Thursday, September 27, 2018

தாரணை வாழ்நாளை நீட்டிக்கும்

பத்தாம் திருமுறை

மூன்றாம் தந்திரம் - 7. தாரணை

பாடல் எண் : 5
கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே .

காலத்தால் கலந்திடப்பட்ட உயிருடன் அக்காலம் கலந்து நிற்கும் இயல்பை ஆராய்ந்து அறியின், அது பிராண வாயுவின் திட்பமேயாம். ஆகவே, அந்த உயிர் பிராண வாயுவை அடக்கும் முறையை அறிந்துகொள்ளுமாயின், உயிர் நிற்பது போலவே அதனைக் கலந்து நிற்கின்ற காலமும் ஓடாது ஒரு நிலையாய் நிற்கும்.

When Pranayama is in proper time-measure practised
Breath retention will appropriate with Prana stand;
He who trains breath that is Prana,
With him shall Time and Life inseparate remain.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.