Wednesday, May 22, 2019

செயல் அற்று சிவ நினைவுற்று

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 12. குருபூசை

பாடல் எண் : 7
இந்துவும் பானுவு மென்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமு மாகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே .

சந்திர கலையும், சூரிய கலையுமாகச் சொல்லப் படுகின்ற மூச்சுக்காற்று அடக்கப்பட்டபொழுது நடுநாடி வழியாக மேல் ஏறி விந்துத்தானமாகிய ஆஞ்ஞையையும், நாதத்தானமாகிய ஏழாந்தானத்தையும் கடந்து அதற்குமேல் பிரம ரந்திரம் வழியாகப் பன்னிரண்டங்குல அளவுள்ள நிராதாரத்தே செல்லின் அந்நிலை `சாக்கிரத்தில் துரியம்` எனப்படும். அதனையும் கடந்திருப்பது மீதானம். அது சாக்கிரத்தில் அதீதத்தானம். அந்நிலையில் சிந்தனையைச் செலுத்திச் சிவனை வழிபடுதலே எல்லாவற்றிலும் மேலான வழிபாடாம்.

Worship Nandi Beyond the Spheres of Sun and Moon

When beyond the Spheres of Sun and Moon you ascend
There Bindu and Nada are;
Ascending (through Adharas) thus,
Your Awareness crosses
The frontiers of Waking State;
There when you continuous worship Nandi,
That verily is worship Divine.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.