Friday, December 28, 2018

ஆலின் விதைபோல ஆன்மா

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 28. புருடன்

பாடல் எண் : 3
படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஓட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே .

சிவனது திருவருளாகிய ஒளியினை ஆன்மா, பல கிளைகளும் விழுதுகளுமாய் விரிவடையும் ஆற்றலைத் தன்னுள்ளே அடக்கியிருக்கும் ஆலம் விதைபோலத் தன்னுள் அடக்குமாற்றால் தன்னை அச்சிவத்திற்கு ஏற்ற தூய இடமாகச் செய்யுமானால், அந்தத் திருவருள் ஒளி துணையாக, துன்பத்தையே தனது இயல்பாகக் கொண்ட ஆணவமாகிய இருளை ஓட்டி, அம்பலத்தில் ஞான நடனத்தைச் செய்கின்ற அப்பெருமான் தரக் கருதும் நல்வழியைத் தான் உணரும் வாய்ப்பு உண்டாகும்.

Seek the Jnana Way of Lord

Tiny unto the seed
Of the spreading banyan tree
Is the atom that is Jiva;
If by fire of Jnana
Your way purifies,
The dark Pasas that malign you
May well driven be;
Seek the Divine way,
The Dancing Lord shows you.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.