Monday, July 30, 2018

manamalaril oli vadivai

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பாடல் எண் : 6
தாபரத் துள்நின் றருளவல் லான் சிவன்
மாபரத் துண்மை வபடுவா ரில்லை
மாபரத் துண்மை வபடு வாருக்கும்
பூவகத் துள்நின்ற பொற்கொடி யாகுமே .

சிவனது மிக மேலான உண்மை நிலையை உணர்ந்து அவனை வழிபடுவோர் மிக அரியர். அதனை உணர்ந்து வழிபடுகின்ற அவர்கட்கும் பூவைத் தன்னுள்ளே அடக்கியுள்ள அழகிய கொடி அப்பூவைச் சிறிது சிறிதாகவே வெளிப்படுத்துதல் போலத் தனது உண்மை நிலையை வெளிப்படுத்துவான். ஆகவே அவனது பொது நிலையாகிய இலிங்க வடிவிலும் அவன் நின்று படிமுறையால் மேல் நிலையை அருளுவான்.

Lord is the Golden support of Heart

Pervading all Nature, Siva blesses all;
But they know not the Truth and adore Him not;
To them that adore Him that is immanent
He is the golden stalk of the heart`s lotus within.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.