Monday, December 11, 2017

vazhi thunai

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 23. கல்வி

பாடல் எண் : 8
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே  .

வானுலகமும், பிற உலகங்களுமாய் நின்று எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் துணையாய் நிற்கும் பேராற்றலும், பேரருளும் உடையவனாகிய இறைவன், கல்வியால் யாவர்க்கும் நன் னெறித் துணையாயும், அமுதமாயும் நிற்கின்றவர்கட்கே விளங்கித் தோன்றிப் பெருந்துணையாய் நிற்பன். கல்வி இல்லாதவர்க்கு அவர் உள்ளம் தன்னை நீங்குதற்கே துணையாவன். (அறியாமையை மிகுவிப்பன் என்பதாம்)

In life`s journey a Support and Elixir rare is He,
An unfailing Guide – but to the ignorant of mind,
No support He – in all the seven Heavenly globes,
Sure prop is He,
the Mighty being.
Great and Kind.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.