Monday, January 15, 2018

ellam sivanyanam

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்

பாடல் எண் : 10
வைத்துணர்ந் தான்மனத் தோடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுணர்ந் தாற்கே நணுகலு மாமே  .

சிவபெருமானை மனம் ஒருங்கி உணர்ந்தவனே அப்பெருமானை மனத்தால் நினைத்தும், வாயால் வாழ்த்தியும் அவன் திருக்குறிப்போடு ஒத்து உணர்ந்தவன் ஆவான். அவனுக்கு உடற் கூறுகள் தம்மில் ஒவ்வாது நிற்ப, உடலாகிய தேரைத் தாங்குகின்ற உயிராகிய அச்சு உழன்று, அவ்வச்சிடத்து அத்தேரின் ஆழியை நிலைபெறுத்தும் ஊழாகிய கடையாணியும் கழன்றாலும் அவன் சிவபெருமானைத் தப்பாது அடைவான்.

Heart and tongue in unison met,
the Lord cognise,
Though in diverse shapes He be,
Him in unity find;
Then,
e`en though shaken in life like axle from pin,
Seek the Primal Lord in love and Him to yourself bind.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.