Thursday, September 27, 2018

குண்டலினி எப்பொழுது உச்சிக்கு செல்லும்

பத்தாம் திருமுறை

மூன்றாம் தந்திரம் - 8. தியானம்

பாடல் எண் : 2
கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே

கண் முதலிய பொறியறிவின் சேர்க்கையால் நம்மைப் பண்படுத்தி நின்ற முதற்பொருள் ஒன்று உளது. அஃது, எல்லையற்ற பேரொளியாயினும், அதனை நாம் உள் நாக்கினை ஒட்டி உள்ள சிறிய துளை வழியில் சென்று காண்கின்ற ஒரு சிற்றொளியாகத் தரிசிக்கச் செய்தவாற்றால், `பாம்பு` எனப்படுகின்ற குண்டலி சத்தி நம்மை உய்வித்தது வியக்கத்தக்கது.

Through eye,
tongue,
nose and ear
And the organ Intellect
There is an Ancient One that pervades as Nada,
Inside the palatal cavity
He shows the Cosmic Light;
He gave the fleshy body,
That we redeemed be.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.