Thursday, November 30, 2017

piravi nookam

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பாடல் எண் : 2
இன்பம் பிறவிக் கியல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே

முத்திக்கு ஏதுவாகிய பிறவி வருதற்பொருட்டு அதற்கு ஏதுவாகிய துன்பப் பிறவியை அமைத்து வைத்துள்ள சிவ பெருமான், அத்துன்பப் பிறவிக்கு உரியனவாகச் செய்யும் தொழில் கள் பலவாயினும், எவரிடத்தும் அன்பு நோக்கியே கலப்பவனாகிய அவன், முன்பே இப்பிறவி முடிதற்கு வைத்த வழி அவ்வன்பு ஒன்றே.

The Lord gave us this life to attain supreme bliss,
But we spent it in deeds that bring misery Yet if we have love for Him He will put an end to our rebirths.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.