Wednesday, April 24, 2019

பிரிப்பதும் சேர்ப்பதும் பரம்பொருளே

பத்தாம் திருமுறை

எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்

பாடல் எண் : 3
எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்றும் கரணம தாயிடும்
ஒட்டிய பாசம் உணர்வது வாகவே
கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே .

எட்டுக் கருவிகள் கூடியதனால் `புரியட்ட காயம்` எனப்படும் உடம்பு - என மேற்கூறப்பட்ட சூக்கும சரீரத்திலிருந்தே மாபூதங்கள் ஐந்தும், இருவகை இந்திரியங்களும் தோன்றும். (எனவே, அப்பதினைந்தும் கூடியதே தூலசரீரமாம்.) இனித்தூல சரீரத்தில் உள்ள இருவகை இந்திரியங்களும், சூக்கும சரீரத்தில் உள்ள அந்தக்கரணங்கள் மூன்றும் `சரீரம்` எனப்பட்டாலும், உண்மையில் அவை கரணங்களேயாம்.
அறிவுக்குத் துணையாதல்பற்றி ஆன்மாவோடு பெரிதும் ஒற்றுமைப் பட்டு நிற்கின்ற அவற்றைக் கொண்டே சிவன் ஆன்மாவின் அறிவைப் புலன்களில் அகப்படுத்தி வைத்துப் பின்பு அப்புலன்க ளினின்றும் பிரித்துவிடுவான்.

Five Indriyas and Three Karanas

Of the organs eight thus stated,
First Five are Indriyas (External Sense Organs)
The rest three are Karanas (Internal Sense Organs)
To these attached is primordial Pasa`s sentience,
Thus He binds them
And unbinds them,
He, the Lord of Forehead-Eye.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.