Wednesday, May 22, 2019

முப்போதும் தொழுக முதல்வனை

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 12. குருபூசை

பாடல் எண் : 5
உச்சியுங் காலையு மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி `நம` என்று நாமத்தை
விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயக னாகுமே .

உலகீர், `காலை, நண்பகல், மாலை` - என்னும் மூன்று போதிலும் சிவனை வழிபட விரும்புங்கள். அவ்வழிபாட்டில் `நம` என்பதை இறுதியில் உடைய மந்திரம் சிறப்புடையனவாகும் ஆதலால் அவற்றையே மிகுதியாக உங்கட்குப் பயனை விளைக்கும் வித்துக்களாக விதையுங்கள். அவ்வாறு விதைப்பதற்குரிய நிலமாய் விளங்குவன `கதிர், மதி, தீ` - என்னும் முச்சுடர்களுமாம். (ஆகவே, அவ்விடத்து அவற்றை விதையுங்கள்) அச்சிவன் `நந்தி` என்னும் பெயருடைய குருமூர்த்தியாயும் விளங்குவன்.

Pray Thrice a Day

Morn, noon and eventide
Adore the Lord;
Adoring chant the word ``Nama`` — (I worship)
Chanting, invoke Him in luminaries three — the Sun,
Moon, and Fire;
The famed Nandi is the Lord Supreme.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.