Wednesday, September 28, 2016

sivannai thozhuthu

ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்



பாடல் எண் : 7

திருமன்னும் சற்புத்திர மார்க்கச் சரிதை
உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
இரும்மன்னும் நாடோறும் இன்புற் றிருந்தே

மக்கள் உடம்பிற் பொருந்தி வாழ்கின்ற உலகத் தவரே! சிவனாகிய தந்தைதன் செல்வத்தில் பொருந்தி வாழ்தற்குரிய சற்புத்திர மார்க்கத்தின் மரபினைக் கூறுகின்றேன்; கேளுங்கள். பிறவிக்கு ஏதுவாய் நிலைபெற்றிருக்கின்ற ஆணவ மலம் தனது செயல் மடங்கி நிற்குமாறு உங்கள் இருகைகளும் ஒன்றாய்ச் சேர்ந்து குவியும் படி சிவனைத் தொழுது, என்றும் இன்பத்திலே பொருந்தியிருங்கள்.

Kriya Comes of Chariya

Hearken! You, worldly men
That stand in Chariya Path,
It leads to the Kriya Path,
That exalts you;
Then shall your primordial Pasas lie prostrate,
And you live in unending bliss for ever.

Tuesday, September 27, 2016

nindru thozhuvan

ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்


பாடல் எண் : 6
நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியை
துன்றுமலர் தூவித் தொழுமின் தொழுந்தொறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே

எம் பெருமானாகிய சிவனை யான் அவன் முன்னே, நின்றும், கீழே வீழ்ந்தும் மிகுந்த மலர்களைத் தூவி வணங்குவேன். இஃது ஒருகாலத்தில் மட்டுமன்று; எக்காலத்துமாம். இவ்வாறு தொழு வாரிடத்தில் அவர் தொழுந்தோறும் தேவர் தலைவனாகிய சிவபிரான் சென்று வெளிப்பட்டு நிற்பான். அதனால், நீங்களும் அவனை அவ்வாறு வணங்குங்கள்.

Approach Lord Through Kriya Path

In reverence I stand and adore mine lord;
In humility I prostrate and praise Him;
And forever and ever shall I worship the Divine Light of Beauty;
You too shall seek Him with flowers fragrant,
The more you adore Him
The fuller He reveals Himself unto you,
He the Lord of Beings Heavenly.

Thursday, September 22, 2016

kuthiraiyin melvanthu

Thirumura 8.36 திருவாசகம்-திருப்பாண்டிப் பதிகம்


பாடல் எண் : 2
சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர்
    சாற்றிச்சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை
    கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி
    கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப் போட
    மறித்திடுமே

சூரியனையும் மறைக்கத்தக்க பேரொளி வடிவினனாகிய இறைவன் சூலத்தைக் கையில் ஏந்தி குதிரையின் மேல் வந்து சேர்வானாயின் அதனைக் காணச் சென்றவர் தம் பெருமையை மறந்து ஞானப்பித்தை அடைவார். ஏனெனில் மதுரையில் உள்ள வர்க்கு அரசனாகிய பாண்டியனது மறுபிறப்பு நீங்கும்படி இவ்வாறு வந்துதான் தடுத்தாட்கொண்டான். ஆகவே அவன் குதிரை மேல் வருகின்ற காட்சியைச் சென்று காண்பது நம் குடி கெடுவதற்கு ஏதுவாகும்: பறையறைந்தாற் போலக் கூறினோம். அறிந்து கொள்ளுங்கள்.

When God whose extraordinary effulgence subsumes Sunlight,
holding a trident in His hand,
chooses To come riding a charger,
they that fared forth To behold Him,
will become oblivious of their glory,
Get involved in a frenzy of Gnosis and be rid of their Transmigration.
For,
He did away with the rebirth Of the Paandya – the ruler of the dwellers of Madurai.
Lo,
we have drummed this news to You.

Wednesday, September 21, 2016

nampiraan empiraanaay

thirumurai 8.35 அச்சப் பத்து


பாடல் எண் : 9
மஞ்சுலாம் உருமும் அஞ்சேன்
    மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும்
    நம்பிரான் எம்பி ரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான்
    திருமுண்டம் தீட்ட மாட்டா
தஞ்சுவா ரவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே

மேகத்தில் உலாவுகின்ற இடிக்கும் அஞ்ச மாட்டேன். அரசரது நட்புக்கும் அஞ்சமாட்டேன். விடத்தையே அமுத மாக ஏற்றுக் கொண்ட இறைவனானவன், எம் தலைவனாகிச் செம்மை யாகவே எம்மை ஆட்கொண்டான். அவனது செல்வமாகிய திரு வெண்ணீற்றைத் தமது நெற்றியில் பூச மாட்டாமல் அஞ்சுவோராகிய அவரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

I dread not the thunderbolt emerging from cloud;
I dread not kinship with kings.
Our God Transformed venom into nectar.
Lo,
He,
our Lord,
Enslaved us so beautifully.
When I behold them that dread to adorn their Foreheads with His opulent Holy Ash,
Ah,
we are struck with unexampled terror.

Monday, September 19, 2016

athuvum undran viruppam

Thirumurai 8.33 குழைத்த பத்து


6. வேண்டத் தக்க தறிவோய்நீ
    வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
    வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
    யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
    அதுவும் உன்றன் விருப்பன்றே

உயிர்களுக்குத் தேவையானது இது என்று அறிவோன் நீயே! மேலும் அவ்வுயிர்கள் எவற்றை வேண்டினாலும், அவையெல்லாவற்றையும் அருளுபவனும் நீயே! உன்னைக் காண விரும்பிய பிரமன், திருமால் என்பவருக்கும் அருமையாய் நின்ற வனாகிய நீ நீயாகவே விரும்பி, என்னையாளாகக் கொண்டனை. என் பொருட்டு நீ விரும்பி எதனை அருள் செய்தனை; அதனையே யானும் விரும்புவதல்லது, நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று, உளதாகு மெனில் அந்தப் பொருளும் உன்னிடத்தில் நான் வைக்கின்ற அன்பே யன்றோ?

You know what I should pray for;
You will wholly Grant me what I pray for.
Unto Vishnu and Brahma That seek You,
You are hard of access.
You willingly Made me serve You.
Whatever You willingly bless me With,
I desire nought but that.
If yet,
I seek Aught,
is not that indeed Your own desire?

Sunday, September 18, 2016

nandrae seyvaai naayagame

Thirumurai 8.33 குழைத்த பத்து


7. அன்றே என்றன் ஆவியும்
    உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
    கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
    எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
    நானோ இதற்கு நாயகமே

எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடைய, எம் தலைவனே! மலையை ஒத்த பெரியோனே! என்னை ஆட்கொள்ள வந்த அன்றே, என்னை ஆட்கொண்ட அப்பொழுதே, என்னுடைய உயிரையும், உடம்பையும், பொருள் எல்லாவற்றையும் உன்னுடையனவாக ஏற்றுக் கொள்ளவில்லையோ? அங்ஙனமாக இப்பொழுது ஒரு துன்பம் எனக்கு உண்டாகுமோ? உண்டாகாது. ஆதலின், எனக்கு நீ நன்மையே செய்வாய் எனினும், தீமையே செய்வாய் எனினும் இத்தன்மைக்குத் தலைவன் யானோ?

O Hill-like One,
did You not that very day,
when You redeemed and ruled me,
make Your own My soul,
body and all that I owned?
Can I,
This day meet with any trouble at all?
O our God,
eight-armed and triple-eyed !
You may Do me good or ill.
Is lordship over these deeds mine?

Wednesday, September 14, 2016

theemai nanmai

Thirumurai 8.33 குழைத்த பத்து



5. கூறும் நாவே முதலாகக்
    கூறுங் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்பும்நீ
    தீமை நன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை
    மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா
    திகைத்தால் தேற்ற வேண்டாவோ

சிவலோக நாதனே! பேசுகின்ற நாக்கு முதலாக சொல்லப்படுகின்ற கருவிகள் எல்லாம் நீயே! தெளிவடையும் வழியும் நீயே! தெளியாமல் திகைத்தலைச் செய்பவனும் நீயே! தீமை நன்மைகள் முழுவதும் நீயே! உண்மையாக உன்னைப் பற்றிச் சொன்னால் இவ்விடத்தில் வேறு ஒரு பொருள் சிறிதும் இல்லை. ஆதலால் நான் தெளிவை அடையும் வழி உன்னையன்றி ஏது? ஆகையால் யான் திகைப்படைந்தால், என்னை நீ தெளிவிக்க வேண்டாவோ?

You are all the bodily instruments commencing From the articulating tongue !
You are the source Of clarity as well as bewilderment.
Evil and good:
You are wholly these.
Truly speaking,
there is Nought apart from You.
How may I gain clarity?
If I stand nonplussed,
should You not,
In mercy,
clarify my intellect?

Tuesday, September 13, 2016

sanmarkam sagamarkam

ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்



பாடல் எண் : 1
சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மன்மார்க்கம் மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்கம் ஞானத் துறுதியு மாமே .

சிவநெறியில் யோகத்தை, `சகமார்க்கம்` - ஒத்துடன் நிற்கும் தோழமை நெறி - எனக் கூறுதல், சன்மார்க்கமாகிய ஞானத்தின் தன்மையையே கொண்டு விளங்குதல் பற்றியாம். அதனால், சிவநெறியோகம், உண்மை ஞானத்தால் உளதாகின்ற முத்திப் பேற்றுள் உய்க்கும். ஏனையோர் கூறும் யோகங்கள் ஓயாது பிறந்து இறத்தலை வெறாது விரும்பிக் கொள்வனவேயாகும். அவற்றால் ஞானமாகிய உறுதிப் பொருள் கிடைத்தலும் கூடுமோ!

Sanmarga is Sahamarga

Sanmarga is itself Sahamarga
So by itself it leads to Supreme Mukti;
Other Yogas
Involve myriad birth and death
Will they level to Jnana?

Wednesday, September 7, 2016

padarsadai paranjothi

Thirumurai 7.90

Padarsadaiyan paranjothi adaithavar pavam nikkuvaar



பண் :குறிஞ்சி
பாடல் எண் : 1

மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ
வாழு நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலுங்
கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , நீ குஞ்சித்து ஆடுகின்ற தனது திருவடிக்குச் செய்யும் தொண்டின்கண் வாழாமல் உண்டு உடுத்தே வாழும் நாள்களிலும் , உன்னை அவ்வாறே சென்று கெடாதவாறு தடுத்து , தனது இச்சைவழி நடாத்தி , பின்பு நீ முன்செய்த பாவத்தின்பொருட்டு உன்னைக் கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனையும் தடுத்து ஆட்கொள்பவனாகிய , கையில் தமருகத்தையும் , நெருப்பு எரிகின்ற தகழியையும் , சினந்து ஆடுகின்ற கரிய பாம்பையும் பிடித்துக்கொண்டு ஆடுகின்ற , பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம் பலத்தில் விளங்குகின்ற நம்பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

பாடல் எண் : 2

பேராது காமத்திற் சென்றார்போ லன்றியே
பிரியா துள்கிச்
சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுந்
திருவி னாரை
ஓராது தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , சாங்காறும் , நீங்காது உலக இன்பத்தில் சென்றவர்போலவன்றி , புகழ் நிறைந்த அன்பையுடையவர்களாய் , தன்னை இடைவிடாது நினைத்து , திருமுன் சென்று தனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் திருவுடையவரை , அவரது நிலையை அறியாமல் , கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய , பெருமையுடையவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

பாடல் எண் : 3

நரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து
நாளும் உள்கித்
திரியாத அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுஞ்
சிந்தை யாரைத்
தரியாது தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் [ பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , நரியினது வஞ்சனைபோலும் வஞ்சனை யினால் இரண்டுபட்ட தன்மையின் நீங்கி , நாள்தோறும் தன்னை நினைத்து , மாறுபடாத அன்பை உடையவராய்த் திருமுன்சென்று , தனது திருவடியில் வீழ்ந்து வணங்குங் கருத்துடையவரை , கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது சிறிதும் தாழாது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய , பெரியோர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

பாடல் எண் : 4

கருமையார் தருமனார் தமர்நம்மைக் கட்டியகட்
டறுப்பிப் பானை
அருமையாந் தன்னுலகந் தருவானை மண்ணுலகங்
காவல் பூண்ட
உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை
மறுக்கஞ் செய்யும்
பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , கருமை நிறம் பொருந்திய கூற்றுவனது ஏவலர் நம்மைக் கட்டுவராயின் , அக் கட்டினை அறுத்தெறிபவனும் , நமக்கு , பிறர் பெறுதற்கரிய தனது உலகத்தையே தருபவனும் , பல்லவ மன்னன் இந்நிலவுலகத்தை நன்நெறியில் வைத்துக் காத்தலை மேற் கொண்ட இயைபினால் , அவனுக்குத் திறைகொடாது மாறுபடும் பிற மன்னர்களை வருத்துதல் செய்கின்றவனும் ஆகிய , பெருமை யுடையவர்களது பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

பாடல் எண் : 5

கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் [ வெண்மதியக்
கண்ணி யானை
உருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்துகந்
துலவா இன்பம்
தருவானைத் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , யானையினது தோலைப் போர்வையாக உடைய , சிவந்த சடைமேல் வெள்ளிய பிறையாகிய கண்ணியைச் சூடினவனும் , இடிபோல முழங்கும் கூற்றுவனை நிலத்தில் உருண்டு ஒழியும்படி உதைத்துப் பின் அருள் செய்து , அவனால் வெருட்டப் பட்ட சிறுவனுக்கு அழியாத இன்பத்தைத் தந்தவனும் , நம்மை , அக்கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் ஆகிய , பெருமை நீங்காதவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

பாடல் எண் : 6

உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய்
ஊன்க ணோட்டம்
எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே
நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி
பாவந் தீர்க்கும்
பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , படம் எடுத்து ஆடும் பாம்பையும் , விரிந்த சடையையும் உடையவனும் , மேலான ஒளியாய் உள்ளவனும் , அடைந்தவரது பாவங்களை நீக்குகின்றவனும் , பித்துக்கொண்டு ஆடுகின்றவனும் ஆகிய , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம் பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோ மன்றே ; இனி நாம் பெற வேண்டுவது யாது ! இதனால் , நமக்கு எதனா லும் குறைவில்லாத வாழ்வு உளதாயிற்று என்று நம்மை நாள்தோறும் பலரும் புகழ்கின்றனர் ; ஆதலின் , மனமே , இனி நீ , உடம்பின் மேற் கண்ணோட்டம் செலுத்தி அலைந்து திரியாது , அதனை முற்றிலும் ஒழி .

பாடல் எண் : 7

முட்டாத முச்சந்தி மூவா யிரவர்க்கும்
மூர்த்தி என்னப்
பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் பாவமும்
வினையும் போக
விட்டானை மலைஎடுத்த இராவணனைத் தலைபத்தும்
நெரியக் காலால்
தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , ` தப்பாத , முப்போதும் செய்யும் வழி பாட்டினையுடைய மூவாயிரவர் அந்தணர்க்கும் ஒரு மூர்த்தியே ` என்று அனைவராலும் சொல்லப்பட்டவனும் , அடியவராய் நின்று தன்னை நினைப்பவரது , பாவமும் புண்ணியமும் ஆகிய இரு வினைகளும் விலகுமாறு நீக்குகின்றவனும் , தனது மலையை எடுத்த இராவணனை , அவனது பத்துத் தலைகளும் நெரியும்படி காலால் ஊன்றினவனும் ஆகிய , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச் சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே , இனி நாம் பெறவேண்டுவது யாது !

பாடல் எண் : 8

கற்றானுங் குழையுமா றன்றியே கருதுமா
கருத கிற்றார்க்
கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண் உள்ளமே
நம்மை நாளுஞ்
செற்றாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , கல்லும் தன் தன்மை மாறி உருகும்படி , தன்னை நினைக்கும் முறையில் நினைக்க வல்லராயினார்க்கு , எத்தன்மைத்தாய பொருளாலும் குறைவில்லை என்று பெரியோர் சொல்லுவர் ; அவ்வகையில் நாம் , நம்மை , கூற்றுவனது ஏவலர்கள் பலகாலும் ஆட்டக்கருதிச் செக்கிலிட முயலும்போது , அதனைத் தடுத்து ஆட்கொள்ளுகின்ற , விடையேறுபவனாகிய , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கும் நம் பெரு மானை அடைந்துவிட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !
பாடல் எண் : 9

நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ் செய்மனமே
நம்மை நாளும்
தாடுடைய தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும்
மூடம் வைத்த
பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , நம்மை , தலைமையையுடைய கூற்றுவனது ஏவலர் பலநாளும் செக்கிலிட்டு ஆட்ட முயலும்போது , அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் , முடைநாற்றத்தையுடைய சமணர்கட்கும் , வயிற்றையுடைய சாக்கியர்கட்கும் அறியாமையை வைத்த பெருமையை யுடையவனும் ஆகிய , பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டியது யாது ! அதனால் , உயர்ந்தோரால் விரும்பப்படுதலையுடைய அவ்விறைவனிடத்தில் என்றும் நன்றாய தொண்டினைச் செய் .

பாடல் எண் : 10

பாரூரும் அரவல்குல் உமைநங்கை யவள்பங்கன்
பைங்கண் ஏற்றன்
ஊரூரன் தருமனார் தமர்செக்கி லிடும்போது
தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில்
அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே
பெற்றா மன்றே

பொழிப்புரை :

மனமே , நிலத்தில் ஊர்ந்து செல்கின்ற பாம்பினது படம்போலும் அல்குலையுடைய ` உமை ` என்னும் நங்கையது பாகத்தையுடையவனும் , பசிய கண்களையுடைய இடபத்தை யுடைய வனும் , ஊர் தோறும் எழுந்தருளியிருப்பவனும் நம்மை , கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் போது அதனைத் தடுத்து ஆட்கொள் பவனும் , நம்பியாரூரனுக்குத் தலைவனும் , திருவாரூரை உடையவனும் , மேற்றிசையில் உள்ள கொங்கு நாட்டில் , அழகிய காஞ்சிநதியின் கரையில் விளங்கும் பேரூரில் உள்ளவரது கடவுளும் ஆகிய இறைவனை , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்து விட்டோமன்றே ; இனி நாம் பெறவேண்டுவது யாது !

my mind!
not living by performing service to his foot which is bent in dancing, even in the days when you enjoy worldly pleasures, like eating and dressing well.
having prevented you from being doomed and directing your life according to his desire These are the actions of god when the servants of tarumaṉ god of death oppress and torment you, then also he saves you from that and bestows his grace on you.
one who dances holding in his hand the tuṭi, a hollow earthern lamp with fire and a snake which moves angrily spreading its hood.
we have definitely got the great Lord in ciṟṟampalam in puliyūr what else is there to get ?

my mind unlike those people who enjoyed worldly pleasure without turning away from them till their death.
thinking of him ceaselessly those people who possess the wealth of devotion of great eminence go and fall at the feet of the Lord.
without knowing their greatness.
one who bestows his grace and saves them when the servants of tarumaṉ oppress and torment them.

we have definitely got our great Lord who is in ciṟṟampalam in puliyūr which has the tillai antaṇar.
my mind.
Having given up the nature of playing duplicity by hypocrisy like the cunningness of the fox thinking of him daily people with love which never changes the people who have the principle to go and fall at the feet of the Lord when the servants of the god of death torment them, the Lord without delay, prevents it and bestows his grace puliyur which has great souls the same as for the first verse what else is there to get?

the Lord who will have the bonds with which we were tied by the servants of the black god of death, cut by his grace.
who grants his world which cannot be reached by others than his devotees.
the great one who gives distress to the vassals who do not pay their tribute to the pallavaṉ.
as he had the right to rule over the world, having led it in the right path the puliyūr of great souls the same as for the 1st verse

in addition to the upper covering of the skin of the elephant.
he wears as a chaplet on his red matted locks a white crescent.
Having kicked the god of death who roars like thunder, to roll and run on the earth, and then bestowed his grace on him.
one who is capable of bestowing ever-lasting bliss This refers to the story of Mārkaṇtēyaṉ.
one who protects us when the servants of the god of death torment us, by averting it, and saves us.
the great Lord.
the same as for the first verse.

my mind!
completely give up taking excessive care about your body, without wandering according to your wish, led by the five senses my mind!
People will say about us that we are not deficient in anything daily one who was a serpent which dances by spreading its hood.
one who has matted locks spreading in all directions.
the supreme light.
one who has excessive love towards his devotees as to wipe out all their sins.

my mind for all the three thousand antaṇar who worship him thrice daily without any deficiency.
he is the sole god to be worshipped by them This is the only verse in Tēvāram in which the three thousand antaṇar are mentioned.
one who released the sins and virtuous acts of those who meditate upon him as devotees one who slightly pressed with his leg to crush the ten heads of Irāvaṇaṉ who removed and held the mountain Kailācam the same as for the 1st verse.

my mind!
for those who are capable of thinking about god in their minds becoming softer them even the hard stone that melts at times people will say about them they will not be wanting in anything they will get everything they desire when the servants of the god of death, being angry with us, intend to harass us for many days and torments us, the Lord will prevent it and save us.
one who has mounted a bull the same as for the 1st verse.

my mind!
do always good acts to the Lord who is sought after by devotees when the servants of the strong god of death torment us for many days;
will prevent it and save us one who has the greatness to make on the jains having an offensive odour, and the cākkiyar of pot bellies, ignorant.
the same as for the 1st verse.

one who has on his half Umai, a woman of distinction, who has a waist comparable to the hood of the serpent which crawls on the earth.
He has a bull of greenish eyes.
he is in every village and place.
He will save and protect us when the servants of the god of death think of tormenting us.
the Lord of nampi ārūraṉ.
the Lord who has ārūr as his abode.
the great one in pērūr on the bank of the river Kāñcivāy which is in the western portion of Koṅkunātu Kañcivay is now called noyyal;