Wednesday, July 8, 2015

thirumanthiram upadesam 26

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

உண்மை நூல்களைத் தெரிந்தெடுத்து அவற்றில் சொல்லப்பட்ட பொருள்களைச் சிந்தித்து அறுதியிட்டுச் சொல்லு மிடத்து, மெய்ப்பொருளைத் தம் உள்ளத்தில் ஒருதலையாக உணர்ந்து பற்ற வேண்டுவோர்க்குச் சிவபெருமானது திருவடி ஒன்றே பரம் பொருளும், வீட்டுலகமும், துறக்க உலகங்களுமாகும். ஆதலின், அதனைத்தவிர உயிர்கட்குப் பற்றுக்கோடு வேறில்லை.

Lord`s Feet are the Final Refuge of Souls Illumined

The Holy Feet is Siva, if you but know,
The Holy Feet is Siva`s world, if you but think,
The Holy Feet is Freedom`s bliss, realize,
There is the final refuge for souls illumed.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.