Thursday, November 30, 2017

irai inbam

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பாடல் எண் : 4
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்
குணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பமதுஇது வாமே  .

பெண்டிரோடு கூடும் கூட்டத்தில் ஆடவர் அப் பெண்டிர்மேல் வைக்கின்ற அன்பிலே அறிவழிந்து நிற்றல்போல, சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பிலே தம் அறிவழிந்து அந்நிலையில் நிற்க வல்லார்க்கு அதனால் விளைகின்ற பேரின்பம் அவரைப் பின்னும் அந்நிலையினின்றும் பெயராத வகையிற் பெருகிவிளங்கி, விழுங்கி இவ்வன்பே தானாகி நிற்கும்.

Like the sweet love in sex-act experienced,
So,
in the Great Love,
let yourself to Him succumb;
Thus in Love sublimed,
all your senses stilled,
Bounding in Bliss Supreme,
That this becomes

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.