Wednesday, May 30, 2018

elumbum kabaalamum

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 7. எலும்பும் கபாலமும்

பாடல் எண் : 1
எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே  .

இறந்தாரது எலும்புகள் பலவற்றையும், தலைகள் பலவற்றையும் தாங்கி நிற்பவனாகிய சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற வெற்றிப்பாடு, அவன் தேவர் பலர்க்கும் முதல்வ னாதலை விளக்கும். அதுவன்றியும், அவன் அவற்றைத் தாங்கா தொழிவனாயின், அவை உலகில் நிலைபெறாது அழிந்தொழியும்.

He is the Lord of all Celestial Beings,
Who wear bejewelled crowns of dazzling beauty;
But the Lord did bedeck Himself in Skull and Bones
How is it?
If He bears not skull and bones.
Dust unto dust will theirs be.

Sunday, April 29, 2018

yaarukum eliyavan Esan

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்

பாடல் எண் : 2
திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே  .

முப்புரத்தை எரித்த முதல்வனாகிய சிவபெருமான் உமையம்மை போன்றார்க்கன்றி நம்மனோர்க்குக் கிடைத்தற்கரியன்` என்று தளர்ச்சி எய்த வேண்டா. அன்புடையார் யாவராயினும் அவர்க்கு அவன் எளியனே. அன்புடையார் பால் அருளுடையவ னாய் நின்று அவரவர்க்குத் தக்க வகையில் அவன் அருள் செய்வான்.

Mighty is the Lord
The Flying Fortess He destroyed.
Thus despair not
That He is your reach beyond;
Sure is the Lord to seekers true
In them He abideth,
Grace abounding.

Sri Chakram

இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு

பாடல் எண் : 4
எங்கும் கலந்தும்என் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே

எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்பினும், என் உள்ளத்தில் விளங்கி நிற்கின்றவனும், ஆறங்கம் அருமறைகளை அருளிச்செய்த முதல்வனும் ஆகிய சிவபெருமானிடம், மிக்க சினத்தை உடைய `சலந்தரன்` என்னும் அசுரன் போர் செய்யச் சென்றபொழுது, அப்பெருமான் அவனது வரத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்பத் தமது காற்பெருவிரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறி அதனை அவனாலே எடுப்பித்து அதன்வழி அவன் தன்னாலே தான் அழியச் செய்தான்.

The Lord pervades all,
My heart too He fills with joy;
He spoke the Vedas and scriptures all;
Him—the haughty Jalandhara challenged in duel
And the Lord with his toe marked a circle
And into it He saw the monster`s final end.

Thirukurukkai

இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு

பாடல் எண் : 8
இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்திய லிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே

சிவபெருமான் திருக்குறுக்கை வீரட்டத்தில் எழுந் தருளியுள்ள நிலை, தன்வழி நின்ற மனத்தை நம் வழிப் பொருந்துமாறு நிறுத்திப்பின் மகளிரோடு மெய்யுறுதலை அறவே விடுத்து, எத்தகை யோர்க்கும் காமத்தை விளைத்தலில் வல்ல காமவேளது குறும்பை அழித்து, அந்நிலைக்கண் நாம் அசையா திருக்கத்தக்க அரிய தவயோக நிலையேயாம்.

The Lord was seated in Yoga
His thoughts stilled in meditation deep;
Lo!
there came Kama
To tempt the Lord with shafts of love.
But the Love-god`s wiles,
the Lord foiled in Yoga Way;
This He did at Korukkai,
the shrine divine.

kaala kaalan

இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு

பாடல் எண் : 7
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே

சிவபெருமான் நிலவுலகில் உள்ள திருக்கடவூரில் காலால் காலனை உதைத்துத் தள்ளி, ஒர் யோகி போல் இருத்தல் வியப்பைத் தருவது.

The Kundalini Fire coiled in Muladhara
Upward He coursed it to Hollow on top;
That Fiery Yoga Way He scorched the God of Death
That was at Kadavoor,
the holy shrine here below.

gajasamhaaram

இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு

பாடல் எண் : 6
முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரிஅர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயி னுள்ளெழுந் தன்று கொலையே 

முனிவர் சிலர் செய்த வேள்வியுள் எழுந்த யானை உருவினனாகிய கயாசுரனால் தம் ஆற்றலையே பெரிதாகக் கருதி யிருந்த தேவர் பலரும் அன்று அங்குச் சென்று கொலையுண் டாரேயாகச் சிவபெருமான் ஒருவனே அவனை அழித்து அவனது தோலைப் போர்வையாகக் கொண்டான் என்பதைக் கேட்டும் அப்பெருமானது பெருமையைச் சிலர் அறியாது, ஏனைத் தேவருள் அவனையும் ஒருவனாக வைத்து எண்ணுகின்றனர்.

They lit the Fires Three
The sacrificial blaze roared high;
And from inside it arose
An Elephant of Evil Power,
Whose hide the Lord peeled;
Why the Lord did it,
they know not;
Seeking to rival the Lord`s might
The Heaven`s beings performed a homa unholy
And all those who from that fire arose
The Lord smote for the very fire to consume.

anavam karmam mayai

இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு

பாடல் எண் : 5
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே  .

சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாற்றைப் புராணங்கள் கூறக் கேட்கின்றுழி, அறிவிலாதார் அவ் வரலாற்றை மட்டுமே கேட்டு, அவ்வளவில் சிவபெருமானைப் புகழ்ந்தொழி கின்றனர். ஆயினும், அவ்வரலாற்றால் அறியத் தக்க உண்மையை அறிகின்றவர் எத்துணையர்! மிகச் சிலரே. அதனால், `இரும்பு, வெள்ளி, பொன்` என்பவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் முறையே `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும்மலக் கட்டினைக் குறிப்பனவாக, `சிவபெருமான் அக்கோட்டைகளை எரித்துச் சாம்பலாக் கினான்` என்பது, `அம்மும்மலங்களின் வலியை அழித்துக் கட்டறுத் தருளுவன்` என்னும் உண்மையையே சிறப்பாக உணர்த்தி நிற்கும்.

The Primal Lord,
Who on His matted crimson locks
Wears Ganga`s water sacred,
He destroyed the Cities Three
—Thus say the ignorant;
The Three Cities are the Triple Impurities
It is them He burnt
Who Knows this truth thereof?