Wednesday, April 17, 2019

சுத்த உடம்பு சூக்குமம்

பத்தாம் திருமுறை

எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்

பாடல் எண் : 2
அத்தன் அமைத்த உடல்இரு கூற்றினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமன்ஆங் காரம் புரியட்ட காயமே

இறைவன் உயிர்கட்காக அமைத்துக் கொடுத்த, `தூலம், சூக்குமம்` என்னும் இருவகை உடம்புகளுள் (தூலஉடம்பின் இயல்பு பற்றி மேலே கூறினோம்) இனி அதுபோலப் புலால் நாற்றம் நாறுதல் இன்றியே உயிர்க்குப் பயன்படுகின்ற சூக்கும தேகத்தைப் பற்றிக் கூறுமிடத்துச் சத்தம் முதலிய தன் மாத்திரைகள் ஐந்தும், அந்தக் கரண நான்கனுள் சித்தம் ஒழிந்த ஏனை மூன்றும் ஆக எட்டும் கூடிய தாகும். அதனால் அது, `புரியட்டகாயம்` என்றும் சொல்லப்படும்.

Subtle Body

Of the body thus God shaped,
In parts two,
Sukshma (Subtle) is One;
That a body of constituents eight is;
—Sound, touch, shape, taste and smell
Buddhi (Intellect), Mana (Mind) and Ahankara (Egoity)
That the Puriashta body is (subtle).

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.