Thursday, September 27, 2018

பிரித்தியாகாரத்தின் பயன் என்ன

பத்தாம் திருமுறை

மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்

பாடல் எண் : 10
குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரனு மாமே  .

பிரத்தியாகாரத்தை மனப்பயிற்சி அளவில் செய்தால், கால வரையறை இடவரையறைகள் இன்றி, எல்லா வற்றையும் ஒருங்கே உணரத்தக்க யோகக் காட்சியைப் பெறுதலே அதற்குப் பயனாய் முடியும். அதனை அஞ்ஞான இருள் நீங்கி இறைவனை உணரும் கருத்தோடு செய்யின், தான் இறைவனை உணர்தலேயன்றிப் பிறரையும் உணரச் செய்கின்ற கடவுள் தன்மையையும் உடையவனாகலாம்.

In the act of Pratyahara
All the world will be visioned;
Be rid of the despicable darkness
And seek the Lord,
If your thoughts be centred firm
You shall Divine Light see
And immortal thereafter be.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.