Tuesday, November 27, 2012

Lord of Siva Loka

Thirumurai 8.30
திருவாசகம்-திருக்கழுக்குன்றப் பதிகம்

1. பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
    மான்உன் நாமங்கள் பேசுவார்க்
கிணக்கி லாததோர் இன்ப மேவருந்
    துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
    யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
    காட்டி னாய்கழுக் குன்றிலே.

2. பிட்டு நேர்பட மண்சு மந்த
    பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத
    சழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
    நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து
    காட்டி னாய்க்கழுக் குன்றிலே.

3. மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி
    மலங்கெ டுத்த பெருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி
    மேல்வி ளைவ தறிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவ டிகள்
    இரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காமலே வந்து
    காட்டி னாய்கழுக் குன்றிலே.

4. பூணொ ணாததொ ரன்பு பூண்டு
    பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி
    நடுக்கட லுள் அழுந்தி நான்
பேணொ ணாதபெ ருந்துறைப்பெருந்
    தோணி பற்றி யுகைத்தலுங்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
    காட்டி னாய்க்கழுக் குன்றிலே.

5. கோல மேனிவ ராக மேகுண
    மாம்பெ ருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்தி லாதஎன்
    சிந்தை வைத்த சிகாமணி
ஞால மேகரி யாக நான்உனை
    நச்சி நச்சிட வந்திடுங்
கால மேஉனை ஓதநீ வந்து
    காட்டி னாய்கழுக் குன்றிலே.

6. பேதம் இல்லதொர் கற்ப ளித்த
    பெருந்து றைப்பெரு வெள்ளமே
ஏத மேபல பேச நீஎனை
    ஏதி லார்முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமை யற்ற
    தனிச்ச ரண்சர ணாமெனக்
காத லால்உனை ஓத நீவந்து
    காட்டி னாய்கழுக் குன்றிலே.

7.இயக்கி மார்அறு பத்து நால்வரை
    எண்குணம் செய்த ஈசனே
மயக்க மாயதோர் மும்ம லப்பழ
    வல்வி னைக்குள் அழுந்தவுந்
துயக்க றுத்தெனை ஆண்டு கொண்டுநின்
    தூய்ம லர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்மு னேவந்து
    காட்டினாய் கழுக் குன்றிலே.

O God of Perunturai who knows no prejudice !
Unto them That hail Your names,
comes nought but peerless Joy,
grief having been extirpated.
O my Lord !
When I attained iruvinai-oppu that prevents The germination of the well-nigh indestructible seed,
You came and revealed to me,
Your form – Infinitely divine and beautiful -,
at Kazhukkunram.

O mad One of Perunthurai who carried earth receiving Pittu as wages!
I,
a wrangler,
that conforms not To Your law,
would not attain You.
O salvific One !
O Lord Of Siva-loka !
I,
the fiercely troublous one,
am worse Than a little cur.
Yet,
to redeem and rule me You came and revealed Yourself at Kazhukkunru.

I was befuddled;
I swerved away from the Lord of Perunthurai Who annulling my malas caused the flow of my tears to cease.
Alas,
I – the Karma-ridden -,
do not know what will betide Me in future.
Vouchsafing no place for Your radiant And salvific feet,
in me,
I stood nonplussed.
Annulling My bewilderment You revealed Yourself to me at Kazhukkunru.

Poised in such love – verily impossible to come by -,
Your devotees hail You daily.
At this,
I felt Ashamed at which Shame itself felt ashamed,
And I lay immersed in the mid-sea of misery.
Then I caught hold of the great float – Perunthurai Hard to obtain -.
and plied it.
Lo,
You came to me And revealed Your divine and beauteous form – Hard to envision -,
at Kazhukkunru.

O One who came in the comely form of the Sow to feed The piglets !
O Virtuous Nimbus of Perunturai !
O Crest-jewel adorning my Chinta who am Unaware of aught of virtue !
As I longed For You,
time grew opportune for Your loving Advent,
and as I hailed You,
You deigned To visit me,
even as the world witnessed it,
And revealed to me Yourself at Kazhukkunru.

O Great Flood of Bliss at Perunthurai that blessed Me with ever-constant Gnosis !
What did You do That strangers should speak ill of me?
To hail You,
In love,
You conferred on me endless,
blameless And peerless Refuge – Your feet -,
at Kazhukkunru Whither You came and revealed Yourself to me.

O Lord-God who made the sixty four Yakshinis attain The eight gunas !
As I lay immersed in the sea Of cruel Karma knit to the triple hoary and puissant malas that cause Bewilderment,
You did away with my weariness,
Redeemed and ruled me.
You who made me feel Befuddled in the presence of Your servitors,
came To Kazhukkunru,
revealed Yourself to me and blessed Me with Your flower-feet pure,
in their very presence.

There's no God like the Great Lord Siva


Muthal Tanthiram 1. Sivaparathuvam

1. சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

2. அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே. 

3. முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே. 

4. தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 

5. பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

6. அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.

7. கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

8. மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

9.அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.

10. கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 

Siva Is Nonpareil

Search where ye will, there`s no God like Siva,
None here below to equal Him in glory;
Lotus-like, He, of gleaming matted locks,
Fiery in splendour, beyond the worlds, apart.

Siva Is Omni-Competent

Without Him, there be Celestials none,
Without Him, penance is not,
Without Him, naught the Three accomplish,
Without Him, I know not how to enter the City`s Gate.

Siva Is Divine Father

Primal First is He, older than the Co-eval Three
But the Lord is He peerless, unequalled;
Call Him ``Father, `` and Father He to thee
Inside you He flames in the Lotus of Golden Hue.

Siva  Is Kinder Than Mother

Hotter is He than fire, cooler than water;
And yet none knows of His Grace abounding;
Far away, yet very close to the good,
Kinder than the mother is He, of the flowing matted locks.

All Worship Him

Gold- bewrought, His matted locks fall back and gleam
Nandi, His name,
My Lord is He, ever by me worshipt;
But none there be whom He worships.

Effort And Fruit

Near and far I look; but around the Being First,
No other God, I see, mightier than He;
Himself the effort, and Himself, too, effort`s end;
Himself the rains, Himself the clouds rain-laden,
The Nandi- named.

Beyond Comprehension

Humans and celestials go after gods who pass away
They do not realize that He of the fore-head eye is the Supreme,
One-pointed in His concern for His devotees.

Immeasurable

Mal who spanned the earth and Brahma the Louts-seated one,
And others of the gods fathomed Him not;
There be none to measure Him that measured the Heav`ns 
Transcending He stands, bestowing everything with a glance.

Baffling Quest Of Brahma And Vishnu

Ayan and Mal, His Head and Foot toiling sought,
Baffled in their quest, again on earth they met;
``I saw not the Foot,`` Achutha plained
``The Head I saw,`` Ayan falsely claimed.

Transcends All

Transcended He Brahma on the lotus-seat,
Transcended Mayan, the ocean-hued,
Transcended He, Isan, who transcends all,
Transceded He space infinite, witnessing all.