Tuesday, October 24, 2017

பிறர்க்கு ஈந்தது, அதுவே உங்கட்குத் துணையாவது

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்

பாடல் எண் : 9
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்றுங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே

சிவபெருமான் எவ்வுயிர்க்கும் உண்மைப் பற்றாய் உள்ள அறத்தை அஃது அரிய மறைபொருள் (இரகசியம்) என்று, அறநெறியில் நிற்பார்க்கன்றி ஏனையோர்க்கு உணர்த்துதல் இல்லை. அதனை அவன் அருள்வழி நான் பெற்றவாற்றால் உங்கட்குக் கூறுவதாயின், ஒன்றேயாயினும், உங்களால் மனம் பொருந்திப் பிறர்க்கு ஈந்தது உண்டாயின், அதுவே உங்கட்குத் துணையாவது. இன்னும் அப்பெருமான் வகுத்த நன்னெறியை மேற்கொள்ளும் முறைமையும் அதுவேயாம்.

Earthly desires to worldly objects attached,
No end know;
but in charity`s noble way,
Even the little things you give,
sure props provide;
All the rest meekly take as the Lord`s gift for the day.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.