Monday, April 17, 2017

miraculous powers of Siddhis

ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பாடல் எண் : 3
சித்திகள் எட்டொடும் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே .

இறை அன்பும், அதன்வழி ஓதப்படும் பலவகை மந்திரங்களின் சித்திகளும், யோகத்தில் நிலைபெற்று நிற்கும் உறுதிப் பாடும், அந்த யோகத்தால் அடையப்படும் அட்டமா சித்திகளும், வாமை முதல் எட்டாய் விரிந்து நிற்கின்ற திரோதான சத்தி அங்ஙனம் நில்லாது, அருட் சத்தியாகி அருளுகின்ற சிவஞானமும், அந்த ஞானத் தின்வழி விளங்கிய சிவம் ஆன்மாவைத் தானாகச் செய்யும் முத்தியும் குருவருளால் இனிது கிடைப்பனவாம்.

Attainments Through Guru`s Grace

The miraculous powers of Siddhis eight,
The immaculate purity of Saktis eight,
The baptismal act supreme that turns Jiva into Siva,
The mystic powers of occult Yoga,
Of Mantra, of Bhakti, and of Jnana,
All these shall thou attain
If the Guru but his grace confers.

saththum asaththum sathasaththum

ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்

பாடல் எண் : 1

பத்தி பணித்துப் பரவும் அடிநல்கிச்
சுத்த உரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு வாமே

மெய்யாயபொருளிடத்து அன்பை உண்டாக்கி யாவராலும் துதிக்கப்படுகின்ற திருவடியைப் பற்றிக்கொள்ளக் கொடுத்து, தூயசொல்லாலே ஐயமும், திரிபும் ஆய குற்றம் முழுதும் போக நீக்கி, `சத்து, அசத்து, சதசத்து` என்னும் மூவகைப் பொருளின் இயல்பையும் நன்கு உணர உணர்த்தலால், அப்பயனைச் சிவநெறி ஆசிரியர்பால் பெற்ற மாணாக்கர் அனைவரது உள்ளமும் அவரை, `சிவன்` எனவே தெளிவன ஆகின்றன.

The Holy Guru is God Himself

He taught me the meekness of Spirit,
Infused in me the light of devotion,
Granted me the Grace of His Feet;
And after interrogation holy, testing me entire,
Revealed to me the Real, the Unreal and Real-Unreal;
Of a certain is Siva-Guru Lord Himself.