Sunday, November 3, 2019

தேடி அடைக திருவருளை

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்

பாடல் எண் : 10
கூடவல் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார் நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் வைத்த பரிசறிந்து
ஆடவல் லார் அவர் பேறெது ஆமே .

சிலர் பெரியோரைக் குரவராக அடுத்து உண்மையைக் கேட்டுணர்ந்தாராயினும் அவர் தங்கட்கு ஒருதலைப் பட உணர்த்திய குறிக்கோளை அங்ஙனமே உணர்ந்து அடைய மாட்டார். `அடைய வேண்டும்` என நினைக்கவும் மாட்டார். குரவர் தம்மை மலம் கழுவித் தூயராகச் செய்த செயலின் அருமையை அறிந்து, அவரைப் புகழ்ந்து பாடவும் மாட்டார். ஆயினும் பிறர் தம்மை மதிக்கும்வண்ணம் இனிமை உண்டாகப் பேசுவர். அப்பேச்சுக்கு ஏற்றவாறு நடிக்கவும் வல்லவராவர். அவர் அடையும் பயன்தான் எதுவோ!

They Dance and Waste Away Their Lives

They unite in Him not,
The Way Guru showed;
They seek Him not,
In aimless talk indulging;
They sing Him not,
His benevolent deeds realizing;
What will they get,
They who dance and waste away?



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.