Tuesday, February 27, 2018

Sivananda then

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை

பாடல் எண் : 1
கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே

பசுக்கள், அரிசி கழுவிய நீரைப் பெற்று உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லா; அக் கழு நீர்க்கே விடாய்த்துக்கொண்டு உடல் மெலியும். அத்தன்மைய வாய பசுக்கள் தம் இயல்பின் நீங்கினவாம். அதுபோல, கள்ளினைச் சுவையும், வலிமையும் நிறைந்த பருகுபொருளாக (பானமாக) நினைத்துக் கள்ளுண்பவர் மக்கள் இயல்பின் நீங்கினோராவர். மற்று, வளமையுடைய பருகு பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே.

The cow fed on broth of rice wanders not from tank to tank The cow denied its drink of broth grows weak and lank Who swill the toddy neat,
from Righteouseness go astray Truest drink is Sivananda,
the Bliss Supreme,
far and away.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.