Friday, August 31, 2018

தலை முதல் கால் வரை

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பாடல் எண் : 13
நாலுள்நல்ஈ சானம் நடுவுச்சி தானாகும்
தாணுவின் றன்முகந் தற்புரு டம்மாகும்
காணும்அ கோரம் இருதயம் குய்யமாம்
மாணுறு வாமம் ஆம் சத்திநற் பாதமே .

கிழக்கு முதலிய நான்கு திசைகளில் உள்ள முகங்கட்கு நடுவேயுள்ள முகமாய் நிற்கின்ற `ஈசானம்` என்னும் சத்தி சதாசிவனுக்கு அந்த முகமாய் நிற்றலேயன்றி, நடுத்தலையாகியும் நிற்கும். அவ்வாறே ஏனைய, `தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோ சாதம்` என்னும் முகமாய் நிற்கின்ற சத்திகளும் அம்முகங்க ளாதலேயன்றிச் சதாசிவனது `முகம், இருதயம், குய்யம், பாதம்` என்னும் அவ்வுறுப்புக்களாயும் நிற்கும்.

How Sakti dwells in the Five faces of Sadasiva

In the shining Isana face is Sakti`s Crown;
In the Tatpurusha face is Her Visage
In the Aghora is Her Heart and Waist;
In the Vama face are Her Feet blessed.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.