Saturday, January 5, 2019

ஞான விளக்கு நமக்கு இறைவன்

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 31. போதன்

பாடல் எண் : 2
குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
பணவிளக் காகிய பஃறலை நாகம்
கணவிளக் காகிய கண்காணி யாமே .
 

எண்குணங்களையுடைய கூத்தப்பிரான், மனத்தை விளக்காகக் கொண்டு பொருள்களை அறிந்து வருகின்ற, நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம், படந்தோறும் மணியாகிய விளக்கினையுடைய பலதலைப் பாம்புபோலவும், இரவிலும் பல விளக்குக்களை ஏற்றி வைத்துக் கொண்டு பொருள்களைக் காவல் செய்கின்ற கண்காணி போலவும் இருக்கின்றான்.

Lord is Light

The Dancing Lord is the Light Benevolent,
He is the Joyous Light for Creation all;
He adorns the many hooded serpent with gemlike shining eyes
He is the Cluster of Lights that oversees all.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.