Friday, November 30, 2018

உள்ளத்துள்ளே ஒளிரும் சோதி ஈசன்

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்



பாடல் எண் : 13
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனைக் காலமும் ஏத்துமின் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி யதுவிரும் பாரே .

வீடாகிய முடிநிலைப் பயனாயும், அப்பயனுக்கு நேர்வாயிலாகிய ஞானமாயும், அந்த ஞானத்தை முதற்கண் கேள்வி யால் உணர்த்தும் முத்தமிழின் ஒலியாயும் உள்ள சிவபெருமானையே அறிஞர் எத்துணைக் காலமாயினும் ஒழியாது துதித்து நிற்பர். அங்ஙனம் துதிக்கின்ற துதியில் அவன் தன்னுள்ளே நெய்யைக் கொண்டிருத்தலால் தன்னைப் பருகுகின்றவர்கட்கு இனிக்கின்ற பால்போல அவன் இனிப்பான். ஆகவே அறிவில் இனிக்கின்ற அறிவாயுள்ள அவனை அறிவுடையோர் விரும்பாமல் இருப்பரோ?

Lord Stands as Ghee in Milk

He is Mukti, Jnana and Nada
That in the three branches of Tamil resound,
Thus they praise the Lord
Through time unending;
As the ghee within milk
The Pure One within them stands;
That Light they seek not, and love not.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.