Sunday, July 26, 2015

thirumanthiram upadesam 29

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.

நான் எப்பொழுதும் உடலால் பணிவது எனக்கு ஞானாசிரியராகிய நந்தி பெருமானது இரண்டு திருவடிகளையே. மனத்தால் நினைப்பது அவரது அருட்டிருவுருவத்தையே. வாயாற் சொல்வது அவரது திருப்பெயரையே. என் அறிவினுள் நிலைத்து நிற்பது அவரது பொன்மொழியே.

Fill Thy Thoughts With Nandi

All I see is Nandi`s Holy feet twain,
All I think is Nandi`s Holy Form divine,
All I chant is Nandi`s Name, I trow,
In all my thoughts Nandi`s golden Words and wise.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.