவரை ஆசிரியர் கல்லில் நார் உரிப்பதுபோலவும், கல்லைப் பிசைந்து கனியாக்குதல் போலவும்* தமது திருவருள் திறத்தால் அவரது நிலையினின்றும் நீக்கிச் சீர்செய்து, அவர் சீர்ப்பட்டமையை நன்குணர்ந்து சிவமாக்கிய பின்பல்லது அதற்கு முன் காடும், மேடும், கல்லும், முள்ளுமாய்க் கிடக்கின்ற நிலம் போன்றுள்ள அவரது மனம் உணர வேண்டியவற்றை உணராது..

Jivas Graze in the Backwood of Worldly Pleasures

What to do with those cows
That in the backwoods of desires graze?
Take them beyond,
And lead them to the Feet of the Lord:
Discipline them in ways superior;
Thus manage the herd;
Until then, their thoughts turn not
From the backwoods of worldly pleasures.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.