Tuesday, February 27, 2018

vallal

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை

பாடல் எண் : 5
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகஞ் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே  .

கள்ளினை உண்டு களிக்கும் அவைதிகராகிய வாம மார்க்கத்தவர் வேதாகமங்களின் கருத்துக்களை உணரமாட்டா மையின், `சுரௌதம்` எனப்படும் திவ்வியாகமங்களாகிய சிவாகமங் களில் சொல்லப்பட்ட `பதி, பசு, பாசம்` என்னும் மூன்று பொருள்கள் உண்மையை உணர்தலும், அவ்வுணர்வால் அவற்றுள் மேலான வனாகிய பதியின் அருளைப் பெற விழைதலும், அவ்விழைவால் சரியை கிரியா யோகங்களாகிய இறப்பில் தவத்தில் நின்று அதன் பயனாகத் தெளிந்த உண்மை ஞானமாகிய சிவஞானத்தைப் பெறு தலும், அச்சிவஞானத் தெளிவினால் சிவனோடு ஏகமாகிய இறைபணி நின்று இன்புறுதலும் இலராவர்.

They see not the Inner Truth,
know not the Pasu-pasa,
They dwell not in the bounteous Lord`s Divine Grace;
In the clear light of Wisdom,
Sivayoga they seek not,
They,
who soak in liquors,
Truth never can appraise.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.